Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 24 November 2016

செய்தி    : ஆர்.தசதரன் 

நவ           : 22.11.2016

புக்கிட் மெர்தாஜம்

போலீஸ் காரை மோதி ஆடவன் தப்பி ஓட்டம்




BUKIT MERTAJAM: A car chase late Tuesday resulted in three policemen getting injured and a suspect on the run.
The male suspect, in his 30s, was stopped by police during a routine check at about 10pm in Jalan Juru here but he sped off.
The policemen gave chase until the suspect's car came to a halt at the end of a road.
The policemen ordered the suspect to come out of the car, but he instead reversed his car which hit the policemen.
One of the policemen managed to open fire at the car but the bullet missed the tyre.
Police later recovered the suspect's car abandoned at a factory nearby but without the suspect.
Central Seberang Prai district police chief Asst Comm Nik Ros Azhan said several items were recovered from the suspect's car. Investigations are being conducted for attempted murder.
It is believed that the suspect is from Selangor and has past criminal records.


Wednesday 5 October 2016

செய்தி  : ஆர்.தசரதன் 

அக்       : 01.10.2016

செபெராங் ஜெயா 



கிதா தொண்டூழிய அமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிலரங்கம் 


குளோபல் இண்டர்கிரேடட் திரான்ஸ் செண்டென்டல் ( GITA ) சங்கதின் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் அண்மையில் செபெராங் ஜெயா கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்புடன் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளை சேந்த 150 மாணவர்கள் கலந்துக்க கொண்டனர்.எதிர்வரும் 2025  ஆண்டுக்குள் சிறந்த  தலைமைத்துவம் கொண்ட தலைவர்களை உருவாக்கும் முயற்ச்சியில்  தொடக்க பயிற்சியின் அங்கமாக இந்த குழந்தைகளுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த கிதா  அமைப்பின் ஏற்பாட்டுக்கு குழு தலைவர் மதுசூதனன் தாஸ் சொன்னார்.

இந்த பயில் அரங்கில் பகவத் கிதை சார்ந்த கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது.இந்த போட்டியில் சிறந்த போட்டியாளராக பிறை தமிழ்ப்பள்ளியை சேந்த தனசீலன் ரவிச்சந்திரன் சிறந்த மாணவனாக தேர்வு செய்யப்பட்டதுடன்,சிறந்த மாணவியாக ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளியை சேந்த தர்ஷினி பூபாலன் தேர்வு செய்யப்பட்டார்.இதனிடையே நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளியை சேந்த ஜனனி முதல் நிலையிலும்,இரண்டாம் நிலையில் பிறை தமிழ்ப்பள்ளியை சேந்த எம்.தனேஷ் வெற்றி பெற்றதுடன்,மூன்றாம் நிலையில் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியை சேந்த ஸ்ரீ ராம் அவர்கள் வெற்றி பெற்றார்.


தலைமைத்துவ பயிலரங்கில் கலந்துக்கொண்ட மாணவர்களின் ஒரு பகுதி

பரிசு பெற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர்.

முதல் பரிசு வென்ற ஜனனி,இரண்டாம் பரிசு வென்ற எம்.தனேஷ்  மற்றும் மூன்றாம் பரிசு வென்ற ஸ்ரீ ராம்







Tuesday 26 April 2016

இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்


தமிழில் அணி இலக்கணம் என்பது செய்யுளின் சொல்லழகையும் பொருளழகையும் மேம்பட வைக்கும் ஒரு உத்தி.  வேற்றுப் பொருள் வைப்பணி, இல்பொருள் உவமையணி என சிறு வயதில் தமிழ் வாத்தியார் பிடறியில் அடித்து கற்பித்தது மனதில் இன்றளவும் ஆழமாகப் பதிந்து கிடக்கிறது. வஞ்சப் புகழ்ச்சியணி மிகவும் பிரபலமாக இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தற்குறிப்பேற்ற அணி. இது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றி கூறும் உத்தி.கம்ப இராமாயணத்தில் ஒரு இடம். உனக்கு ஆபத்து வந்துவிட்டது என கோள் மூட்ட கூனி புறப்பட, கைகேயி சாதாரனமான ஆண் மகனைப் பெற்ற யாருமே கவலையின்றி வாழ்கையில், இவ்வுலகிற்கே வேதம் போன்ற ராமனை ஈன்ற எனக்கு ஏது துன்பம்? என எள்ளி நகையாடுவாள்.


பராவரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவருந் துயரைவிட்டு, உறுதி காண்பரால்;
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயத்த எற்கு இடர் உண்டோ ?
சாதரணமான ஆண் மகனைப் பெற்ற எந்த பெற்றோரும் கவலையின்றி வாழ்வர் என்ற அன்றைய காலகட்டத்தின் இயல்பான ஒரு நியதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, “நான் பெறாவிடினும் இராமன் என் மகனே!” என பூரிக்கும் அளவிற்கு கைகேயி இராமனிடம் அன்பு கொண்டிருந்தாள் என்கின்ற தனது குறிப்பை கம்பர் மிக அழகாக சொல்லியிருப்பார்.
இதே போல் சிலப்பதிகாரத்திலும் ஒரு காட்சி:போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடியவாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்டகாற்றிலே பாண்டியனின் மீன் கொடி அசையும் ஒரு இயல்பான நிகழ்வை, அது கோவலனையும் கண்ணகியையும் மதுரையினுள் வந்தால் ‘உமக்கு தீங்கு நேரிடும். ஆகையால் வராதீர்’ என எச்சரிப்பதாக இளங்கோ அடிகள் எழுதியிருப்பார்.



கவிஞர்களுக்கு ஒரு செய்யுளின் கருத்தை மெருகூட்ட இதைப்போல் பல அணிகள் உண்டென்றால் ஒரு இசையமைப்பாளனுக்கு என்ன ஆயுதம் இருக்கிறது? திரைக்கதையைப் பொருத்து ஒரு பாடலில் எவ்வளவோ இயல்பான அதே சமயத்தில் நுணுக்கமான நிகழ்வுகள் சாத்தியம். பல்லவியிலோ அல்லது சரணத்திலோ இவை நிகழ்ந்தால் அதைப் பாடல் வரிகளைக் கொண்டு சொல்லி விடலாம். ஆனால் தொடக்க இசையின் போதும் இடைஇசையின் போதும் வரும் நிகழ்வுகளைப் பூடகமாகவோ நேரடியாகவோ சொல்வது எப்படி? ஒரு பாடலை நாம் கண் மூடி கேட்டால் காட்சியமைப்புகளை இயல்பாக நிகழும் விஷயங்களாகக் கொண்டு வருதல் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இது ஒரு இயக்குனரின் மற்றும் இசையமைப்பாளரின் அடிப்படைத் திறனை பொருத்தது மட்டுமல்ல, இவ்விரு படைப்பாளிகளின் இடையேயான கூட்டுறவையும் நிர்ணயிக்கும் ஒரு அளவு கோல்.


ஒரு உதாரணமாகத் தமிழ் சினிமாவுக்குள் காலைப்பனியில் ஓட்டப்பயிற்ச்சி செய்யும் இயல்பான நிகழ்வில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் அரும்பும் உன்னதமான சூழலும் உண்டு. பெண் பார்க்கும் படலித்தின் போது வெற்றிலை இடிக்கும் பெரிசுகள் கொண்ட சிக்கலான சூழலும் உண்டு. இதில் முதல் சூழலுக்கு காலடி ஓசையை மட்டுமே தாளமாகப் பயன்படுத்துவதும் இரண்டாம் சூழலுக்கு வெற்றிலை உரலுக்கும் மிருதங்கத்திற்கும் நடுவில் ஒரு தனி ஆவர்த்தனத்தைப் புகுத்துவதும் இசையமைப்பாளரின் திறமை.
இவை அனைத்தையும் விட, திரைப்பாடல்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தபடும் ஒரு சுவாரஸ்யமான சூழல், ரயிலை மையமாக வைத்து அமைக்கப்படும் பாடல்கள். பச்சை விளக்கின் “கேள்வி பிறந்தது அன்று” -பாடலிலிருந்து, ஹிந்தியின் ‘மேரே ஸப்னோன்கி ராணி’ தொடர்ந்து இன்றைய ‘சய்யா சய்யா’ வரை இரயிலில் படம் பிடித்த பாடல்கள் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்துள்ளன. ஆனால் ரயிலைச் சார்ந்த பாடல்கள் என்றாலே பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் எந்த பரிசோதனைகளிலும் ஈடுபடாமல் அந்தச் சூழலைத் தாள அமைப்பை மட்டுமே கொண்டு உணர்த்துகிறார்கள்.
Ooty train
இந்த வகையில் இளையராஜா சற்று மாறுபட்ட இசை அமைப்பாளராகவே இருக்கிறார். ரயில் என்றால் அது நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட சத்தத்தை மட்டுமே கொண்டு அமைய வேண்டும் என்ற எழுதப்படாத விதியைத் தகர்த்தெறிந்து வயலின், கிடார், ஷெனாய் எனப் பல்வேறு வர்ணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவை மட்டுமல்லாது இவர் இசை அமைத்த பெரும்பாலான ரயில் பாடல்களின் கோணங்களும் பல வித்தியாசமான சூழல்களில் அமைந்தவை. [இரயில் பெட்டியில் அமைந்த இவரின் பாடல்களில் நாயகனுக்குக் காதலும் வரும்; ஞானமும் வரும்; குசும்பும் வரும்; குமுறலும் வரும்]. காட்சியமைப்பைப் பொருத்தவரை இரயில் பெட்டி ஒன்றே பின்னணியாக இருப்பினும், பல்வேறு உள்ளார்ந்த உணர்வுக்கோர்வைகளை இசையின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் இளையராஜாவிற்கு இருந்திருக்கிறது.


ரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே உருவகித்து இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்குப் படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இதில் கதாநாயகன் ஒரு ரயில்வே தொழிலாளி. நாயகி ஒரு பரத நாட்டிய நர்த்தகி. ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு இவர்கள் இடையே அரும்பும் காதலை, ஒரு ரயில் எப்படி மெதுவாகத் தொடங்கி போகப்போக வேகம் பிடிக்குமோ அதே போல் இசையையும் அமைத்திருப்பார். அவர்களின் காதல் தொடக்க நிலையில் இருக்கும்போது வரும் பின்னணி இசை இது. பின்னர் அது சூடு பிடித்ததும் வரும் இசை இது. அதன் பின் அது கனிந்து் காதலியின் பரத நாட்டியப் பின்னணிக்கேற்ப மாறுபட்டு கர்நாடக சங்கீதமாய் வரும் இசை இது.


இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. சூழலின் துணை கொண்டு மறைமுகமாக இயக்குனர் சொல்ல வந்த கருத்தை அசகாயமாக இசை வடிவில் வெளிப்படுத்தி காட்சிக்கு உறுதுணையாய் நின்றது. தவிர ஒரே மெட்டை மேற்கத்திய Swing Waltz இசைக்கும் தென்னிந்திய கர்நாடக இசைக்கும் பாலமாகப் பயன்படுத்தி தன் இசைப் புலமையையும் தெளிவு படுத்தியிருப்பது.இவ்வாறான சவால்களை தன் தொழில்துறை

வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இளையராஜா ilayarajaஇலகுவாக சமாளித்திருக்கிறார். “கிழக்கே போகும் ரயிலில்” வரும் ‘பூவரசம் பூ பூத்தாச்சு‘ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. மேலோட்டமாக அனைவரும் அறியும்படி சாதாரணமான ரயிலின் தாளம் இப்பாடலில் காணப்பட்டாலும், சரணத்தில் அந்தத் தாளத்தோடு ஒன்றிப் பிறந்ததை போல டேப்பு வாத்தியம் என்கின்ற ஒரு கிராமிய தப்பட்டையை சேர்த்து, இடை இசைகளில் ஒற்றை வயலின், சேக்சோபோன், மாண்டலின், சைலோபோன் போன்ற மேற்கத்திய இசை கருவிகளைப் பேசவிட்டு, ஜானகியின் அபார பாட்டுத்திறனை ஜொலிக்க வைத்து, இவை அனைத்திற்கும் பின்னால் பாடலின் மெட்டை தந்திரமாக சுத்த தன்யாஸி-யில் மறைத்து அமைத்திருப்பார். லண்டனிலிருந்து இருக்குமதியாகி சுத்தமாக நடிக்க வராத கிராமியப் பெண்ணாக ராதிகா வலம் வந்த போதும், இந்த பாடல் அனைவரையும் சென்றடைந்து வெற்றி கண்டதென்றால் அதற்கு இளையராஜா அமைத்த இசைக் கோலாகாலம் ஒரு முக்கியமான காரணம்.
அதே போல் ஆரம்பத்தில் தான் இசையமைத்த “மஞ்சள் நிலாவுக்கு” என்னும் பாடலில் , ரயிலின் வேகத்திற்கு ஈடாக ட்ரம்ஸ்-இன் சிம்பலையும் ரிதம் கிடாரையும் ஓட விடுவது அனைவரும் கையாளும் முறை என்பதால், அதற்கு மேல் சுசீலா போன்ற ஒரு மூத்த பாடகியை ரயிலின் ஒலிப்பானைப் போல பாட வைத்தது ஒரு புது வகை முயற்சியே.



(மென்பொருள் துணை கொண்டு மாயஜாலம் காட்ட முடியாத காலகட்டத்தில் வந்த இப்பாடலுக்கு மாங்கு மாங்கு என ரிதம் கிடார் வாசித்த அந்த இசை கலைஞருக்கு எவ்வளவு மூச்சு இறைத்திருக்குமோ!)
அதன் பின் வந்த மூன்றாம் பிறையில், இளையராஜா ஒட்டு மொத்தமாக அனைத்து படைப்பாளிகளின் வரையறையையும் உயர்த்தினார். பூங்காற்று புதிதானது என்ற பாடலின் இரண்டாவது இடை இசை ஒரு அதீத இசைப் பரிசோதனையாகும். இரண்டு வயலின் குழு மற்றும் ஒரு செல்லோவும் + டபுள் பாஸ் அடங்கிய கீழ் ஸ்தாயியில் வாசிக்கும் ஒரு மூன்றாவது குழுவையும் கொண்ட ஒரு தந்தி வாத்திய குழுமத்தை (Strings Emsemble) மட்டுமே வைத்து, நம்மை அறியாமலே பின்னால் வரும் ஒரு ரயிலின் விளையாடுத்தனமான திகிலுணர்வை உண்டு செய்தது அவரின் நுணுக்கமான இசை அறிவைப் பறை சாற்றுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் குங்குமச் சிமிழ் (கூட்ஸ் வண்டியிலே), கடலோரக் கவிதைகள் (போகுதே போகுதே) போன்ற பாடல்களிலும் ரயில் இசையைப் பல்வேறு விதங்களில் கொடுத்து மாய்ந்திருக்கிறார். இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் மட்டுமே வரும் பல அபத்தமான சூழ்நிலைகளுக்கு இசை அமைக்கும் நிர்பந்தம் வேறு. “மெட்டி” என்ற திரைப்படத்தில் “ஓடும் ரயிலில் வெளி நாட்டவர் மந்திரம் சொல்லித்தான் எனக்கு திருமணம்” என்கின்ற மடத்தனமான கதாநாயகிக்கும் சரி, வீட்டின் அருகில் ஓடும் ரயிலின் காரணமாக புரண்டு வந்து கட்டிக்கொள்ளும் காதல் ஜோடிகளைக் கொண்ட முட்டாள்தனமான காட்சிகளுக்கும் சரி, இளையராஜா தரம் குறையாமல் தந்த பாடல்கள் கணக்கிலடங்காதவை.
வயலின் வாசிப்பில் double stop என்று அழைக்கப்படும் இரண்டு தந்திகளில் ஒரே நேரத்தில் வாசிக்கும் உத்தியை ரயிலுக்காக இளையராஜா பலமுறை உபயோகித்திருக்கிறார். குறிப்பாக தளபதி படத்தில் வரும் “சின்னத்தாயவள்” என்ற பாடலின் இடை இசையில் தண்டவாளத்திற்கு ஒரு தந்தி வீதம் போல் அந்த “டபுள் ஸ்டாப்” வயலின் இரண்டு தண்டவாளங்களையும் தொடர்ந்து கொண்டே வந்து சாரங்கியில் முடிந்து உயிரை உருக்கும். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சி அது.
ரயில் ஊர்கையில் உருவாகும் சத்தம் என்னவோ எனக்கு ஒரு ஒழுங்கான தாளமாகவே தோன்றுகிறது. சிறு வயதில் ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் உட்கார்ந்து அந்த சத்தத்தை சந்தமாகப் பிரித்து அது என்ன தாளம் என ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பொழுதுபோக்கு. அதிகமாக அந்த சந்தம் “தகிட தகிட தகிட தகிட” என திச்ர ஏக தாளத்திலோ அல்லது “தக தகிட தக தகிட” என கண்ட சாப்பிலோ அமையும். சில சமயங்களில் அந்த ரயிலின் தடம் பாலத்திலோ அல்லது சல்லி கல் குறைந்தோ அல்லது அதிகமாகவோ இருக்கும் தளத்திற்கு மாறும்போது அதன் சத்தமும் கூடும். அல்லது குறையும். அப்போது அதன் தாளமும் மாறிவிடும். மறுபடி புது தாளத்தின் சமத்தைக் கண்டுபிடித்து தட்டி எண்ணும் போது ஏற்படும் பூரிப்பை சொற்களால் வர்ணிக்க முடியாது.
ஒரு ரயிலின் சத்தம் ஒரே நிலையில் இல்லாது மாறும் என்பதை இளையராஜாவின் “தாலாட்டு கேட்காத” என்ற பாடலை கேட்டால் உணரலாம்.
இதில் “பாட்டுக்கு நான் அடிமை” என தொடங்கும் வரியில் தாளம் சன்னமாக இழைந்து பின்னர் fullscreen-capture-862009-95950-amவேகம் பிடிக்கும் விதம் இயற்கையிலேயே ரயிலின் சத்தம் தேய்ந்து வளர்வதை போல் இருக்கும். பல்லவியின் வரிகளுக்கிடையில் வரும் புல்லாங்குழல், ரயிலின் ஒலிப்பானை போலவே இருக்கும். இந்த பாடலின் பல்லவி மற்றும் சரணம் முடியும் போது தாளத்தில் வைக்கும் தீர்மானங்களும் (fill-ins) ரயில் ஏதோ பாலத்தின் மீது போகும்போது பிறக்கும் சமம்மல்லாத ஒலி போல் இருக்கும். இடை இசையில் ரயிலின் ஒலிப்பானை போல் கேட்கும் pan flute – ட்டுக்கும் அந்த கேள்விக்கு மறுபடியும் “டபுள் ஸ்டாப்” உத்தியால் பதில் அளிக்கும் வயலினுக்கும் இடையில் ஒரு சிறிய call and response-ஐ அமைத்திருப்பார். அதற்குப் பின் கீரவாணியில் தொடரும் அந்த ஒற்றை வயலின் மனதைப் பிழிந்து விடுவது என்னமோ உண்மை. மேலும் இப்பாடலில் ரயிலின் தாளத்திற்கு ட்ரம்ஸ்-இன் சிம்பலை விட ஸ்நாரை (Snar) அதிகமாக பயன்படுத்தி இருப்பதும் ஒரு புதிய முயற்சியே. இப்படி அனைவரையும் போல் சாதரண ரயிலின் சத்தத்தை வைத்து மட்டும் ஒரு பாடலை எண்ணாமல் அது நகரும் போது நிகழும் பல நுணுக்கமான விஷயங்களையும் பிரதான இசை வடிவத்துடன் கோர்த்து கொடுத்தது வியக்கத்தக்கது.

