Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 10 August 2017

பினாங்கு தாமரை மன்ற ஏற்பாட்டில் இந்திய புது மண தம்பதிகளுக்கு பயிற்சி முகாம் 

குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை ..சார்ஜன் முருகையா 



ஜார்ஜ்டவுன் 

ஆக.   12.08.2017

ஆர்.தசரதன் 




பினாங்கு மாநிலத்தில்  நற்சேவைகளை  ஆற்றிவரும் தாமரை மன்றத்தின் ஏற்பாட்டில் இந்திய தம்பதிகளுக்கு குடும்ப நல பயிற்சி முகாம் நிகழ்வு அண்மையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வு மன்ற தலைவர் திருமதி பாக்கியலெட்சுமி  அவர்கள் தலைமையற்றார்.பினாங்கு மாநில குடும்ப,சமூக  நல்வாழ்வு அமைச்சின்   இணை ஆதரவில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு இங்குள்ள சென்ட்ரல் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய  செபராங் பிறை காவல் துறையை சேந்த  சார்ஜன் முருகையா சிறப்பு பிரமுகரான கலந்துக்  கொண்டு சிறப்பித்தார்.

அவரின் தலைமையுரையில் குடும்ப உறவுகளிடையே அணுக்கமான உறவு இருப்பது அவசியம் என்றும்,இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள குண்டர் கும்பல் கலாச்சாரம் விட்டொழிக்க முடியும் என்றும்,குடும்ப செழிப்புக்கு கல்வி மற்றும் தன்னிலையை உயர்திக் கொள்ள மேலும் பயிற்சிகளில் கலந்துக்க கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.மேலும் அவரின் உரையில் குடும்ப உறவுகளின் பலம்  சமூகத்தின் மேன்மை பெறுவது திண்ணம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் 30 இந்திய புது மண தம்பதிகள் கலந்துக் கொண்டனர்.புதியதாக திருமணமான இந்திய  தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர் நோக்கும் சவால்கள் அதனை கடக்கும் வழிமுறைகள் மற்றும் சீராக  குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழவும் வழி  முறைகள் ஆகியவை பயிற்சியாக அனுபவம் நிறைந்த பயிச்சியாளர்களின் மூலமாக நடத்தப்பட்டதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான திருமதி பாக்கியலெட்சுமி குறிப்பிட்டார்.

இரண்டாம் ஆண்டாக  இது போன்ற நிகழ்வு நடத்தபட்டதாக கூறிய அவர்,இந்திய  தம்பதிகளிடமிருந்து நல்ல  ஆதரவு கிடைத்ததினால்   இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

குடும்பங்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்றும் அவை சமுதாய முன்னேற்றத்துக்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கு அவசியமானது என்பதால்,குடும்பங்களில் ஒன்றிணைந்த  ஒற்றுமை பேனப்படுவதால்  சமூக ஒற்றுமை மேலோங்கி அவை சமூக மாறுதலுக்கு வழி  வகுக்கும் என்ற நோக்கத்துக்காக இந்த  நிகழ்வு நடத்தப்பட்டதாகற்கான  திருமதி பாக்கிலெட்சுமி தமது உரையில் கூறினார்.

 பட விளக்கம் 

குடும்ப நல்வாழ்வு பயிற்சி முகாமில் கலந்துக் கொண்ட இந்திய தம்பதிகளின் ஒரு பகுதி 

சார்ஜன் முருகையா அவர்களுக்கு பாக்கிலெட்சுமி நினைவுசின்னம் வழங்கிய போது 


Saturday 8 July 2017

பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.
மாநில ஆளுநர் சிறப்பு வருகை


பெருநாள் நாள் கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்த ஒற்றுமை பேணுவோம்
லிம் குவான் எங்


பாலிக் பூலாவ்

ஜூலை 09.07.2017


ஆர்.தசரதன்



பினாங்கு மாநில அரசின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்துடன் பினாங்கு மாநில ஆளுநரின் 79 ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று சிறப்புடன் நடைப்பெற்றது.

இக்கொண்டாட்டம்இங்கு பாலிக் பூலவில் உள்ள பினாங்கு நகர சபை மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ்,பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் டத்தோ ரஷீத் ஹாஸ்நோன்,சுகாதார துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹில்மி யஹாய.மாநில அரசின் செயலாளர்டத்தோ  ஸ்ரீ பாரிசான் டாருஸ்,பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ.டாக்டர்  வான் அஜிசா வான் இஸ்மாயில்,பினாங்கு மாநில மாநகர் மன்ற தலைவர் டத்தோ மைமூனா முஹமாட் ஷரிப்பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ வீரா சுவா ஜி லாய்  சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் இந்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.


