Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 4 March 2011

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா அண்மையில் இங்குள்ள சிட்டி டெல் தங்கும் விடுதியில் மிக விமரிசையாக நடந்தது.

இந்த விழாவை மனித வள அமைச்சருமான மாண்புமிகு டாத்தோ எஸ்.சுப்ரமணியம் அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.இந்த வரலாற்று நிகழ்வில் மாநில பேரவையின் முனோடிகளான சிங்கபூபுருக்கான முன்னால் தூதர் கே.கேசவபாணி,மாநில பேரவையின் முதல் தலைவர் குமரகுரு,முன்னால் தலைவர் டாத்தோ சிதம்பரம்,பி.ராஜந்திரன்,ஆர்.ரமணி இவர்களுடன் டாத்தோ வைதளிங்கம்,முதல் மாநில பேரவையின் செயலாளர் பெரியவர் ராமச்சந்திரன்,தேசிய பேரவை முன்னால் தலைவர்கள் ரசசெல்வம் மற்றும் திரளான பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொன் விளைவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடு கண்டது.இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக 50 ஆம் ஆண்டை நினைவு கொள்ளும் விதத்தில் தபால் தலையும்,மாநில தலைவர்கள் அடங்கிய போஸ்ட் கார்டும் சிறப்பாக வெளியிட்டு மாநில பேரவையின் தலைவர்களுக்கு மரியாதையை செய்யபட்டுது.

இரவு விருந்துடன் கூடிய நிகழ்வாக அமைந்த இந்த பொன் விழாவில் சிறப்பு  அங்கமாக  விருதுகளும்  வழங்கி சேவை செய்தவர்களுக்கு பாரட்ட பட்டனர்.முதல் விருதாக ரத்னா ஸ்ரீ விருது கே.கேசவபணிக்கும்,டாத்தோ சிதம்பரம் அவர்களுக்கும் வழங்க பட்டன .

மற்ற சிறப்பு விருதான இளைஞர் திலகம் விருது மாநில பேரவையின் ஆலோசகர் எம்.பார்த்திபன் அவர்களுக்கும்,முன்னால் மாநில பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களுக்கும்,போக்காக் மச்சாங் இந்து இளைஞர் முன்னால் தலைவர் சுப்ரமணியம் அவர்களுக்கும் வழங்க பட்டது.

மற்ற சிறப்பு விருதான இளைஞர் சேகவர் விருது சமுக பணியாளர் சி.தி.ராமசாமிக்கும்,சமய பணியாளர் ராம,இந்து சபா செவையாளார் முனியாண்டி அவர்களுக்கும் வழங்க பட்டன.


 ரத்னா ஸ்ரீ கே.கேசவபாணி அவர்கள்
 ரத்னா ஸ்ரீ டத்தோ வீ.சிதம்பரம்
 இளைஞர் திலகம் ஆர்.ரமணி
 இளைஞர் திலகம் எம்.பார்த்திபன்
 இளைஞர் சேவகன் ஜகதிசன்
 இளைஞர் சேவகன் சுப்ரமணியம்

 இளைஞர் செகவன் பத்மா



Thursday 3 March 2011

111 குழந்தைகள் பங்கு கொண்ட காதணி விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் 111 குழந்தைகள் பங்கு பெற்ற காதணி விழா இங்குள்ள புக்கிட் தெங்க மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.
இந்த தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு விழா மாநில இந்து இளைஞர் பேரவையின் தலைவர் அ.சூரியாகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் பத்து  காவான் நாடாளுமன்ற ஒருக்கிணைப்பாளர் அ.மோகன் அவர்கள் நிகழ்வை அதிகரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் மிகவும் சிறப்பாக இந்த காதணி விழாவை தமது பத்து  காவான் தொகுதியில் நடைபெற அவன செய்த மாநில இந்து இளைஞர் பேரவைக்கு தமது நன்றியை தெரிவித்து கொண்டதுடன்,இளைஞர் அமைப்புகள் இந்திய சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளை பாதுகாத்து அதை இளைய சமூகத்தினர் பின்பற்றும் நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வரலாற்று நிகழ்வில் பினாங்கு மாநில ம இ.காவின் துணை தலைவர் எல்.கிருஷ்ணன்.மாநில ம இ.காவில் இளைஞர் பகுதி தலைவர்.ஜெ.தினகரன்,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் தலைவர் ஆர்.ரமணி.மங்கள நாயகி அம்மன் அலையை தலைவர் சேகரன்,ஜலன் பாரு முனிஸ்வரர் ஆலய துணை தலைவர் வீரையா,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் உதவி தலைவர் ஜகாதிசன் உட்பட காதணி ளவில் குழந்தைகளின் பெற்றோர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

 ஜாவியை சேர்ந்த வின்சன் உஷாராணி குடும்பத்தினர்  தமது  1 முதல்  12 வதுடைய பிள்ளைகளை இலவசமாக நடைபெற்ற இந்த காதணி விழாவில் பங்கு பெற்றதுடன் தமது நன்றியை மாநில பேரவைக்கு தெரிவிப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக மயிலாட்டம்,உருமிமேளம்,பொய்கால் குதிரை மற்றும் கரகாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வு சமுதாயத்தில் ஒரு மற்றதையும் சமூக ஒற்றுமையும் இணைக்கும் அறிய முயற்சியாக இந்த காதணி விழா என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 101  குழைந்தைகள் அடங்கிய ஓளி நாடவை இணையத்தில் கண்ட அமெரிக்க நிறுவனம் இந்த காதணி விழாவில் பங்கு பெற்ற குழந்தைகள் அணியும் தங்க தோடை இலவசமாக வழங்கி அதரவு வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.