Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday 25 September 2017

மருத்துவர் ஜெய  ஸ்ரீ சீனிவாசன் இல்ல நவராத்திரி விழா  கொண்டாட்டம்

ஜார்ஜ்டவுன்

செப் 27.09.2017

ஆர்.தசரதன்


பினாங்கு பந்தாய்  தனியார் மருத்துவமனையின் புற்று நோய் பிரிவு  மருத்துவர் நிபுணர்   ஜெய ஸ்ரீ   சீனியவாசன்  அவர்களின் இல்லத்தில் நடந்த நவராத்திரியை விழாவில் திறளானோர் கலந்து கொண்டனர்.அண்டை அயலார் சுற்றத்தார் வழங்கிய கலை நயம் கொண்ட சிற்பங்கள்  கொலுவில் வைக்கப்பட்ட நிலையில் நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜாலான் ஜெலுத்தோங்கில்  அமைந்துள்ள மருத்துவர் ஜெய ஸ்ரீ அவர்களின்  இல்லத்தில் இந்த நவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு அங்கமாக முருகனின் ஆறு படை வீடுகளின் தனித்துவத்தை விளக்கும்  சிற்ப அலங்கரங்கள்   அணிவகுத்து  நின்ற காட்சி காண்போரை கவர்ந்தது.

வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட   கடவுளின் வரலாற்றை விளக்கும் வகையில் கலை  நய சிற்பங்களை அழகுற அலங்கரம் செய்து வரும் மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் குடும்பத்தினர்,அழைக்கப்பட்ட வருகையாளர்களுக்கு  நவராத்திரி விழா வழிபாட்டில் கலந்துக் கொண்டு பிராத்தனையில் ஈடுபடுத்துவதுடன், பல்வேறான அரு  சுவை உணவுகளை வழங்கி வருகையாளர்களின் நன்மதிப்பை பெற்று திகழ்கிறார்.

நவராத்திரி விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு தேங்காய் ,பழம்,பாக்கு வெற்றிலை  போன்ற  மங்களகரமான பொருட்களை  இன்முகத்துடன் கொடுத்து வருகை மேற்கொண்டவர்களை மனதை நிறைவு செய்து ஒவ்வொருவரையும் வழி  அனுப்பி வைக்கும் முறையானது   அவரின் உயரிய குண நலன்களை பறை சாற்றுகிறது என்பது குறிப்பிடதக்கது.

பினாங்கை  பொது பஜனை குழுவை சேர்த்த  ராமா என்பவற்றின் இன்னிசை திருமுறை பாடல்கள்   பாடி  நவராத்திரி விழா நிறைவடைந்தது.இந்த நவராத்திரி சிறப்பு நிகழ்வில் ஸ்ரீ  டெலிமா சட்டமன்ற உறுப்பினர்  நேதாஜி இராயர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள்   கலந்துக் கொண்டு  சிறப்பித்தனர்.


பட விளக்கம்

நவராத்திரி விழாவில் கலை நயம் கொண்ட சிற்பங்கங்கள் கொலுவில் வைக்கப்பட்டுள்ள  காட்சி

நவராத்திரி விழாவில் கலந்துக் கொண்டவர்களின் ஒரு பகுதியினர்.

மருத்துவர் ஜெய ஸ்ரீ சீனிவாசன் மற்றும் சிறப்பு பிரமுகர் நேதாஜி இராயர் அவர்கள் 




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home