Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday 11 April 2017

செய்தி     : ஆர்.தசரதன்

ஏப்            : 07.04.2017

பட்டர்வொர்த்



பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக ஏற்பாட்டில் நல்லெண்ண விருந்து


பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சமூக தலைவர்களை  சிறப்பிக்கும் வகையில் அண்மையில் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒன்று இங்குள்ள பால்மின் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு கழகத்தின் தலைவர் தமிழ் மறவன்  எம்.பாலன் அவர்கள் தலைமையேற்றார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகர்களாக சமூக சேவையாளரும் மலேசிய குற்ற தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநில துணை தலைவர் டத்தோ.கே.ஆர்.புலவேந்திரன்,பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் டத்தோ மேஜர் நவநீதம்,மலேசிய இந்திய மேம்பாட்டு கழக உதவி தலைவர் தமிழ்செல்வன்,தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர்.பினாங்கு முத்தமிழ் சங்கத்தின் தலைவர் க.வு.இளங்கொவன்,செபராங்  பிறை அம்மன் பொது நல  சங்கத்தின் தலைவர் எம்.வீரையா,ஜூரு சந்திரோதயம் எம்.ஜி.ஆர் சமூக நல மன்ற தலைவர் பகவதி,துணை தலைவர் விஜயன்,துணை செயலாளர் ம.ராஜகோபால் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்க கொண்டு தலைமையுரையாற்றிய எம்.பாலன் அவர்கள் சமூக சேவையாளர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றும்,அவர்கள் தன்னலம் கருதாமல் சமூகத்துடன் இணைத்து அவர் ஆற்றுகின்ற சேவைகளை காலத்துக்கு ஏற்ப நிலையில் அவர்களை 
சிறப்பிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,டத்தோ நவநீதம்,சமூக ஆர்வலர் செல்வம் சடையன் ஆகியோர் சிறப்பு செய்யபட்டனர்.இந்நிகழ்வை திறந்து  வைத்து சிறப்புரையாற்றிய டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அரசு சாரா இயக்கங்கள் இளைஞர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்திய இளைஞர்கள் தற்போது குற்ற செயல் சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தம்  அளிப்பதாகவும் அதற்க்கு,அரசு சாரா இயக்கங்கள் அவர்களையும் இணைத்து அவர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.பினாங்கு இந்திய மேம்பாட்டு கழகம் சிறப்புடன் சேவையாற்றி வருவது பாராட்டத்துக்குரியது என்று கூறி  அவர் மேலும் சமூக நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகதில் சில மாற்றங்களை   காண பல வகைகளில் அவை துணையாக  என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பாகன் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவரின் உரையில்,தமது நீண்ட நாள் கனவான பாகன் டாலாம் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளியை கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பதாகவும்,அதற்க்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கினால் மாநில  அரசு உதவியுடன் பள்ளியை கட்டும் பணி தொடங்கலாம் என்றும் அவர் சொன்னார்.கழகத்தின் துணை செயலாளர் இராஜசேகரன் அவர்களின் நன்றியுரையுடன் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒரு நிறைவடைந்து