முன்னமே கூறியதை போல், ரயிலின் “சிக்கு புக்கு” சத்தம் என்றால் ஒரு மொரொக்கோஸ் அல்லது ட்ரம்ஸ்-இன் சிம்பல் என்றும், அதன் ஒலிப்பான் என்றால் புல்லாங்குழல் என்றும் நிலவிய வரையறைகளை தகர்த்து, ஏனைய பிற இசைக்கருவிகளையும் இளையராஜா இந்த பின்னணிக்கு பயன் படுத்தி உள்ளார். “தீர்த்தகரையினிலே” என்ற படத்தில் வரும் “கொட்டி கிடக்குது” என்ற பாடலை நான் இதுவரை ஒளி ஊடகத்தில் பார்த்ததில்லை. அனால் இந்த பாடலின் தொடக்க இசையில் ஓட்ட பந்தயத்தில் அடித்து பிடித்து ஓடுவதை போல சீறிப்பாயும் அந்த இரட்டை வயலினை கேட்ட மாத்திரத்திலேயே, இது ரயில் சம்பந்தப்பட்ட பாடலாகத்தான் இருக்க வேண்டும் என எனக்குள் ஒரு உந்துதல். அந்த சந்தேகம் பாடலின் இரண்டாம் இடை இசையைக் கேட்ட உடன் நீங்கிவிட்டது. ஒரு பாஸ் கிடாரைக் கூட ரயிலின் தாளத்திற்கு சமமாக ஆர்பீஜியோ எனும் மேற்கத்திய பாணியில் உபயோகித்து அசர வைக்கிறார். அதே போல் “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி” என வரும் பாடலின் தொடக்க இசையில் ஒற்றை கிடாரை மட்டுமே பின்னணியில் ரயிலின் தாள ஓட்டம் போல் பாவித்து, ஷெனாய் மற்றும் வயலினின் துணை கொண்டு ஒரு நகரும் ரயிலை கண்முன் நிறுத்தி விடுகிறார்.

ஒரு தேர்ந்த கைவினைக் கலைஞர் களிமண்ணைத் தன் விருப்பத்துக்கேற்ப வளைத்து அழகான கலைப்படைப்பைத் தருவதைப் போல, எந்த ஒரு மெட்டையும் தான் விரும்பும் சூழலுக்கு மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர் இளையராஜா. “தேவதை போல் ஒரு” என அனைவரும் அறிந்த ஒரு சாதாரண பாடலை ரயிலின் சூழலுக்குத் தக்கவாறும் கதையில் வரும் மர்மத்தை முன்னரே எடுத்துரைக்கும் வர்ணத்திலும் மாற்றி அமைத்திருப்பார். பி.சி.ஸ்ரீராம் எனும் மற்றொரு திறமையான கலைஞரும், இளையராஜாவும் சேர்ந்து தீட்டும் இந்தக் காட்சி தமிழ் சினிமாவின் மிகச்சிறப்பான திரைவடிவங்களில் ஒன்று.

எப்போதும் ரயிலின் ஓசையை இசைக்கருவிகளால் மட்டுமே இளையராஜா வெளிப்படுத்துவதில்லை. ரயிலின் சுய சத்தத்தை அப்படியே இசையாக பாவித்தும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது உண்டு. “மௌன ராகம்” திரைப்படத்தின் உச்ச கட்டம். ரயிலிலே போகும் ரேவதியை, மோகன் துரத்தி பிடிக்கும் காட்சிகளில், ஒரு பிரளயத்தை உண்டு செய்வது போல் ஒரு வயலினும் அவருடன் தொடர்ந்து ஓடும். அந்த ரயிலை அவர் எட்டி பிடித்ததும், ரயில் பெட்டியின் ஒரு மூலையில் ரேவதியும் மறு மூலையில் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷத்தில் ஆசுவாசப்படும் அவ்வேளையில் அதுவரை அனைவரையும் நாற்காலியின் முனைக்குக் கொண்டு வந்திருந்த அந்த வயலின் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். ஒரு இரண்டு வினாடிகளுக்கு சுத்தமான ரயிலின் சத்தம் மட்டும் நாத மண்டலத்தை ஆக்கிரமிக்கும். பார்க்கும் ரசிகர்கள் யாவரும் அந்த இரு வினாடியில் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டு “ஹப்பா” என நிம்மதி அடைதலுக்கு அந்த மௌனம் காரணம். அந்த ரயிலின் சுய சத்தம் காரணம்.
தன் மதிய உணவு இடை வேளையின் போது கிடைத்த உபரி நேரத்தில் பொழுது போகாமல் இளையராஜா தனக்காக இசை அமைத்த “நத்திங் பட் விண்ட்” என்ற இசைத்தொகுப்பில் அதே பெயரைக்கொண்ட ஒரு இசைக்கோப்பை அமைத்திருப்பார். இதில் இந்த உலகம் தற்போதய அறிவியலின் வளர்ச்சி காரணமாக பிற்காலத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மனித இனமே அழிந்து போனாலும் காற்றும் இசையும் நிரந்தரமாக ஜீவிக்கும் என்ற ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைச் சொல்லிருப்பார். இதிலும் ரயிலின் சுய சத்தம் இசையோடு இசையாய் ஊடே வரும்.

அதே போல் மூன்றாம் பிறை படத்தின் உச்ச கட்டத்திலும், கமல் நடைமேடையை ஏறும்வரை நம்மை கட்டிப்போடும் பின்னணி இசை, அவர் ஸ்ரீதேவியைக் கண்டவுடன் சட்டென்று மௌனமாகி விடும். கமலின் சிறப்பான நடிப்பின் போது பின்னால் நிகழும் இயல்பான நிகழ்வுகளுக்கு இசை பொருந்தி இருக்காது. இதை ஒரு வைத்தியன் நம் நாடி துடிப்பைக் கண்டறிவது போல் யூகிக்கும் இளையராஜா, அந்த ரயில் நகரும் வரை இசையைத் தொடங்க மாட்டார். அந்த ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்து மறைந்து, அதன் சத்தம் தேயத் தேய, பெய்யும் லேசான மழையுடன் சேர்ந்து யேசுதாஸ் “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” என பின்னணியில் தொடங்குவார். அப்போது உங்கள் இதயம் கனக்கவில்லை எனில் எதற்கும் நீங்கள் Dr. செரியனிடம் ஒரு முறை காண்பித்து அது இருக்கிறதா இல்லையா என சரி பார்த்துக் கொள்ளுதல் நலம்.