பல்வகை உணவுகள் இந்த நோன்பு பெருநாள் உபசரிப்பில் வருகையளித்த மக்களுக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் குறிப்பிடுகையில்,கடந்த 9 ஆண்டுக் கால பாக்கத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணியில் வாயிலாக திறமையான,வெளிப்படையான மற்றும் பொறுப்புடைமைமிக்க மிக்க ஆட்சியை மாநிலத்தில் புரிந்து வருவதை பெருமிதத்துடன் கூறினார்.


இதனிடையே மாநிலதில் உள்ள 1.6 லட்சம்  மக்கள்  ஊழல் தடுப்பினால் பகுத்தளிக்கபட்ட வெ 412.63 இலட்சம் ஈவுத்தொகை கொடுக்கப்பட்டடுள்ளதை  மாநில அரசாங்கதுக்கு பெருமை அளிப்பதையும் அவன் எடுத்துரைத்தார்.


மாநிலத்தில் பெருகியுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் நாட்டின் முதல்  பசுமை மாநிலமாககடந்த ஜூன் மதம் தொடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசின் ஏற்பாட்டில் நடக்கும் நோன்பு பெருநாள் கொண்டாத்தில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மற்றும் துணைவியார் தோ புவான் மஜிமோர் ஷெரீப் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் கொண்டதின் மூலமாகபல்லின  மக்களுடன் ஒன்றிணைத்து ஒற்றுமை பேணுவோம் என்ற முழக்கத்துடன் அவர் தமது உரையை நிறைவு செய்தார்.
















பிறையில் மூன்று தொழிற்ச்சாலைகள் தீக்கிரையானது

பிறை

ஜூலை 09.07.2017

ஆர்.தசரதன்


பிறை தாமான பிளாங்கி பகுதியில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் நேற்று காலை 11.00 மணியளவில் நடந்து தீ விபத்தில் தீக்கிரையானது.

பிளாஸ்டிக் ரக தொழிற்சாலையான அந்த தொழிற்சாலைகளில் ஒன்றில்   தீ ஏற்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு பாதுகாப்பு துறை பேச்சாளர் கூறினார்.

காலை மணி 11.00 மணியளவில் பெறப்பட்ட தொலை அழைப்பை தொடர்ந்து 35 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விறைத்து தீயை அணைக்க முற்பட்டதாக மேலும் அவர் சொன்னார்.

20 சதவீத அளவிலான வகையில் தீயினால் அந்த மூன்று தொழிற்சாலைகளும் பாதிப்புக்குஉள்ளதாக கூறிய அவர்,45 மணி போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றாக அணைத்ததாக அவர் சொன்னார்.

இந்த தீ சம்பவத்தில் எவ்வித உயிர்களும் பாதிக்கப்படவில்லை என்று குறிய அவர் தீ ஏற்பட்டதிற்கான காரணம் மாற்று சேத மதிப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  கூறினார்.

கரும் மேக புகைகள் சூழ்ந்த நிலையில்,பினாங்கு தீவு  பகுதியிலிருந்து பல கிலோ  மீட்டர் தூரம் இதை காண முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.


பட விளக்கம் 

தீயினால் பாதிப்படைந்த தொழிற்சாலைகலலிருந்து ஏற்பட்டது ஏற்பட்ட புகை மூட்டம் 




Saturday 1 July 2017

பினாந்தி ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை


ஜூலை    : 03.07.2017

பினாந்தி 

ஆர்.தசரதன் 


எதிர்வரும் 09.07.2017 ஆம் நாள் ஞாற்றுக்கிழமை காலை மணி 9.45 முதல் 11.00 வரை என் 804 முக்கிம் 19 பினாந்தி  புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை நடைபெறும் என்று இந்த ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.இந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார மக்கள் கலந்துக் கொள்ள அழைக்கப் படுவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த ஆலய ஸ்தாபன பூஜைக்கு பினாங்கு மாநில அரசு சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும்,பினாங்கு இந்து அறப்பணி சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர்,தற்போது இந்த ஆலயம் கடந்த மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் சிலைகள் உடைக்கபட்டு சர்சையிளான ஆலயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


பட விளக்கம் 

ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை ஏற்பாட்டுக்  குழுவினருடன் 
பாலன் நம்பியார் 

Friday 30 June 2017

பினாங்கு முத்தமிழ் சங்க ஏற்பாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளுக்கு பாராட்டு  விழா .




