Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 3 December 2015

செய்தி : ஆர்.தசரதன்

ஆக்        : 08.10.2015

பினாங்கு


பினாங்கு மாநில தபேலா இயக்க விருந்தில் மாணவர்கள் கௌரவிப்பு



பினாங்கு மாநில தபேலா இயக்க ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம்   இந்த இயக்க மாணவர்கள் நீண்ட நீரம் தபேலா இசைத்து மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றதை கொண்டாடும் விதத்தில் விருந்து நிகழ்வு  ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன்  ஏற்பாடு செய்யபட்டது.இந்த விருந்து நிகழ்வு இங்குள்ள பினாங்கு சுங்கை நிபோங்  பேஸ்தா இருப்பிட பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது.இந்த நிகழ்வு மாநில தபேலா இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.சரவணன் அவர்கள் தலைமையில் நடந்தது.


நிகழ்வில் தொடக்க அங்கமாக ஷேன் ஹோம்  ஆசிரமத்தை சேர்த்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தபேலா இசையை முழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து நிகழ்வின்  தலைமையுரையை  மாநில தபேலா  இயக்கத்தின் தலைவர்  டாக்டர் எம்.சரவணன் உரையாற்றினார் அவர் தமதுரையில் மாநில தபேலா இயக்கத்தின் நீண்ட நாள் கனவான மலேசியா சாதனை புத்தகத்தில்  இடம் பெற ஒரு முயற்சியாக நீண்ட நேரம் தபேலா இசை நிகழ்வை  வெற்றிகரமாக நடைபெற  அயராது உழைத்த தமது மாநில தபேலா இயக்க நிர்வாகத்தினர்,மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல்,நன்கொடைகளை வழங்கிய என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே .சுந்தரம்   ,வள்ளல் ரங்கசாமி பிள்ளை குடும்பத்தினர் மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமாசாமி,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் மற்றும் மாநில தபேலா இயக்கத்தின் பயிற்சி  மாணவர்கள்   அனைவருக்கும் தமது நன்றியை அவர்  தெரிவித்துக் கொண்டார்.

இதனுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர் அவர்கள் தமதுரையில் மலாய்சியா சாதனை புத்தகத்தில் சதிட்ட மாநில தபேலா இயக்கத்தை வெகுவாக பாராட்டிதுடன்,தற்போது நாட்டில் சில பொறுப்பற்ற நபர்களால் இனங்களிக்கிடையே பதத்தமான விமர்சனக்களை செய்த போதும் பல இன மக்களை இந்த நிகழ்வில் தமது இசையின் மூலம் ஒன்று படுத்திய மாஸ்டர் சக்திவேல் அவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

இரவு விருந்துடன் கூடிய இந்த நிகழ்வில் சாதனை புரிந்த மாணவர்கள் அனைவருக்கும் மலேசியா சாதனை புத்தக நினைவு சான்றிதழ் வழங்க பட்டது,இந்த சான்றிதழ்களை மாநில தபேலா இயக்கத்தின் ஸ்தாபகர் மாஸ்டர் சக்திவேல் எடுத்து வழங்கினார்.இந்த வ்வரலற்று சிறப்பு நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ராயர், என்ரிகோ நிறுவன உரிமையாளர் எஸ்.கே சுந்தரம்,டத்தோ கோரிஸ்,என்.ஆர்.ரத்னம் பிள்ளை,மாஸ்டர் குமரன்  உட்பட தபேலா  பயிற்சி மாணவர்களின் குடும்பத்தினரும்  திரளாக கலந்தி சிறப்பித்தனர்.


பட விளக்கம்

1.சாதனை மாணவர்களுடன் மாஸ்டர் சக்திவேல்

2. நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு பிரமுகர்கள்

3.நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்

5.சிறப்பு தபேலா வாசிட்ட மாணவர்களின் ஒரு பகுதி 
 
 
 
 
 
 
 
 
   

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home