இசை அமைப்பாளர்கள் தாங்கள் எப்போது இசைக்க வேண்டும், எப்போது மௌனிக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறியவில்லையெனில் அது இடம்பெறும் காட்சி பாழாவது நிச்சயம். இந்தக் கருத்தை தனது ரயில் சார்ந்த காட்சிகளையும் பாடல்களையும் வைத்து இளையராஜா இனி வரும் இசை சந்ததியருக்கு ஒரு பாடமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது. இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும். முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தீவிரமாக இயங்கிவரும் இளையராஜாவின் படைப்புலகம் பண்ணைப்புரம் ஸ்டேஷனில் கிளம்பி சீராகத் தன் தாளகதியில் சென்றபடியே இருக்கிறது. பயணிகளாகிய நாம்தான் வெகு அதிர்ஷ்டசாலிகள்.

Wednesday 2 March 2016

செய்தி : ஆர்.தசரதன்

மார்ச்    : 03.03.2016


ஜார்ஜ்டவுன்


பினாங்கு மலை பகுதிகளில் மேம்பாடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி

மாநில அரசு அறிவிக்க வேண்டும்






பினாங்கு தீத்தி கேராவாங் பகுதியில் உள்ள மலை ஒன்றில்,ஆக்கரமிப்பு  செய்து வரும் தரப்பினர் மீது,மாநில அரசாங்கமும்,பினாங்கு நகராண்மை கழகமும் பதில் அளிக்க வேண்டும் என்று பினாங்கு பசுமை தோழமை கழக தலைவர் எஸ்..முகம்மது இட்ரிஸ் கேள்வி எழுப்பினார்.இந்த மலைபகுதியில் உள்ள மரங்கள் வெட்டபட்டு மலையின்  இயற்கை அழகை சீர்குலைத்து வருவது யார் என்றும் அவர் கேள்வி கணைகளை தொடுத்தார்.

இது போன்ற மன்றொரு சம்பவம் மாநில அரசுக்கு சொந்தமான விடுதிக்கு முன் புறமுள்ள,பத்து பிரிங்கியில் உள்ள மலை ஒன்றில்,மரங்களை அளி க்கும் நடவடிக்கையில் இயந்திரங்கள் கொண்டு  வேலையில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருவதாக மேலும் அவர் மேற்கோள் காட்டி சொன்னார்.அப்பகுதில் எந்த வகையிளான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன என்பதற்கான எவ்வித அறிவிப்பு பலகையும் பொறுப் படாத நிலையில்,அப்பகுதில் உள்ள இயற்கை வளங்களை அழிந்து போவதுடன்,இயற்கை நிலை நீர் தடாகங்களினால் அந்த மலை பகுதில் மண் சரிவும் ஏற்படுவதுடன்,திடீர் வெள்ளம் மற்றும் கடல் நீர் தூய்மைக்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக  முகம்மது இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில  வனத்துறை அப்பகுதில் நடக்கும் மேம்பட்டு பணிகள் மாநில அரசாங்க அணைக்கு ஏற்ப நடக்கின்றதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும்,அப்படி இல்லை என்றால்,மாநில அரசாங்கமும் உள்ளூர் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரிவினரும் இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும்,சட்டத்துக்கு மீறிய செயலில் ஈடுபாடும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அந்த மேம்பாட்டு பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு மாநில  அரசாங்கம் மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வரும் இயற்கை வளங்கள் அழிப்பு  நடவடிக்கைளை உடனுக்குடன் தடுக்கும் நடைமுறையை மேன்படுத்தி,மாநில அரசாங்கம் இயற்கை வளங்களை குறிப்பிடப்பட்ட மலை பகுதிகளில் மேற்கொள்ளப் படுகிற நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும்  எஸ்..முகம்மது இட்ரிஸ் கேட்டுக்கொண்டார்.


பட விளக்கம்


தீத்தி கேராவாங் பகுதியில் உள்ள மழையின் தோற்றம்


 எஸ்..முகம்மது இட்ரிஸ்









Friday 26 February 2016

செய்தி : ஆர்.தசரதன்

பிப்         : 24.02.2016

தெலுக் பஹாங் /பினாங்கு



சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் தெப்ப திருவிழா

ஒளிவுட்டும் ஆலகில் தெப்பம் பவனி / 70 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்




பினாங்கு தெலுக் பஹாங்கில் அமைந்துள்ள சிங்க முக காளியம்மன் ஆலயத்தில் மாசி மகம் தெப்ப திருவிழா நேற்றைய முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.70 ஆயிரத்துக்கு மேற்பட்ட  உள்ளுள் மற்றும் வெளி மாநிலங்களிருந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டு இந்த ஆலயத்தில் விற்றிருக்கும் சிங்க முக காளியம்மனை தரிசம் செய்தனர்.மிதவை ஒன்றில் ஒளிவுட்டும் அழகிளான விளக்குகளில் அலங்கரிக்கபட்டு சிங்க முக காளியம்மனை ஒரு தேரை போல கடலில் மிதக்க விட்டு வளம் வருவது இந்த திருவிழாவின் தனிச் சிறப்பாகும்.சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலை மணி 7 அளவில் தயாரான தேர் கடலில் பயணம் செய்ய புறப்பட்டது.மங்கள வைத்தியம் முழங்க கடலில் பயனித்த தேரின் அழகை கண்டு பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.வான வேடிக்கைகள் விண்ணை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தி அலங்கரிக்கும் காட்சி கண் கொள்ள காட்சியாக அமைந்தது.


இந்த திருவிள்ளவின் மற்றொரு சிறப்பானது அம்சம் பல வடிவங்களில் செய்யபட்ட தெப்ப தீப ஒளியூட்டும் விளக்குகலை பொருத்தி,சிங்க முக அம்மனை வேண்டி தாங்கள் நினைக்கும் காரியம் கைகூட வேண்டும் என்று பிராத்தனை செயது கடலில் மிதக்க விடுகின்றனர்.தேரினை இரு படகுகளின் மூலம் இழுத்வாறு கடலின் ஒருபகுதிக்கு செலுத்துகின்றனர்,தேரில் இருந்த படி கட்சி தந்து இரவு மணி 9.30 அளவில் ஆலயம் வந்து அடைந்த அம்மனின் சிலையை ஆலயத்துக்குள் எடுத்து செல்லபட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீப ஆரதனையுடம்,பக்தர்களுக்கு பெரசாதம் வழங்கபட்டது.சிறப்பு பூஜைகளில் அதிகமானோர் கலந்து கொண்டு சாமி தரியானம் செய்ததுடன்,இந்த திருவிழாவை ஏற்பாட்டினை செய்த ஆலய நிர்வாகம் பக்தர்களின் வசதிக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து இந்த வருட திருவிழாவினை தொண்டுபழயர்களின் ஒத்துழைப்பில் திறம்பட நடத்தினர்.


பட விளக்கம்

1.அழங்கரிக்கபட்ட சிங்க முக காளியம்மன்

2.தேருடன் ஆலய நிர்வாகக் குழுவினர்

3.திறம்பட செவையற்றிய ஆலய தொண்டர் படை இளைஞர்கள்

4.தெப்பத்துடன் பக்ததை ஒருவர்

5.ஒளியூட்டும் தேர்












Thursday 25 February 2016

செய்தி : ஆர்.தசரதன்.

பிப்         : 14.02.2016

ஜார்ஜ்டவுன்



நாசிக் கண்டார் சாயிட் அம்மின் கொலை சம்பவம்
போலீசார் தேடுதால் நடவடிக்கை ஆரம்பம்



நாசிக் கண்டார் லைன் கிலியர் உரிமையாளர் சாயிட் அம்மின் கொலை சம்பவத்தில் கொலையாளியை தேடும் நடவடிக்கையை போலீசார் முடக்கியிருப்பதாக தெரிவிக்கபட்டது.கொலையுண்ட பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமெராவில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 20 வயது மதிக்க தக்க இரு இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடுதால் வேட்டைதனை ஆரம்பித்திருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இந்த கொலை சம்பத்தில் தகவல் சாதணங்களில் தவரான தகவலை வழங்கிவரும் தரப்பினர் தங்களின் நடவடிக்கையை நிறுத்திக் கோள்வதுடன்,எத்தகைய அனுமனமற்ற தகவல்கள் பரப்பி பொது மக்களை   குழப்ப வேண்டாம்  என்றும் அவர் சொன்னார்.

தகவல் சாதணங்களில் இதற்க்கு முன் வாக்கு வாதத்தில் ஈடு பட்ட சாலை போக்குவரத்து அதிகாரி கொலை சம்பவத்தில் ஈடுபட்டுளார் என்றும்,இன்னும் சிலர் சாயிட் அமின் நடத்திய உணவகத்தில் போட்ட போட்டி இருந்ததும் என்றும் என்னும் சிலர் அரசியல் நோக்கத்துக்காக அவர் கொள்ளப் பட்டர் என்றும் பல விடத்தில் வதந்திகளை பரப்பி வருவதாக மியோர் பாரிடலத்ராஷ்  கூறியதுடன் இவை அனைத்தும் உண்மையில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

சம்பவம் நடந்த இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராவில் 20 வயது மதிக்க  தக்க உள்ளூர் ஆடவர்கள் இருவரை போலீசார் அடையாளம் கண்டிருப்பதால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதால் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.