ஜூலை    01.07.2017

பட்டர்வொர்த்

ஆர்.தசரதன்




அண்மையில் தமிழகம் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக பரதநாட்டிய சாதனை நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த  கோகிலா நடனக் குழுவைச் சேர்ந்த நடனமணிகள் சாதனை புரிந்ததுடன் கின்னஸ் சாதனை விருதையும் பெற்றனர் 

அவர்களை பாராட்டும் இகழ்வு ஒன்று அண்மையில் இங்கு செபராங் ஜாயாவில் அமைந்துள்ள உணவாக ஒன்றில் சிறப்புடன் நடைபெற்றது 


பினாங்கு மாநிலத்தில் இந்தியக் கலைகளை பாதுக்காத்தும் அதனை அழியாமல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு  குறிப்பாக அக்கலைகள் இளைய தலைமுறையினர் பயின்றுவித்து வரும் பலம் பெரும் இயக்கமாக திகழும் பினாங்கு முத்தமிழ் சங்கம் இந்த பாரட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் கா.வு இளங்கோவன் அவர்கள் தலைமையேற்ற வேலையில்,உடன் இந்நிகழ்வில் சமூக சேவையாளர் டத்தோ நவநீதன் அவர்கள் சிறப்பு பிரமுகரான கலந்துக்க கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய  பினாங்கு மாநில முத்தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ் மணி கா.வு.இளங்கொவன் அவர்கள், இந்தியக் கலைகள் இந்த மண்ணை விட்டு மறையாமல் காப்பது அவசியம் என்றும்,இளைய தலைமுறையினர் அக்கலைகளை காற்றுக்க்கொள்வதன் மூலமாக தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும் என்பதுடன் அக்கலைகளை அழியாமல் காக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வை தொடக்கி வைக்க வந்திருந்த டத்தோ நவநீதன் அவர்கள் தமதுரையில் கின்னஸ் சாதனை  புரிந்துள்ள பினாங்கு முத்தமிழ் சங்கத்தை சேர்ந்த நடனமணிகள் பினாங்கு மாநிலத்துக்கு மட்டும்மின்றி மலேசிய  திருநாட்டுக்கு உயரிய கௌரவித்தை ஏற்படுத்தி தந்துள்ளதை   அவர் வெகுவாக பாரட்டினார்.

நிகழ்வில் இறுதியில் கின்னஸ் சாதனை புரிந்த நடனமணிகளான தே.யோகவர்தினி,சா.மிஷாந்தினி இ.திவ்யதர்ஷினி ஆகியோருக்கு கின்னஸ் புத்தகத்தின் நற்சான்றிதழ்,முதுதமிழ் சங்கத்தில் சார்பில் நற்சான்றிதழ் கொடுக்கப்பட்டது மாலை அணிவித்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக டாக்டர்  குணா,பினாங்கு  மாநில இந்திய மேம்பாட்டு கழக தலைவர் தமிழ் மறவன் பாலன்,நடன மாஸ்டர் கோகிலா  உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.





















Saturday 24 June 2017

செய்தி   : ஆர்.தசரதன் 

மே          : 30.05.2017

ஜூரு 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகல திருநாளில் அனைவரும் சங்கமம் 

பள்ளி மேன்மைக்கு ஜூரு வாழ் பொது மக்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் டத்தோ க.அன்பழகன் 


ஜூரு தமிழ்ப்பள்ளியின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை  சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவினை பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழு  தலைவர் முனைவர் டத்தோ க.அன்பழகன் தொடக்கி வைத்தார்.ஒரு கூட்டு பறவைகளாக தாய் வீட்டீல் சங்கமிக்கும் இடமாக சனிக்கிழமை அன்று நடந்த  கொண்டாட்டத்தில் ஜூரு தமிழ்ப்பள்ளி திருளால் கோலம் பூண்டது.பல ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் இடம்மாறி சென்று மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற உன்னத நோக்கில் அனைவரும் வருகையளித்து நூற்றாண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் பள்ளியின் பிதா மகன்களாக கருதப்படும் முன்னாள் தலைமை ஆசிரியர்களான கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்களுக்கு பொன்னாடை போற்றி  மலர் மாலை அணிவித்து ஏற்பாட்டுக்  குழுவினர் சிறப்பு செய்தனர்.

