Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday 1 June 2021

அ.அன்பழகன் ஏசிபி பதவி உயர்வுப் பெற்றார்.

அ.அன்பழகன் ஏசிபி பதவி உயர்வுப் பெற்றார்.

Saturday 1 August 2020

இந்தியப் பெண்களின் பொருளாதார மேன்மைக்கு முக ஒப்பனைக்  கலை

 அழைப்பு விடுக்கின்றார்  டாக்டர் கி.ஹேமலதா



தொகுப்பு : ஆர்.ரமணி 


பினாங்கு மாநிலத்தில் வடக்கு,செபராங் பிறை  மாவட்டம் செபராங் ஜெயாவில்  விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு  நிலையத்தை கடந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் டாக்டர் ஹேமலதா  கிருஷ்ணன் .இவரின்  அழகு நிலையம் பல்வகை சேவைகளை வழங்குவதில் பிரசித்தி பெற்ற முக ஒப்பனை அழகு  நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.அழகு கலையில் சிறந்து விளங்கும் டாக்டர் கி.ஹேமலதா முக ஒப்பனை   அழகுக் கலையில்   வல்லுநராக இருப்பதுடன் அக்கலையில் முக ஒப்பனை அழகியல் துறையில் பி.எச்.டி எனும் டாக்டர்  பட்டமும் இவர் பெற்றுள்ளார்.

தமது விமாஸ் பியூட்டி அழகு  நிலையத்தில்  முக ஒப்பனை  அழகு சிகிச்சை,அழகுக்கலை பற்றிய தொழில்  படிப்பு,மணப்பெண் அலங்காரம் முக சிகிச்சை,தோல் பாதுகாப்பு மற்றும் அரசாங்க நிறுவங்களுடன் இணைந்து முக  ஒப்பனை கலை தொழில் துறைக்கான பட்ட  படிப்புகளை தங்களின் நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாக  தமிழ் மலரிடம் நடத்திய  நேர்காணலில் கி.ஹேமலதா  குறிப்பிட்டார்.அழகு கலையில் ஆர்வம் கொண்டு டாம் பணியாற்றிய வங்கி அதிகாரி பணியை விட்டு ஒப்பனை மற்றும் அதன் சார்ந்த துறையில் கல்வி கற்று இந்த முக ஒப்பனை அழகு நிறுவனத்தை திறந்ததாக டாக்ட்ர் ஹேமலதா சொன்னார்.

இது வரையில் 500 க்கு மேற்பட்ட பெண்களை  அழகுக்கலையில் பயிற்சி கொடுத்து சாதனையாளர்களாக உருவாக்கி யுள்ளார்.அவரிடம் முக ஒப்பனை மற்றும் இதர அழகுக் கலை பயிற்சிகளை முடித்த  மாணவர்கள்  பலரும் நாட்டின் பல பாகங்களில் சொந்த முக ஒப்பனை அழகுக் கலை நிறுவனங்களை  திறந்து  இளம் தொழில் முனைவர்களாக உருவாக்கியுள்ளார்  எனவும்  அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தனது விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு நிறுவனத்தில் தொழில் பங்குதாரர்களாக காயத்திரி அவர்கள் இருப்பதுடன் உதவி பணியாளர்களாக    6 பணியாளர்கள் தங்களின் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக அவர் மேலும் விவரித்தார்.