பட விளக்கம்


போலீஸ் துணை ஆணையர் மியோர் பாரிடலத்ராஷ்










Wednesday 10 February 2016

செய்தி : ஆர்.தசரதன்                செபெராங் ஜெயா 


மனோவியல்  நிபுணர் காதர் இப்ராஹிமை குறை கூருவதா ?
பினாங்கு  சமூக அமைப்புகளின்  தலைவர்கள் கண்டனம் 



மானித நேயம் சமூக முன்னேற்றம் தொலைந்து போன வாழ்வை மீட்டு எடுத்து  வாழ்வு நெறிமுறைகளை நாடு தழுவிய நிலையில் போதித்து வரும் மனோவியல் தத்துவ நிபுணர் டாக்டர் கத்தார் இப்ராஹிம் அவரை  சிறுமை படுத்தும் நிலையில் அண்மையில் சமூக  தளங்களிலும் பொறுப்பற்ற நபர்களை கண்டித்து பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டில் பல்லாயிரக்கணக்கான தன்முனைப்பு வகுப்புகள்,கருத்தரங்கம்,மனதளவில் பதிப்பு கொண்டோர்க்கு மனோவியல் ஆலோசனைகளை வழங்கி,இந்து பெருமக்களும் ஒன்றிணைத்து நல்ல மனிதர்களாக உருவாக்கி எண்ணற்ற  சாதனைகளை புரிந்தவர் அவர்.அவரை குறை சொல்லியும் சிறுமை படுத்தியும் குறை   சொல்பவர்கள் எந்த சாதித்துள்ளனர் என்று எண்ணி   பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

வாழ்கையில் எந்த மதத்தில்  நீ படைக்க பட்டடாயோ இறுதி   வரை அந்த மதத்தை சார்தந்து இருந்து சார்திருக்க வேண்டும் என்பதும், தமிழ் கடவுனான முருகனை வழிபாடும் மக்களும் தங்களின் மதம் சார்த்த நிலையிலேயே முன்னேற்றம்  அடைய  வேண்டும் என்று, உலக  தரத்தில் தத்துவங்களையும் போதித்து வரும் காதர் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்களுக்கு குறிப்பாக இது பெருமக்களின் நம்பிக்கை ஒளியை ஏற்று அவர்களின் வாழ்வில் மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதை மறந்து வியாக்கியானம் செய்வது ஞாயமில்லை என்றும் சம்பந்தபட்டவர்கள் அதி மேதாவிகளா? என்று காதர் இப்ராஹிம் அவர்களின் பயிற்சியில் கலந்து கொண்ட,இன்று உயந்த நிலையில் இருக்கும் அவர்கள், காதர் இப்ராஹிம் அவர்களை அவர்களை குறை சொல்லும் நபர்களுக்கு எதிராக தங்களின் கண்டன குரலை எழுப்பினர்.

கற்றுனர்ந்தர்வர்கள் தங்களின் வாழ்வியால் அனுபவங்களை,மற்றவர்களின் வாழ்கையின் முன்னேற்றத்துக்கு தன்னை ஒரு மெழுகுவர்த்தியாக எண்ணி,இந்நாட்டில் உள்ள தமிழ் சமூதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரும் பாடு  பட்டு வரும் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்பு,மனோவியல் நிபுணர் காதற் இபுராஹிம் குறை சொல்பவர்களுக்கு முன்,உங்களின் குறை என்ன என்பதை உணர்த்து செயல் பட வேண்டும் என்று பினாங்கு பொது அமைப்புகளின் தலைவர்களான எல்.முனியாண்டி,தி. மனோநீதி,ஆர்.இராஜேஸ்வரி,லக்டோர்.டாக்டர்எஸ்.இளையராஜா,ஆர்.சுமன்,கா.கலைவாணன்,
தி.காளிதாசன்,மா.முனியாண்டி மேலும் பல  அமைப்புகளின் தலைவர்கள் காதர் இபுராஹிம் அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டு,அன்னாரின் சேவை மக்களுக்கு தேவை என்று முழக்கமிட்டு இங்கு  நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூரினர்.


பட விளக்கம்

காதர் இப்ராகிம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தா பொது அமைப்புகளின் தலைவர்கள்
ஒரு பகுதி.







செய்தி : ஆர்.தசரதன் பிறை
                                                    


பிறை தொழில் பேட்டைப் பகுதியில் தீ விபத்து.




பிறை தொழில் பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் நேற்றைய   முன் தினம்   இரவு மணி 9.30க்கு தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.அதிஷ்ட வசமாக அந்த கிடங்கின் பாதுகாவலர் ஒருவர் தீயணைப்பு மீட்பு துறைக்கு கொடுத்த தகவலில் அப்பகுதியில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது தீ ஏற்பட்ட இந்த கிரங்கில் இரு சங்கர வாகனங்கள் பயன் படுத்தும் சக்கரங்கள் (ரீம் ) மற்றும் சில தொழிற்சாலை கழிவு பொருட்கள் வைக்கபட்டிருந்த  ஒரு கிடங்காகும்.

இந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தகவல் அறிந்த படர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை,சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து அரை மணி நேர போராட்டத்துக்கு  பிறகு தீயை மற்ற தொழிற்சாலைகளுக்கு பரவாமல் தடுத்ததாக.இந்த தீயணைப்பு விபத்தில் புட்டர்வோர்த் தீயணைப்பு மீட்பு துறை வீரர்களுடன் மற்றும் தன்னார்வு தீயணைப்பு பிரிவை சேர்த்த 34 பணியாளர்கள் தீயை அணைக்க உதவினர் என்று பட்டர்வொர்த் தீயணைப்பு மீட்பு துறை அதிகாரி இஸ்மாயில் நோர் செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த தீ ஏற்பட்ட காரணம் மற்றும் சேத மதிப்புகளை தீயணைப்பு மீட்பு துறை விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,இந்த தீ விபத்தில் எந்த நபரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவித்தார்.


பட விளக்கம்

தீயை அணைக்க முற்படும் தீயணைப்பு வீரர்கள்















செய்தி : ஆர்.தசரதன்    ஜார்ஜ்டவுன்



பட்டாசுகள் திறந்த வெளியில் விற்பதை தடுக்க வேண்டும்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்து


பெருநாள் காலங்களில் பட்டாசுகள் திறந்த வெளியில் விற்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இந்த திறந்த வெளி சந்தையில் பட்டாசுகளை விற்பனை செய்பவர்களின் மீது போதிய அமலாக்க பிரிவினரின் நடவடிக்கை குறைந்து உள்ளதே இதற்க்கு  காரணம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட சோதனையில் பயான் பாரு,ஆயிர் ஹித்தாம்,லிப் சீன்,சுங்கை டுவா,புலாவ் தீக்குஸ் மற்றும் கொம்தார் பகுதிகளில் திறந்த வெளியில் பட்டாசுகள் விற்கபட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே விற்கப்படும் பட்டாசுகள் 10 வெள்ளியிலிருந்து 20 வெள்ளி மற்றும் வெள்ளி 100லிருந்து 200 வெள்ளி வரையுளும் சந்தையில் விரற் கபடுவதாக கூரிய அவர்,இதனை வயது குறைந்த இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இது போன்ற திறந்த வெளி பட்டாசுகளின் விற்பணையை தடுக்க மலேசியா சுங்க துறை மற்றும்,மலேசியா போலீஸ் படை தகுந்த நடவடிக்கைகளை நாடு முழுவதும் எடுக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்வத்துடன்,இதன் மூலம் பட்டாசுகளையும் அதனை கடத்தும் கும்பாலின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும் என்று எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.


தற்போதிய போக்குதனில் சவ ஊர்வலம்,திருமணம்,பிறந்த நாள்,ஆகியவற்றில் பட்டாசுகளை பயன் படுத்துவதால் பொது மக்களுக்கு தொந்தரவும்,பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.சிறார்களின் மத்தியில் ஏற்பட்ட பதிப்புகளை நாம் எளிதில் மறக்க  வண்ணம்,1957ஆம் ஆண்டு வெடி மருந்து சட்டம் பிரிவு 4(2) கீழ் வெடி மருந்துகளை விற்பனை மற்றும்,இறக்குமதி செய்பவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு மேல் போகாத சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் இரு தண்டணைகளை பெற சட்டம் வழி வகுத்துள்ளத்தையும்,பொருப்படுத்தாமல் மிக சிலபமாக பட்டாசுகளையும் ,வெடிமருந்துகளையும் பெற்று சட்டத்தை மீறும் செயல் குறித்தும் அவர் தெளிவுப்படுத்தினார்.