நூற்றாண்டுகளை  கடந்து பினாங்கு மாநிலத்தில் தன்னிகற்ற நிலையில் செழுமையுடன் வாழ்த்து வரும் ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு   கை கொடுத்த ஜூரு வாழ் பொது மக்களுக்கு பாராட்டையும் நன்றியையும் முனைவர் அன்பழகன்  தெரிவித்துக் கொண்டதுடன்.பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை கூறினார்.பினாங்கு மாநிலத்தில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளியாக ஜூரு  தமிழ்ப்பள்ளி திகழ்வதுடன்,மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பள்ளியின் வாரிய குழு தலைவர் டாக்டர் சரவணன் தமது  வரவேற்புரையில் குறிப்பிடுகையில்,நூற்றாண்டு காலமாக  ஒரே இடத்தில் செயல்படும் பள்ளியாக ஜூரு தமிழ்ப்பள்ளி விளங்குவது சாதாரண விஷயம் இல்லை என்றும் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அர்பணிப்புகளை  செய்த அனைவரையும்  எண்ணுவது சிறப்புடைத்து என்றும் குறிப்பிட்டார்.

இந்நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி வாரிய குழுவினர்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்,பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்,பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் த.முனியாண்டி தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.4மாடி கொண்ட கட்டிடமாக ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியை மேலும் தூரிதப்படுத்த மாநில  அரசாங்கம் ஒரு நிலத்தை ஜூரு தமிழ்ப்பள்ளிக்கு அவனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவரின் உரையில் டத்தோ க. அன்பழகன் அவர்களின் கவனத்திற்கு அவர் முன் வைத்தார்.

நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்ட பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டேவிட் பாபு ,தமது நினைவலைகளை மலேசிய  நண்பனிடம் பகிர்ந்து கொண்டதில் பள்ளி கடும் புயலினால் பாதிக்கப்பட்டது விழுந்த நிலையில்  அதற்க்கு மாற்று கட்டிடம்  வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்த வேளையில்,ஜூரு தோட்டத்தில் பிறந்து வளர்ந்த அச்சமயத்தில்   காட்டிட நிர்மாணிப்பாளர் இருந்த மா .ராஜகோபால் அவர்கள் ஜூரு பள்ளியின் புதிய பரிணாம வளர்ச்சி தோற்றுனராக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

நுற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்களின் சிறப்பு வருகை நூற்றாண்டு விழாவுக்கு பெருமை சேர்த்து மட்டும் அல்லாமல் கொண்டாட்டத்திற்கு உறு துணையாக இருந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.என்றும் நீங்கா நினைவுகளுடன் பழைய நினைவுகளை வரவழைத்து அக்கால  பள்ளி பருவ நினைவலைகள் மனதில் நிழலாடி அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களுக்கு கல்வி கண்ணை திறந்த ஆசிரியர்கள் நூற்றாண்டு விழாவில்  வருகையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நூற்றாண்டு விழாவில் முனைவர் டத்தோ க. அன்பழகன்,ஜூரு தமிழ்ப்பள்ளி வாரிய குழு தலைவர் டாக்டர் பெ.சரவணக்குமாரன்,வாரிய ஆலோசகர் மா.ராஜகோபால் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.சந்திரசேகரன்,ஜூரு  தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் த.முனியாண்டி ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவன உரிமையாளர் எஸ்.செல்வகுமாரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் இயக்குனர் திருமதி.சகுந்தலா,சக்குரா நிறுவனர் எம்.சந்தனதாஸ்,முன்னால் தலைமையாசிரியர்கள் கு.மோகன்,டேவிட் பாபு,திருமதி தமிழ்ச்செல்வி,போத்தா ராஜு,ஜெயவேலு,என்.வீராசாமி,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தராஜன்,சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் நாதன், மற்றும்  அழைக்கப்பட்ட பிராமுகர்கள் பலரும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 பட விளக்கம் 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைக்கும் டத்தோ க.அன்பழகன் 

சிறப்பிக்கப்பட்ட முன்னால் ஜூரு தமிழ்ப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்கள் 

டத்தோ க.அன்பழகன் அவர்களுக்கு பள்ளி வாரிய  தலைவர் .சரவணகுமார் நினைவு சின்னம் வழங்கிய போது 

பள்ளி மாணவர்களின் கலை படைப்பு 

முன்னாள் மாணவர்கள்  ஆசிரியர்களை  குழுப் படம் 

பினாங்கு மாநில தமிழ் பிரிவு  கல்வி இயக்குனர் திருமதி சகுந்தலா நினைவு சின்னம் பெறுகிறார்.














Putham Puthu Olai Video Song | Vedham Pudhithu | Raja, Amala