இந்த முக ஒப்பனை கலை பயிற்சியில்  மேலும் பல பெண்களுக்கு  வழிகாட்டவும் தயாராக உள்ளதாகக் கூறிய அவர்,இந்தியப் பெண்கள் தயக்கத்தை விட்டு  சொந்தமாகத் தொழிலை துறையில்  ஈடுபட வேண்டும் என்றும் அதற்க்கு தேவையான அடிப்படை பயிற்சிகளையும் அழகு  முக ஒப்பனை பயிற்சிகளை வழங்கும் தனது நிறுவனம் வெளியிடும் ஒப்பனை பொருட்களை விற்பனை செய்து  முகவராக  வருமானம் பெற அணைத்து உதவிகளைச் செய்ய  முடியும் என்றும் டாக்டர் ஹேமலதா நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே விமாஸ் பியூட்டி முக ஒப்பனை  அழகு நிறுவனத்தின் மையில் கல்லாக,செபராங் ஜெயா நகரில் அமைந்துள்ள தெ லெயிட் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் தனது சொந்த முக ஒப்பனை பொருள் ஒன்றையும் அறிமுக விழாவில் ஏற்று நடத்தினார் டாக்டர் கி.ஹேமலதா என்பதுடன் இந்த நிகழ்ச்சிக்கு டத்தின் மிஹ்ராஜ் பேகம் தலைமை ஏற்றத்துடன் உடன் சிறப்பு பிரமுகர்களாக மோனிசா  டான் ஸ்ரீ ரமேஷ்,டத்தோ துரைசாமி ,டத்தோ இளையராஜா அர்விந்த்,பினாங்கு இந்து சங்க தலைவர் மா.முனியாண்டி  உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  நாட்டில் உள்ள அழகு கலை  ஒப்பனையாளர்கள் மத்தியில் டாக்டர் கி.ஹேமலதா முக ஒப்பணை அழகியல் துறையில் பி.எச்.டி எனும் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியாக திகழ்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.

Wednesday 22 April 2020

அந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு  15 பில்லியன் பெற்று முதலிடம்

முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதம்


பினாங்கு

ஏப் 23

ஆர்.ரமணி

நாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான அதிக  அந்நிய நேரடி முதலீடு பெற்ற முதல் மாநிலமாக பினாங்கு திகழ்வதாக பினாங்கு முதலமைச்சர் சௌ குவான் இயோவ் பெருமிதத்துடன் கூறினார்.பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 15 பில்லியன் அந்நிய முதலீட்டை பெற்றுள்ளதை மலேசிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக்  கழகமான  மிடா (MIDA ) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 166 தொழில் துறை திட்டங்களுக்கு   அங்கிகாரம் கொண்டு  செயல்படுத்தப்பட்ட  அறிக்கையில் ஒன்றில்  வெளியிடப்பட்டதாக  அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே மொத்த உள்நாட்டு முதலீட்டுக்கு மிடா 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும்,அதில் பினாங்கு மாநிலம் உற்பத்தி தொழில் துறைக்கு 16.9 பில்லியன் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது மாநிலத்துக்கு கிடைத்த உயரிய முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநில  கொண்டுள்ள தரமான  சுற்றுசூழலின் காரணமாக   அதிகமான அந்நிய நேரடி முதலீடுகளை  மாநிலம் பெற்று வருவதாக கூறிய   முதலமைச்சர் சௌ குவான் இயோவ்,பினாங்கில் உற்ப்பத்தி மூலப்  பொருட்கள் இல்லாவிட்டாலும் ,திறன் கொண்ட மனித தொழில் ஆற்றல் கொண்ட ஊழியர்களின் காரணமாக அந்நிய நேரடி முதலீடுகளை  பெற வழிவகுப்பதாக மாநில சிறப்பு பாதுகாப்புக்கு நடடிக்கைக் குழு முகநூல் பேட்டியில் அவர் தெரிவித்தார்.


மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியில்  தயாரிப்பு சேவை  தரம் 49% முதன்மை வருமானத்தை ஈட்டி தருவதாகவும்,அதனை தொடர்ந்து  உற்பத்தி திறன் 46% கொண்டிருப்பதாக கூறிய அவர்,உலகில் தனி சிறப்பு கொண்ட உணவுவகைகளை பினாங்கு கொண்டிருப்பதால் அதில் முக்கிய பங்களிப்பை சுற்றுப்பயண  துறை கொண்டிருப்பதுடன் அங்காடி கடைகளில் சுற்றுப்பயணிகள் செலவிடுவதால்  வருமானத்தை பெற வாய்ப்பாக இருப்பதாக  மேலும் அவர் கூறினார். 

