அந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு 15 பில்லியன் பெற்று முதலிடம் முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதம்
பினாங்கு ஏப் 23 ஆர்.ரமணி
நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான அதிக அந்நிய நேரடி முதலீடு பெற்ற முதல் மாநிலமாக பினாங்கு திகழ்வதாக பினாங்கு முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதத்துடன் கூறினார்.பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 15 பில்லியன் அந்நிய முதலீட்டை பெற்றுள்ளதை மலேசிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகமான மிடா (MIDA ) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 166 தொழில் துறை திட்டங்களுக்கு அங்கிகாரம் கொண்டு செயல்படுத்தப்பட்ட அறிக்கையில் ஒன்றில் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மொத்த உள்நாட்டு முதலீட்டுக்கு மிடா 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும்,அதில் பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது மாநிலத்துக்கு கிடைத்த உயரிய முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கு மாநில கொண்டுள்ள தரமான சுற்றுசூழலின் காரணமாக அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை மாநிலம் பெற்று வருவதாக கூறிய முதலமைச்சர் சௌ குவான் இயோவ்,பினாங்கில் உற்ப்பத்தி மூலப் பொருட்கள் இல்லாவிட்டாலும் ,திறன் கொண்ட மனித தொழில் ஆற்றல் கொண்ட ஊழியர்களின் காரணமாக அந்நிய நேரடி முதலீடுகளை பெற வழிவகுப்பதாக மாநில சிறப்பு பாதுகாப்புக்கு நடடிக்கைக் குழு முகநூல் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில் தயாரிப்பு சேவை தரம் 49% முதன்மை வருமானத்தை ஈட்டி தருவதாகவும்,அதனை தொடர்ந்து உற்பத்தி திறன் 46% கொண்டிருப்பதாக கூறிய அவர்,உலகில் தனி சிறப்பு கொண்ட உணவுவகைகளை பினாங்கு கொண்டிருப்பதால் அதில் முக்கிய பங்களிப்பை சுற்றுப்பயண துறை கொண்டிருப்பதுடன் அங்காடி கடைகளில்சுற்றுப்பயணிகள் செலவிடுவதால் வருமானத்தை பெற வாய்ப்பாக இருப்பதாக மேலும் அவர் கூறினார்.
இதனுடன் மாநிலம் கொண்டுள்ள கலை,கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள்,மருத்துவ சுற்றுலா,தங்கும் விடுதிகள், உலக தரத்திலான மாநாடுகளை நடந்து கொண்டுள்ள வசதி கொண்ட மண்டபங்கள் மற்றும் நகர் புறத்தில் அமைத்துள்ள சுற்றுசூழல்கள் ஆகியவை மாநில பெரும் வருமான வாய்ப்புகளை கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை என முதலமைச்சர் சௌ விவரித்தார்.
பொது சேவை துறையில் பினாங்கு மாநிலத்தில் 300,000 தொழிலார்கள் வேலை செய்ய வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்றும் அதில் பாதி தொழிலார்கள் சுற்றுலா துறையில் பணியாளர்களாக இருப்பதை சுட்டிக் காட்டிய முதல்வர் சௌ பினாங்கு நிறுவன சிந்தனைக் குழுவின் அறிக்கையில் 99% சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது சேவை துறையில் அங்கம் கொண்டுள்ளனர்என வெளியிட்டுள் ள அறிக்கையை சுட்டியும் அவர் கருத்துரைத்தார்.
ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுதவி வழங்கியது
பினாங்கு
ஏப் 21
ஆர்.ரமணி
பினாங்கு மாநிலத்தில் சமூக நல நல்லுதவிகளை வழங்கி வரும் வெகி பார்க் கூட்டறவு கழகம் அண்மையில் ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியது.பினாங்கு வெஜி பார்க் கூட்டறவு கழகத்தின் காப்பாளர் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் அவர்களின் தலைமையில் அன்றாட சமையலுக்கு உதவும் 4 டான் எடையுடைய காய்கறிகள்,பழங்கள்,கீரை வகைகள்,100 அரிசி பேக்கேட்கள் என பல்வகை பொருட்களை ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர்,மற்றும் பத்து லாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் உடன் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசோப் இங் சூன் சியாங் ஆகியோரிடம் எடுத்து வழங்கினார்.
மக்கள் கோவிட் -19 நோயின் காரணமாக பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு வீடுகளிலேயே இருக்க நேர்வதால்,வழங்கப்படும் உதவிப்பொருட்களின் மூலமாக மக்கள் வெளியே செல்ல தவிக்க முடியும் என்பதுடன்,அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டு வசிப்பிட காட்டுப்பாடு ஆணையத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் ஆலோசனை கூறினார்.
இதனிடையே மனம் முவந்து ஜெலுதோங் நாடாளுமன்ற பகுதியில் உள்ள சட்டமன்ற பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை வழங்கிய பினாங்கு வெஜி பார்க் கூட்டுறவு கழகத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் கூறினார்.டத்தோ ஶ்ரீ செங் அவர்களின் சேவையானது இக்காலகட்டத்தில் மிகவும் மதிப்பளிக்ககூடுயதாக உள்ளதாக என பெருமிதத்துடன் மேலும் கூறியதுடன்,அவரைப் போல வசதிப்படைத்தவர்கள் ஒரு உதாரணமாக என்னி பிறருக்கு உதவிம் மனப்பான்மையை ஏற்றபடுத்துக்கொள்ள வேண்டும் என இராயர் குறிப்பிட்டார்.
இதனுடன் கிடைக்கப்பட்ட உதவிப்பொருட்டகள் அனைத்தும் அரசாங்க முதன்மை பணியாளர்கள்,பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கபடும் என விவரித்தார் இராயர்,அரசாங்கம் அறிவித்துள்ள வசிப்பிட காட்டிப்பாட்டு ஆணையை முழுமையாக கடைப்பிடித்து ஆதரவி அளிக்க வேண்டும் என்பதுடன்,மக்களுக்கான சமூக நல உதவிகள் கிடைக்க சட்டமன்னற உறுப்பினர்கள் நேரடியாக
மக்களை சந்தித்து உதவிடுப்படி ஆலோசனை கூறினார்.