இதனிடையே பட்டாசுகள் வெடிமருந்துகள் வைய்திருபோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குடியிருப்பதுடன் இதனை மீறுபவர்களின் மீது அமைக்க வழிமுறைகள் சிறந்த பலனை அழைக்க வில்லை என்றும் அவர் சொன்னார்.  சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெரும் விடத்தில் நடப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்து வெடி மருந்துகளை கடத்தும் நபர்களுக்கு கடும் காவல் தண்டனையும் அவர்களின் சொந்துக்களை பறிமுதல் செய்யும் வழிமுறைகளையும்  விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறார்கள் பட்டாசுகளை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதுடன்,அவர்கள் பட்டாசுகளை வாங்குவதையும் பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட  வேண்டும் என்றும் எஸ்.எம் முஹம்மாட் இட்ரீஸ் ஆலோசனை கூறினார்.




பட விளக்கம்




செய்தி : ஆர்.தசரதன்  பட்டர்வொர்த்



இந்து சமயம் வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம்

முருகன் புகழ்  கால்ஸ் வடிவேலன் புகழாரம்


இந்து சமயம் மனித வாழ்வியலுக்கு உகர்ந்த சமயம் என்று அண்மையில்,பட்டர்வொர்த்  இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் ,இங்குள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் நடந்த சமய சொற்பொழிவு ஒன்றில் கலந்துக்  கொண்ட போது ஆஸ்திரோலிய நாட்டை சேர்த்த பேராசிரியர் கால்ஸ் வடிவேலன் பேல்லி புகழாரம் சூட்டினார்.ஒரு கிறிஸ்துவராக இருந்து இந்து சமயத்தின் மீது குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் மீது அதீத பக்தி கொண்டு இந்து சமயத்தை தழுவிய அறிஞர் பெருமகனார்அவர்.

1981 ஆம் ஆண்டு பத்துமலை தைபூசதில் முருகனுக்கு முதல் காவடி எடுத்து தொட்டங்கியத்தில்,தமது வாழ்வில் பல மாற்றங்களை தாம் அனுபவ பூரணமாக உணர்ந்ததாக அவர் சொன்னார். பல உலக நாடுகளுக்கு சென்று இந்து சமய ஆன்மிக விளக்க உரைகளை ஆற்றி வருவதுடன்  ,தாம் வசிக்கும் ஆஸ்திரோலிய நாட்டிலும் இந்து சமயத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளவர்களின் மத்தியில் இந்து சமய விளக்க உரைகளை வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.


தாம் இந்து மதத்தை தழுவிய பொது இந்து மதக் கொள்கையில் முக்கியம் வாய்ந்தது சைவம் சமயமாகும்,அதனை  நிறுத்தி தாம் மற்றும் தமது குடும்பத்தினர் அனைவரும் சைவம் உணவு உட்கொண்டு  வருவதாக அவர் கூறினார்.இந்து மதத்தில் உயிரினங்களை மத  வழிபாட்டிற்கு பயன் படுத்துவது  உண்டு,அனால் தாம் சைவ நெறி முறைகளை கடைப்பிடிப்பதால் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் சைவ நெறி முறைகளுக்கு ஏற்ப நடந்து வருவதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரோலியா நாட்டில் பல சமய மக்கள் வலது வருவதுடன்,அதில் எப்படி மற்ற சமூகத்தினர் இந்து மதக் கொள்கையை எப்படி வரவேற்கின்றனர் என்பதை தாம்   காவடி எடுக்கும் முறைதனையும், பழமை மிகுந்த இந்து  சமயத்தினை எடுத்து உரைக்கிற போது அவர்களின் வரவேற்பு நல்ல முறையில் வரவேற்பு  கண்டு  இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இந்து சமயம் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கால்ஸ் கூறினார்.


மலேசியா  தைபூசம் அதன் சிறப்புகளை கொண்ட புத்தகம் ஒன்றை ஆஸ்திரோலிய,சிங்கப்பூர் மற்றும்  கோலலாம்பூர்   ஆகிய இடங்களில் எதிர்வரும் மே மாதம் தொடக்கத்தில் வெளியீடப்படும் என்றும் கால்ஸ் சொன்னார்.

பட விளக்கம்

1. பட்டர்வொர்த் இந்து இளைஞர்  தலைவர் லோகநாதன் கால்ஸ் அவர்களுக்கு நினைவு சின்ன  வழங்கிய போது



4 சொர்பொழிவை  ஏற்று நடத்திய ஏற்பட்டுக் குழுவினர்



















Wednesday 20 January 2016



பாடல் : அன்பு மேகமே இங்கு ஓடி வா



எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது


பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததோ
நான் நீயன்றோ...நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு


சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமம் ஆகும் காட்சி உண்டு
பூ மஞ்சமே...பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

Friday 15 January 2016


பினாங்கு மாநில தைப்பூச பெருவிழா

தொகுப்பு ஆர்.ராமனி



பினாங்கு தைப்பூசம் என்பது மலேசியாவின் ஜோர்ஜ் டவுன் பினாங்கு மாநகரில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் இடம்பெறும் தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும்.
தமிழர் மட்டும் அன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் தண்ணீர்மலை முருகன்.சீனர்களும் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என உடைக்கிறார்கள்.


                                                           முதலாம் நாள் விழா

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி (நகரத்தார்) பூசம்' எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு வீதியில் உள்ள கோவில் (கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில் காவடிகளுக்கும், முருகனின் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்.

மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்லும். அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும். ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு, காப்பி, தேநீர் உள்பட அன்னதான(மு)ம் வழங்குவார்கள். ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்திருப்பார்கள்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் நடைபெறும். சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டிருப்பார்கள். அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உ


ள்நடையில் நிறுத்தி பக்தர்கள் 'இருவர் பாமரம் வீச, பெரியவர் ஒருவர் கட்டியம் கூறி முருகனின்மேல் பாடுவார்.


இரண்டாம் நாள் விழா

இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைச் செலுத்துவார்கள்.
அன்று முருகப் பெருமானுக்கு மகேசுவர பூஜை அபிசேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் குழந்தைகளுக்கு முடி இறக்கித் தொட்டிகட்டுதல் இடம்பெறும். இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இருபுறமும் இருவர் பிடித்துக்கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி, புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு, தொட்டிலுக்குள் குழந்தைகளைப் படுக்கவைத்து அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக கரும்புத் தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப் பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சக்கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத்திற்கும், மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிப்பார்கள்.

அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு, கோவிலுக்குள் (சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டு வந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுப் பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும். காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது.


மூன்றாம் நாள் விழா

மூன்றாம் நாள் காலை ('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீசுவரரின் சன்னிதியின் முன் சாலையில் சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள்.

பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள். அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பாத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிசேக ஆராதனைகள் செய்து சிதறு தேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்தும் திரும்புவார்கள்.

அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து (நான்காம் நாள்) காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு வீதியில் உள்ள கோவில் வீட்டை வந்து சேரும். அதன் பின் ரதத்தில் இருந்து சாமி இறக்கி வீட்டினுள் வைத்து தீப தூபங்கள் காட்டி அதனுடன் இனிதே தைப்பூச உற்சவம் முற்றுப்பெறும்.

Wednesday 13 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 13.01.2016
பிறை


தைப்பூச திருநாளின்
மாண்பை காத்து கொண்டாடுவோம்

பினாங்கு இந்து சங்கம் வலியுறுத்து



பண்பாடு,பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இந்து மத முறைப்படி நடக்கும் தைப்பூச திருவிழாவை பக்தி பரவசத்தொடும்,அப்பெருவிழாவின் மாண்பை காத்து  இந்துப்பெருமக்கள்   கொண்டாட வேண்டும் என்று மாநில இந்து சங்க தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆண்டு 24ஆம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு,இந்த விழாவின் போது விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து,பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை முறையாக செலுத்தி தைப்பூசத்தை திருநாளை கொண்டாட வேண்டும் என்று பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் பெருமாள் அவர்களின் தலைமையில் நடந்த தைப்பூச   விளக்கக் கூட்டதிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியா இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் ஷான் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு கோலாலம்பூர் தைப்பூசத்தில்  இந்து சங்கத்துடன் இணைந்து 500 தொண்டூழிய குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.கடந்த ஆண்டு தைப்பூத்தில் 100 சீன இளைஞர்கள் குப்பகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அதில் ஒரே ஒருவர் மட்டும் இந்தியர் என்பது குறிப்பிடதக்கது என்று டத்தோ மோகன் ஷான் சொன்னார்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பினாங்கு மாநில தைப்பூசத்திலும் இந்து சங்க தொண்டூழியர்கள் சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டத்தோ மோகன் ஷான் கூறினார்.