இதனுடன் மாநிலம் கொண்டுள்ள கலை,கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள்,மருத்துவ சுற்றுலா,தங்கும் விடுதிகள், உலக தரத்திலான மாநாடுகளை நடந்து கொண்டுள்ள வசதி கொண்ட மண்டபங்கள் மற்றும் நகர் புறத்தில் அமைத்துள்ள சுற்றுசூழல்கள் ஆகியவை மாநில பெரும் வருமான வாய்ப்புகளை கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை என முதலமைச்சர் சௌ விவரித்தார்.


பொது சேவை  துறையில் பினாங்கு மாநிலத்தில்  300,000 தொழிலார்கள் வேலை செய்ய வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்றும் அதில் பாதி  தொழிலார்கள் சுற்றுலா துறையில் பணியாளர்களாக இருப்பதை சுட்டிக் காட்டிய  முதல்வர் சௌ பினாங்கு நிறுவன சிந்தனைக் குழுவின் அறிக்கையில் 99%  சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது சேவை துறையில் அங்கம் கொண்டுள்ளனர்என  வெளியிட்டுள் ள அறிக்கையை சுட்டியும் அவர் கருத்துரைத்தார்.






World Birds

உலகில் உள்ள பல்வேறு அழகிய  கொண்டுள்ள பறவை வகைகளை  காணொளியை கண்டு மகிழுங்கள்.  

Sunday 19 April 2020

ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுதவி வழங்கியது 

பினாங்கு 

ஏப் 21

ஆர்.ரமணி 

பினாங்கு மாநிலத்தில் சமூக நல நல்லுதவிகளை வழங்கி வரும் வெகி பார்க் கூட்டறவு கழகம் அண்மையில் ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியது.பினாங்கு வெஜி பார்க் கூட்டறவு கழகத்தின் காப்பாளர் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் அவர்களின் தலைமையில்  அன்றாட சமையலுக்கு உதவும் 4 டான் எடையுடைய காய்கறிகள்,பழங்கள்,கீரை வகைகள்,100 அரிசி பேக்கேட்கள் என பல்வகை பொருட்களை ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர்,மற்றும் பத்து லாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் உடன் ஆயர்  ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசோப் இங் சூன் சியாங் ஆகியோரிடம் எடுத்து வழங்கினார்.




மக்கள் கோவிட் -19 நோயின் காரணமாக பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு வீடுகளிலேயே இருக்க நேர்வதால்,வழங்கப்படும் உதவிப்பொருட்களின் மூலமாக மக்கள் வெளியே செல்ல தவிக்க முடியும் என்பதுடன்,அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டு வசிப்பிட காட்டுப்பாடு ஆணையத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் ஆலோசனை கூறினார்.

இதனிடையே மனம் முவந்து ஜெலுதோங் நாடாளுமன்ற பகுதியில் உள்ள சட்டமன்ற பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை வழங்கிய பினாங்கு வெஜி பார்க் கூட்டுறவு கழகத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் கூறினார்.டத்தோ ஶ்ரீ செங் அவர்களின் சேவையானது இக்காலகட்டத்தில் மிகவும் மதிப்பளிக்ககூடுயதாக உள்ளதாக என பெருமிதத்துடன் மேலும் கூறியதுடன்,அவரைப் போல வசதிப்படைத்தவர்கள் ஒரு உதாரணமாக என்னி பிறருக்கு உதவிம் மனப்பான்மையை ஏற்றபடுத்துக்கொள்ள வேண்டும் என இராயர் குறிப்பிட்டார்.


