Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 13 January 2016

செய்தி : ஆர்.தசரதன்
ஜன        : 13.01.2016
பிறை


தைப்பூச திருநாளின்
மாண்பை காத்து கொண்டாடுவோம்

பினாங்கு இந்து சங்கம் வலியுறுத்து



பண்பாடு,பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இந்து மத முறைப்படி நடக்கும் தைப்பூச திருவிழாவை பக்தி பரவசத்தொடும்,அப்பெருவிழாவின் மாண்பை காத்து  இந்துப்பெருமக்கள்   கொண்டாட வேண்டும் என்று மாநில இந்து சங்க தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆண்டு 24ஆம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு,இந்த விழாவின் போது விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து,பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை முறையாக செலுத்தி தைப்பூசத்தை திருநாளை கொண்டாட வேண்டும் என்று பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் பெருமாள் அவர்களின் தலைமையில் நடந்த தைப்பூச   விளக்கக் கூட்டதிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மலேசியா இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் ஷான் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு கோலாலம்பூர் தைப்பூசத்தில்  இந்து சங்கத்துடன் இணைந்து 500 தொண்டூழிய குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.கடந்த ஆண்டு தைப்பூத்தில் 100 சீன இளைஞர்கள் குப்பகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அதில் ஒரே ஒருவர் மட்டும் இந்தியர் என்பது குறிப்பிடதக்கது என்று டத்தோ மோகன் ஷான் சொன்னார்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பினாங்கு மாநில தைப்பூசத்திலும் இந்து சங்க தொண்டூழியர்கள் சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டத்தோ மோகன் ஷான் கூறினார்.

பினாங்கு இந்து சங்க தலைவர் உட்பட பொறுப்பாளர்கள் கருத் துறைக்கையில் திருவிழாவுக்கு வரும் இந்துப் பெருமக்கள் பண்பாட்டு உடையுடன் வரும்படி கேட்டுக்கொண்டனர்.


பட விளக்கம்

தைப்பூச விளக்கவுரை நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ மோகன் ஷான்
மற்றும் பினாங்கு இந்து சங்க பொறுப்பாளர்கள்















0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home