பினாங்கு இந்து சங்க தலைவர் உட்பட பொறுப்பாளர்கள் கருத் துறைக்கையில் திருவிழாவுக்கு வரும் இந்துப் பெருமக்கள் பண்பாட்டு உடையுடன் வரும்படி கேட்டுக்கொண்டனர்.


பட விளக்கம்

தைப்பூச விளக்கவுரை நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ மோகன் ஷான்
மற்றும் பினாங்கு இந்து சங்க பொறுப்பாளர்கள்















செய்தி : ஆர்.தசரதன்

டிச         : 06.12.2015

புக்கிட்  மெர்தாஜம்


அல்மா தோட்ட தமிழ்ப்பள்ளி கணினி செயலி கண்டுபிடித்து சாதனை

புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள அல்மா  தோட்ட தமிழ்ப்பள்ளியை சேர்த்த ஆசிரியிர் திரு.சு.புஸ்பநாதன் தலைமையில் கொண்ட குழிவினர்  கணினி செயலி 2.0 கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.ஆங்கிலம் தமிழ் தகவல் தொழிநுட்ப பொருளகராதியான இந்த செயலி 2.0 ஆசிரியர்கள்,மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன் படுத்தலாம் என்று ஆசிரியர் திரு.சு.புஸ்பநாதன் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பானது உலகில் உள்ள 160 நாடுகளை சேர்த்தவர்கள் பதிவேற்றம் செய்து இதை பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் சொன்னார் .இணையா உளவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்த செயலி தற்போது 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்பாட்டில் இருப்பதாக விவரித்த ஆசிரியர் .சு.புஸ்பநாதன் இது அல்மா தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு கிடைத்த வெற்றியாகவும், சாதணையாகவும்  கருதுவதாக   அவர் கருத்துரைத்தார்.

இந்த செயலியின்  வடிவமைப்புக்கு ஆசிரியர்கள் திரு.புஸ்பநாதன் சுப்ரமணியம்,திருமதி நிர்மலா பாலகிருஷ்ணன்,திருமதி சுகந்தி சுடலை முத்து மற்றும்  மாணவர்கள் நிவேஷ் சரவணன்,சர்வேஸ்வரன் மணிமாறன்,நளினி பார்தீபன் மற்றும் நேரோஷ செல்லத்துரை பெருமளவில் உதவிகளையும் பங்களிப்பினையும் வழங்கி ஆதரவளித்தனர் என்று ஆசிரியர் .சு.புஸ்பநாதன் கூறினார்.

இந்த செயலியை உருவாக்க ஆலோசனைகளை உத்தமம் பினாங்கு மாநில நிகராளி திரு.புகழேந்திரன் சண்முகம் மற்றும் நிதியுதவி வழங்கிய ஆசிரியை திருமதி காந்திமதி இராகவன் ஆகியோருக்கு தமது நன்றியை பதிவு செய்வதாக நண்பனுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் ஆசிரியர் .சு.புஸ்பநாதன் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் கடந்த காலங்களில் பல அறிய சாதணைகளை புரிந்து வருகின்றனர்,அவர்களின் சாதனணயை கௌரவிக்கும் விதத்தில் இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கலும்,சமுதாயமும் பக்க பலமாக இருந்தால் நமது தமிழ்ப்பள்ளிகளில் சாதணைகல் மேலும் உயர்வடையும் என்பது திண்ணம்.இந்த செயலியை பெற KANINI AGHARATHI என்று குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம்

பட விளக்கம்


ஆங்கிலம் தமிழ் தகவல் செயலியை உருவாக்கிய ஆசிரியர் திரு சு.புஸ்பநாதன் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும்

பயன்பாட்டில் இருக்கும் மாதிரி செயலியின் தோற்றம்






 



 
 
 

 
1.நேவ􁿃 சரவண􁾹

2.ச􁾽வ􁿄வர􁾹 மதிவாண􁾹

3.நளினி பா􁾽􁾷தீப􁾹

4.நிேராஷா ெச􁾿ல􁾐ைர
 


 
 


Tuesday 12 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 14.01.2016
புக்கிட் மெர்தாஜம்



இந்து இளைஞர் பேரவை நாக.பஞ்சுக்கு எதிராக போலீஸ் புகார்.


அண்மையில் இந்து மத திருமணங்களை மிகவும் கொச்சையாக வாட்ஆப் வாயிலாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட மலேசியா மனிதநேய திராவிட கழக தலைவர் நாக.பஞ்சு நாகமுத்துக்கு எதிராக மலேசியா இந்து  பேரவை சார்பாக நேற்று புக்கிட்  மெர்தாஜம் காவல் துறையில் போலீஸ்  புகார் ஒன்றை செய்தது.இந்த போலீஸ் புகாரை அப்பேரவையின் தேசிய தலைவர் ந.மகேந்தரன் செய்திருந்தார்.

இந்து மத கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட நாக.பஞ்சு,இந்து திருமணங்கள் விபச்சார திருமணங்களுக்கு ஒப்பானது என்ற குற்றச்சாட்டை கூரியுள்ள நாக பஞ்சுவின் கருத்தை  பேரவை மிக கடுமையாக கருதுவதாக நண்பனுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் ந.மகேந்திரன்  தெரிவித்தார்

இந்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த நாக பஞ்சுவின் விஷமத்தனமான கருத்தானது,சமூக மத்தியில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால்,அரச மலேசியா போலீஸ் துறை இந்த சம்பவம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க பட்டு தண்டிக்க  வேண்டும் என்று. இந்து இளைஞர் பேரவை சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.


இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் உள்ள மாநில இந்து இளைஞர்கள் பேரவை மாநில தலைவர்கள்,நாக பஞ்சுவுக்கு எதிராக போலீஸ் புகார்களை செய்ய மலேசியா இந்து இளைஞர் பேரவை பணித்திருப்பதாக ந.மகேந்திரன் தெரிவித்தார்


பட விளக்கம்

போலீஸ் புகார் நகலுடன் இந்து இளைஞர் பேரவை தேசிய தலைவர்
ந.மகேந்திரன்




செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 13.01.2016
ஜார்ஜ்டவுன்


இடைநிலை பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம்

கல்வி அமைச்சுக்கு பினாங்கு எழுத்தாளர் சங்கம் கோரிக்கை


இடைநிலை பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் நிலை மிகவும் பரிதாப நிலையை எட்டியுள்ளது.எதிர்காலத்தில் தமிழ் இடைநிலை பள்ளிகளில் தொலைந்து போவதை காப்பாற்ற, இடைநிலை பள்ளிகளில்  தமிழ் மொழி பாடத்தை கட்டாய பாடமாக இந்திய மாணவர்கள் எடுக்க வேண்டும் என்ற   நிலையை    கல்வி அமைச்சு நிலை நிறுத்த வேண்டும் என்று  பினாங்கு மாநில எழுத்தாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.

இடைநிலைப்
பள்ளிகளில் தமிழ் மொழியை காப்பது  நமது கடமை என்றும் ,மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் சமூதாயம் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும்   நாட்டின் பலம் பெரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இக்கருத்தை ஆதரிப்பதாக கூறினார்.

அண்மையில் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் கவி பேரரசு வைரமுத்து  அவர்களின் இலக்கிய சுற்றுலா ஒன்றை மேற்கொண்ட பினாங்கு எழுத்தாளர் சங்கம்,தங்களின் கோரிக்கையை தமிழ் மொழி இந்நாட்டில் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் மத்தியில் தமிழ்  ஒரு பாடமாக எடுக்கும் நிலை மோசமாக இருப்பதால்,அதனை களைய கல்வி அமைச்சுக்கு போதன முறையில் தமிழை கட்டைய பாடமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது

மொழி அழிந்தால் இனமே அழிந்து விடும் என்ற கருத்துக்கு ஒப்ப,இடை நிலை பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் அழியும் நிலையை காப்பாற்ற அனைவரும் தங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று மாநில எழுத்தாளர் சங்க செயலாளர் செ.குணாளன் இக்கருத்துக்கு சங்கம் அதரவு தருவதாக சொன்னார்.


பட விளக்கம்


1.பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்

2.கவிபேரரசு வைரமுத்துவுடன் பினாங்கு மாநில எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள்












Tuesday 5 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன       : 06.1.2016
பட்டர்வோர்த் 



பினாங்கு இந்து அறப்பணிய வாரிய மீது போலீஸ் புகார் ஆதரமற்றது 

இயக்குனர் ராமச்சந்திரன் பதில் அடி 


பத்து காவன் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பாக அந்த ஆலய நிர்வாகம்,பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி போலீஸ் புகார் செய்திருப்பதாக அந்த அறப்பணிய வாரியத்தின் இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இங்குள்ள தேவான் மாரியம்மன் மண்டப அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்த ஆலய  விவகாரத்தை பெரிதுபடுத்த நினைக்கவில்லை மாறாக,அறப்பணிய வாரியத்தின் மீது ஆதாரமற்ற குற்ற சாட்டினையும்  பொய்யான போலீஸ்  புகரையும் செய்துள்ள  ஆலய தலைவர் கோ.மனோகரன் மற்றும் ஆலய அரங்காவளர்  மு.வீ.மதியழகன் மற்றும் என்னய்யா 33 பேரின்  நடவடிக்கை குறித்தும்,அறப்பணி வாரியத்தின்   நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதின் பேரில் தாம் மௌனம் கலைந்திருப்பதாக அவர் சொன்னார்.