இதனுடன் கிடைக்கப்பட்ட உதவிப்பொருட்டகள் அனைத்தும் அரசாங்க  முதன்மை பணியாளர்கள்,பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கபடும் என  விவரித்தார் இராயர்,அரசாங்கம் அறிவித்துள்ள வசிப்பிட காட்டிப்பாட்டு ஆணையை முழுமையாக கடைப்பிடித்து ஆதரவி அளிக்க வேண்டும் என்பதுடன்,மக்களுக்கான சமூக நல உதவிகள் கிடைக்க சட்டமன்னற உறுப்பினர்கள் நேரடியாக
மக்களை சந்தித்து உதவிடுப்படி ஆலோசனை கூறினார்.


Tuesday 12 November 2019

Hyopp

     பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 60ஆம் ஆண்டு  விழா 


  • ஆலமரமாய் செழித்தோங்கி  இந்து சமயம்,இளைஞர்களை நல்வழிப்படுத்திய பேரியக்கம்.



  • "தன்னலமற்ற சேவை" வழி நற்சேவை புரிந்த இளைஞர் தொண்டூழியம்



  • சகோதரத்துவம்,இந்து சமயதுக்கான  பாதுகாவலன் தலைமைத்துவம் என்றால்  அது இந்து இளைஞர் இயக்கம்.


  • நன்முத்துக்களாக  கிடைக்கப்பெற்ற  தலைவர்கள், தொண்டர் படை 






தொகுப்பு ஆர்.ரமணி ராஜகோபால் 



பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின்  60 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகின்றது.இக்கொண்டாடத்தினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 16.11.2019 ஆம் நாள்,இரவு மணி 7.00 அளவில்,செபராங் ஜெயாவில் அமைந்துள்ள  அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாபெரும் கொண்டாட்ட நிகழ்வுதனை  நடப்பு மாநிலத்தின் தலைவர் ஜெயராமன்  ஆனந்தராஜன் அவர்களின் தலைமையில் சிறப்பு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அமைக்கப்பட்டடுள்ளது.இந்த விழாவில் மலேசிய இந்து இளைஞர் பேரவை அமைய உறு துணையாக இருந்த அமைப்பாளர்கள்,முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள்,சமூக தலைவர்கள்  பெரும் திரளாக ஒன்றுக்கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல இளைஞர்களின் தலைமைத்துவ ஆற்றலை வெளிக்கொணரும் களமாக இந்து இளைஞர் இயக்கங்கள் பினாங்கு மாநிலம் தோறும் பரவி இருக்கும் நிலையில்,பினாங்கு முக்கிய   ஐந்து மாவட்டங்களிலும் இந்து  இளைஞர் இயக்கங்கள்அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகளை ஆற்ற தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்து  சமயத்தின் காவலனாக,குரலாக இளைஞர்களின் மேம்பாடு,பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை 'தன்னலமற்ற சேவை'எனும் இயக்க கொள்கை பிடிப்புடன் ஆற்றல் மிகு இளைய சமுதாயத்தை பண்படுத்தும் விதமாக இந்து இளைஞர் இயக்கங்கள் உத்வேகத்துடன் செயல் ஆற்றி வருகின்றன.
பேரவைக்கென்று கொடியும்,கொள்கை பாடலும் ஒவ்வொரு முறையும் பிரதான நிகழ்வுகளில் குறிப்பாக தேசிய,மாநில,வட்டாரம்  மற்றும் கிளையில் நடைபெறும்  நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் போதெல்லாம் சமூக பற்றும்,சமய தெளிவும்  நேர்மையுடம் கொண்ட எழுச்சியும் ஒவ்வொரு இளைஞர் மத்தியில் தோன்றி துண்டுக்கோளாக எதையும் சாதிக்கும் மன வலிமையை உருவாக்கும்  என்பது திண்ணம்.

பினாங்கு இந்து இளைஞர் இயக்க வரலாறு.

பினாங்கு இந்து இளைஞர் பேரவை அமைய முக்கிய காரணமாக இருந்தவர்,இந்து இளைஞர் இயக்க தந்தை என போற்றப்படும் கே.கேசவபாணி என்பவர்.அப்போதையா காலத்தில் 1959 ஆம் ஆண்டு திரு எஸ்.விஜயரத்தினம் ( இந்து இளைஞர் இயக்க தந்தை)பட்டர்வொர்த் நகரில் உள்ள தொழிலாாளர் அமைச்சில் வேலை செய்து வந்தார்.அச்சமயத்தில் சில இளைஞர்கள் ஒன்றிணைத்து சமூக நல சேவைகளை மக்களுக்கு செய்து வந்த வேளை அது .அந்த இளைஞர்களில் முக்கிய பங்கு வகித்தவர்களில் எஸ்.இராமச்சந்திரன்,எஸ்.ராமு,அருளாந்தம்,ராஜா,மற்றும் திரு கே.கேசவபாணி ஆகியோர்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தை தோற்றுவிக்க வேண்டும் எண்ணத்தில் முதல் இந்து இளைஞர் இயக்கம் அமைக்க முதல் அமைப்புக்குழு கூட்டம் ஒன்றை 29.4.1959 ஆம் ஆண்டு பினாங்கு இராமகிருஷ்ணா சமூக நல இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.அன்றைய தினம் மாலை மணி 5.00 க்கு அக்கூட்டம் நடைப்பெற்றது,அதில் கே.கேசவபாணி அவர்கள் முதல்  தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன்,செயலாளராக  எஸ்.ராமச்சந்திரனும் பொருளாளராக அருளானந்தம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.




அமைக்கப்பட்ட மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் மூலமாக  நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் வழியாக,இந்திய இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் மேற்கொண்டு  வெற்றியும் அடைந்தனர்.

முதல் முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கும்,ஆசிரம இல்லங்களில் உள்ள குழைந்தைகளுக்கான நிகழ்ச்சியாக இடம் பெற்றதுடன்,அதனுடன் பினாங்கு மாநிலத்தில் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய அளவிலான  4 வது இளைஞர் மாநாடு நடத்தப்பட்டு மிக பிரபலம் அடைந்ததை தொடர்ந்து , இதனுடன் மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் பேரின் ஏற்பாடு செய்யபட்ட பல்வேறு சமய,விளையாட்டு மற்றும் பொது  நிகழ்வுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நல்ஆதரவு  பெருக தொடங்கியது.

பல்கி பெருகிய இளைஞர்களின் ஆதரவின்  மூலமாக மாநிலத்தின் பல பாகங்களில் இந்து  இளைஞர் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட.அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவராக பொறுப்பு வாய்த்த திரு கே.குமரகுரு அவர்களின் முயற்சியில் நிபோங் திபால் இந்து இளைஞர் இயக்கம்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்கம்,அல்மா இந்து இளைஞர் இயக்கங்கள் முறையே 1976 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டன.
1977 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பினாங்கு மாநில  இந்து இளைஞர் ஒருங்கிணைப்பு குழு ஒன்றினைந்து அமைக்கப்பட்டு அணைத்து  இந்து இளைஞர் இயக்கங்களின் கிளைகளை ஒன்றிணைக்க அரும் பங்காற்றினார் எஸ்.குமரகுரு அவர்கள்.முதலில் பினாங்கு இந்து பிரோவின்ஸ் வேலெஸ்லி  எனும் பெயரில் இயங்கிய மாநில  இந்து இளைஞர் இயக்கம் பின்பு 12.5.1984 ஆம் ஆண்டு தேசிய இயக்கங்கள் பதிவு இலாக்காவில் பதிவு பெற்று PPP/PG558/58-5 எனும் பதிவு எண் வழங்கப்பட்டு துடிப்புடன் மேலும் இயங்கியது.