ஆலய நிர்வாகம்  செய்திருக்கும் போலீஸ் புகாரில் அரப்பணி வாரியத்தின் செயலாளர் ஆர்.சுரேந்திரன் ஆலய சாவியை 27.12.2015 ஆம் நாள் ஒப்படைப்பதாக கூறியிருந்தது  பொய்யான தகவல் என்றும்,தமது செயாலாளர் ஆலய நிர்வாகதிடம் அந்த வாக்குறுதி வழங்க வில்லை என்றும் 
எம்.இராமசந்திரன் தெளிவு படுத்தினார். 

போலீஸ் புகாரில் அம்மனுக்கு போடபட்டிருந்த நகைகளை அரப்பணி வாரியதிடம் யார் கொடுத்தது,காணமல் போல உடமைகளை யார் கணக்கு எடுத்தது,அறப்பணி வாரியத்தை சேர்த்த யார்?இவையனைத்தையும் பெற்றுக்கொண்டார் என்பதை ஆலயம்  நிர்வாகம் கூற வேண்டும் என்றும் எம்.இராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே 30 ஆயிரம் வெள்ளியை அறப்பணி வாரியம் திருவிழாவை முன்னிட்டு வசூல் செய்திருப்பதாக கூறப்பட்ட போலீஸ்  புகாரில்,யார் அந்த பணத்தை வசூல் செய்தது,நிதி கொடுத்த நபர்கள் யார்?போன்ற  விபரத்தை ஆலய நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்றும்  எம்.இராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே மற்றொரு இணைக்க பட்ட போலீஸ் புகாரில் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்துக்கு 86 .000 ஆயிரம் வெள்ளியை அறப்பணி வாரியம் வசூல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த வாரிய இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,இந்த ஆலய திருப்பணி வேலைகளை தனியார் நிறுவனம் ஒன்று முழுவதும் பொறுப்பேற்று ஆலய திருப்பணியை செய்து வருவதுடன்  அந்த தனியார் நிறுவனம்   எந்த வித பண  வசூலையும் மற்றவர்களிடம் வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அறப்பணி வாரியம்  எந்த வித நிதி வசூளையும் வாரியம் மேற்கொள்ள வில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.


மற்றொரு விவகாரத்தில் அறப்பணி வாரியம் பொறுப்பேற்ற காலத்தில் 20 பிரேதங்கள் இடுகாட்டில் புதைக்கபட்டுள்ளதாக கூறியிருக்கும் போலீஸ் புகாரும் அடிப்படையற்றது  எப்போது அந்த பிரேதங்கள் தகனம் செய்யபட்டன,நல்லடக்கத்திற்காக யாரிடம் பணம் செலுத்தபட்டது,யார் அதை வசூளித்தது போன்ற விவரங்களையும் ஆலயநிர்வாகம்  வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  ஆதரமிள்ளாது பொய்யான போலீஸ் புகாரை செய்திருக்கும் ஆலய தலைவர் கோ.மனோகரன்,மு.வீ.மதியழகன் மற்று ஏனைய 33 பேர்களின் மீது தகுந்த  விசாரணையை போலீசார் மேற்கொள்ளுவார்கள்என்றும் அவர்  நம்பிக்கை தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் எம்.இராமச்சந்திரன் அவர்களுடன் அறப்பணி வாரிய செயலாளர் ஆர்.சுரேந்திரன்,வாரிய திட்டமிடல் பிரிவு தலைவர் எஸ்.நடராஜா மற்றும் பினாங்கு மாநில குடும்ப உரிமைக்  குழு அதிகரி கே.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பட விளக்கம் 

 பினாங்கு இந்து அறப்பணிய வாரிய இயக்குனர் எம்.இராமச்சந்திரன்,
மற்றும் செயலாளர் ஆர்.சுரேந்திரன்









Friday 1 January 2016


பட்டர்வொர்த் இந்து சங்கம் ஏற்பாட்டில்
முறையாக வழிபாடு செய்யும் முறை ஒரு நாள் பயிற்சி


அண்மையில்  பட்டர்வொர்த் இந்து சங்கம் ஏற்பாட்டில் முறையாக வழிபாடு செய்யும் முறை ஒரு நாள் பயிற்சியை,இன்ன்குள்ள கம்போங் காஜா சங்க கட்டிடத்தில் சிறப்புடன்  நடைபெற்றது.இந்த பயிச்சிக்கு  பட்டர்வொர்த் இந்து சங்கம் சங்க தலைவர் கோ.சண்முகன்நாதன் அவர்கள் தலைமையேற்றார்.
 
 
இந்த நிகழ்வில் வரவேர்புரை ஆற்றிய இச்சங்கத்தின் தலைவர் முறையாக இல்லங்களில் வழிபாடு முறைதனை இந்து மதம் ஏற்படுத்தி உள்ளது என்றும் அதை முறையாக செய்வதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தர்.மேலும் முறையான வழிபட்டு முறைதனை  மக்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்கும்  போது அவற்றை தங்களின் குடும்ப உறுப்பினர்களும் பின்பற்ற உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்து போன்ற பயிற்சிதனை மதம் ஒரு முறை நடத்த திடமிட்டிருப்படகவும் அவர் சொன்னார். 
 
இந்த ஒரு நாள் முறையாக வழிபாடு செய்யும் முறை பயிற்சிதனை பட்டர்வொர்த் இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.எம்.சுப்பிரமணியம் சிறப்புடன் நடத்தினார்.இந்த பயனான நிகழ்வில் 10 குடும்பங்களை சேர்த்த 100 மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 
 
பட விளக்கம் 
 
1.பயிற்சியில் கலந்து கொண்ட குடும்ப மாதர்களின் ஒரு பகுதினர்.
 

செய்தி : ஆர்.தசரதன்
ஜன       : 3
பினாங்கு



தைப்பூச திருநாளை புனித ஆன்மீக திருவிழாவாக  கொண்டாடுவோம்

வே.நந்தகுமார் வலியுறுத்து

 
அண்மையில் பினாங்கு மாநில இந்துதர்ம  மாமன்ற அருள்நிலயத்தின் ஏற்பாட்டில் "முருகன் தரிசனமும் தைப்பூச வழிபாடும்" என்ற தலைப்பில் பினாங்கு கொம்தார் 5வது மாடியில் உள்ள மாநாட்டு அறைதனில் கருத்தரங்கம் ஒன்று சிறப்புடன் நடைபெற்றது.
 
மலேசியா இந்து மாமன்ற தலைவரும்,பினாங்கு மாநில அருள்நிலைய தலைவருமாகிய தர்ம சிகாமணி திரு.வே.நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார்.அவரின் உரையில் மலேசியா இந்துக்கள் தைபூச விழாவை ஒரு புனித ஆன்மீக திருவிழாவாக கொண்டாட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.தமிழ் கடவுளாகிய முருகவேலுக்கு தங்களின் வேண்டுதலை முறையாக விருதமிருந்து,நமது அருளாளர்கள் காட்டிய வழியில்,சமய நெறிமுறைகளை உணர்ந்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
மேலும் அவரின் உரையில் தைப்பூச நாளில் அதிக அளவில்  விரயமாகும் சிதறு தேங்காய்கள்,அபிஷேக பால்,அன்னதான வழங்கப்படும் உணவுகள் ஆகியவற்றை கேட்டுக்கொண்டார்.ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைப்பதற்கு பதிலாக ஒரு சில தேங்காய்களை உடைத்து,பாக்கியுள்ள  பணத்தை தர்ம காரியங்களுக்கு செலவு செய்தல் இறைவனின் கருணைக்கு பாத்திரமாகலாம் என்றார்.
 
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலின் செம்பு பெரிய அளவில் இருப்பது அவசியமில்லை மாறாக சிறு அளவில் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்தலும் முருகன் அருள்பளிப்பர் என்றும் அவர் சொன்னார்.தைப்பூச நாளில் அதிக அளவில் விரயமாவதை அனைவரும் சித்திக்க வேண்டும் என்பதுடன் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த கருத்தரங்கில் அழைக்க பட்ட பிரமுகர்களுடன் அருள்நிலைய மாமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
பட விளக்கம்'
 
 
1.ஏற்பாட்டுக்கு குழுவினருடன் பினாங்கு மாநில அருள்நிலைய தலைவர் வே.நந்தகுமார்

2.கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.

3.நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினர்.