2007 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டு அமைச்சின்  கீழ் பதிவு கொண்ட இளைஞர் இயக்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு சட்ட விதியின் அடிப்படையில்,26.11.2008 ஆம் ஆண்டு பினாங்கு இந்து இளைஞர் பேரவையின் சிறப்பு ஆண்டுக்கூட்டம் இரவு 8.00 மணிக்கு பட்டர்வொர்த் டேவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அப்போதைய தேசிய தலைவராக இருந்த கே.இராசச்செல்வம்,துணை தலைவர் ஆர்.எல் .கிருஷ்ணன் மற்றும் செயலாளராக  இருந்த வீ.விஜயன் அவர்களின் தலைமையில் கூட்டாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தேசிய துணை செயலாளரும்,ஜூரு இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவருமான ரமணி ராஜகோபால் அவர்கள்   பினாங்கு மாநில  இந்து இளைஞர் பேரவையின்  மாநில தலைவராக  புதிய  இளைஞர் விளையாட்டு அமைச்சு இயக்கங்கள்  பதிவு சட்டத்துக்கு உட்பட்டு தலைவராக தேர்வு பெற்றார்.

இதனுடன் புதிய இளைஞர் விளையாட்டு அமைச்சு கீழ் பதிவு கொண்ட இளைஞர் இயக்கங்கள் எனும் பதிவில் மாநில இந்து இளைஞர் பேரவைக்கு PPBM 0015-3091/09 எனும் பதிவு எண் வழங்கப்பட்டது.

"தன்னலமற்ற சேவை" எனும் கொள்கைக்கு இலக்கணமாக பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை இந்து சமயம்,இளைஞர்கள் முன்னேற்றம்,பொருளாதாரம்,சமூக நலம் எனும் அணைத்து துறைகளிலும் அதி வேகமான நிகழ்வுகளை நடத்தி இளைஞர்களின் நல்ல குடிமக்களாக விட்டுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றிட உருவாக்கம் செய்தது என்றால் அது மிகையாகாது.

 பினாங்கு மாநில இளைஞர் மன்றம்,தேசிய இந்து இளைஞர் பேரவை,மாவட்ட இளைஞர் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் மன்றங்களில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு பலரும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவதுடன் 22 இந்து இளைஞர் இயக்க கிளைகளும் 5 மாவட்டங்களில் இந்து இளைஞர் இயக்க மாவட்டங்களில் இயங்கும் வண்னம் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையில் பொருப்புகளை வகித்த முக்கிய தலைவர்கள்.




1.ரத்னா ஸ்ரீ கே.கேசவபாணி
2.ரத்னா ஸ்ரீ கே.குமரகுரு  1977-1981
3.இளைஞர் திலகம் மு.பூபாலன் 1981-1986
4.ரத்னா ஸ்ரீ, டத்தோ வீ.சிதம்பரம் 1986-1995
5.இளைஞர் திலகம் பி.இராஜேந்திரன் 1995-2008
6.இளைஞர் திலகம் ஆர்.ரமணி 2008-2010
7.திரு .சூரிய குமார் 2010-2012
8.ரத்னா ஸ்ரீ ந.மகேந்திரன் 2012-2016
9.திரு.ஆ.ஜெயராமன் நடப்பு தலைவர்.


பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை பெற்ற விருதுகள்.

1.சிறந்த மாநிலம் விருது 2008 தேசிய இந்து இளைஞர் பேரவை 60 ஆம் ஆண்டு நிறை விழா

2.சிறந்த மாநில விருது 2009 தேசிய இந்து இளைஞர் பேரவை ஆண்டுக்கூட்டம்

3.சிறந்த இந்து இளைஞர் மாநில பேரவை விருது 2010 தேசிய இந்து இளைஞர் பேரவை ஆண்டுக்கூட்டம்



மலேசிய இந்து இளைஞர் பேரவையில் பதவி வகித்த பினாங்கு பொருப்பாளர்கள்.

1.ரத்னா ஸ்ரீ கே.கேசவபாணி தேசிய தலைவர்
2.டத்தோ வீ.சிதம்பரம் தேசிய தலைவர்
3.திரு.ந.மகேந்திரன் தேசிய தலைவர்
4.திரு பி.இராஜேந்திரன் தேசிய பொருளாளர்
5.திரு ஆ.சூரியகுமார் தேசிய துணை தலைவர்.
6.திரு.ஆ.ஜெயராமன் தேசிய துணை தலைவர் 
7.திரு.ஆர்.ரமணி தேசிய உதவி தலைவர்

 8.திருமதி எஸ்.சரஸ்வதி தேவி ஆட்சிக்குழு
9.திரு எம்.பார்த்திபன் ஆட்சிக்குழு


உள்ளன்போடு நினைவில் நினைத்து நிற்பவர்கள் 

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை 60 ஆண்டு நிறைவை எய்தியில்லை இவ்வேளையில்,இந்த இயக்கம் அமைக்க பல இன்னல்களையும்,போராட்டங்களையும் நடத்தி அமைக்கப்பட்டவுடன் பொருளாதார,சமய சமுதாய அக்கறையுடன் பலர் தியாகங்களை புரிந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களை  இந்நேரத்தில் நினைத்தும் பார்க்கின்றோம். நடப்பு மாநில ஆ.ஜெயராமன் அவர்களின் தலைமையில் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது சாலை சிறந்தது அன்னாரின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.இந்த இயக்கம் அமைக்கப்பட்டு பேரவையாக மாற்றம் பெரும் வகையில் பலர் தொண்டற்றியும்,மறைந்தும் உள்ளனர்.

பினாங்கு மாநிலத்தில் போக்கோக் மாச்சாங் இந்து இளைஞர் இயக்கம் தனி மண்டபம் கொண்டு செயலாற்றியதும்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்கத்துக்கு பனி மனை கொண்டும்,ஜூரு இந்து இளையர் இயக்கம்,ஹூஜோங் பத்து இந்து இளைஞர் இயக்கம் அமைய பெற்று இயங்கியது காலத்தால் நினைவில் இருக்கக்கூடியவை.

காலங்கள் மாறலாம் காட்சியும் மாறலாம் அனால் இந்து இளைஞர் இயக்கம் என்ற உணர்வுடன் முன்னாள் இந்து இளைஞர் இயக்கம் எனும் சேவை அடிப்படையில், சட்டத்துக்கு உட்பாட்டு மாறாமல் பழைய நினைவுகளும் சேவையும்  மங்கிடாமல் பெயர் பெற்று இன்றளவும் இந்து இளைஞர் முன்னாள் இயக்கம் என்று இருப்பது பட்டர்வொர்த் முன்னாள் இந்து இளையர் இயக்கம். தனக்கென இக்கால இளைஞர்களுக்கு நிகராக பல அறிய  சேவைகளுக்கும் உயிரூட்டபடடுள்ளது.  அந்த இயக்கத்தின் தலைவராக  எம்.பார்த்திபன்,பொறுப்பு வகித்த பிறகு அது செயல்படச தொடங்கி அண்மையில் இரண்டாம் ஆண்டு நிகழ்வினை தெ லையிட் தகிக்கும் முத்திரை பதியும்படியான நிறைவு விழாவை கொண்டாடியது.


மேலும் இந்து இளைஞர் இயக்கதின் மூலமாக சேவையாற்றிய டத்தோ கோபாலகிருஷ்ணன்,வி.சிதம்பரம்  காலத்தில் செயலாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன்,டத்தோ ஸ்ரீ தனேந்திரன்,மறந்த போக்கோ மாச்சாங் இந்து இளைஞர் இயக்க முன்னாள் தலைவர் இராஜேந்திரன்,முன்னாள் ஜூரு  இந்து இளைஞர் இயக்க தலைவர் த.குமார்,இராஜேந்திரன் ஏனைய சேவைகள் ஆற்றிய சுதாகரன்,செபராங் பிறை கருமாரியம்மன் தலைவர் வி.அமரேசன்,சோனாலி வீரையா .ஜாலான் பாரு இந்து இளைஞர் இயக்க தலைவர் சியாம் மானியம்,பாயான் பாரு இந்து இளைஞர் இயக்க தலைவி சரஸ்வதிதேவி,செபராங் ஜெயா இந்து இளைஞர் இயக்க தலைவர்  இந்துனன்,புக்கிட் தெங்கா இந்து இளைஞர் இயக்க தலைவர் ஹரிகிருஷ்ணன்,மோகன்,குமாரி ரேகா ஆகியோர் இயக்க சேவையில் இணைந்து சேவையாற்றியவர்கள்.



Read more »

Friday 1 November 2019

Bm

புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு 30 லச்சம் வெள்ளியில் நான்கு மாடி இணை கட்டடம் கட்டபடும்

துணை கல்வி அமைச்சர் தியோ நி சிங் அறிவிப்பு

புக்கிட் மெர்தாஜாம்

நவ 3

ஆர்.ரமணி

புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு 30 லட்சம் வெள்ளி செலவில் 4 மாடிக் கொண்ட இணை கட்டம் ஒன்றை கட்டுவதற்கு,பொது பணி அமைச்சின் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் கட்டுமானப் பணிகள்ஆண்டு தொடங்கபடும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

நேற்று பள்ளிக்கு வருகையளித்த துணை கல்வி துணை அமைச்சரை எதிர் கொண்டு புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் அ.இராஜராஜன் மற்றும் பள்ளியின் மெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.தமிழ்செல்வன்,பள்ளி வாரியக்குழு தலைவர் கோபால் கிருஷ்ணன்,கல்வி அமைச்சிர் அதிகாரிகள்  அகியோர் உடன் கலந்து கொண்டனர்.

இந்த இணை கட்டடத்தில் 9 வகுப்பரை,தலைமையாசிரியர் அரை,ஆசிரியர் அரை,அலுவலகம் மற்றும் 6 பல்வகை வசதிகளை கொண்ட அரைகளை அமைக்கபடும் என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் மேலும் குறிப்பிட்டார்.

இதனுடன் 2019 ஆம் ஆண்டில் பினாங்கி மாநிலத்தில் உள்ள 28 தமிழ்பள்ளிகளுக்கு 2.95 மில்லியன் வெள்ளி கல்வி அமைச்சின் சிறப்பு நிதியிலிருந்து வழங்கபட்டதாக மேலும் அவர் விவரித்தார்.

இதனிடையே இந்த இணை கட்டடம் அமய ஒத்துழைப்பு வழங்கிய புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம்,பாடாங் லாலாங் சட்டமன்ற உருப்பினர் சொங் எங்,பிராப்பிட் சட்டமன்ற உறுப்பினர் எங் லீ லீ,புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற இந்திய சிறப்பு அதிகாரி எம்.ஜி.குமார் மற்றும் பினாங்கு மாநில கல்ஙி அமைச்சு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ஙதாக பள்ளியின் தலமையாசிரியர் அ.இராஜராஜன் தெரிவித்துக்கொண்டார்.பினாங்கு கல்வி இலாக்காவில் பள்ளிக்கான இணை கட்டிட நிர்மாணிப்புக்கான போதிய நிதி ஒமுக்கபட்டுள்ள நலையில் பொது பணி அமைச்சின் உரிய அங்கிகாரம் கிடைத்தவுடன்அடுத்த ஆண்டு பதிய 4 மாடிக் கொண்ட கனடுமானப் பணிகள்தொடங்கபடும் என நம்பிக்கை கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதனுடன் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளிக்கு இணை கட்டிடம் அவசியமான ஒன்று என்பதால் இப்பகுதியில் உள்ள இந்திய மாணவர்பளுக்கு போதிய வசதிக்கொண்ட கட்டடம் தேவையான ஒன்று என்று மெர்தாஜாம் நாடாளுமன்ற இந்திய சிறப்பு அதிகாரி எம்.ஜி.குமார் தமிழ் மலரிடம் கூறினார்.
1923 ஆம் ஆண்டு புக்கிட் மெர்தாஜாம் தமிழ்பள்ளி செயல் பட தொடங்கியது என்பது வரலாறு.