Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 28 August 2015

செய்தி : தசரதன்
ஆகா     : 30
புக்கிட் மெர்தாஜம்



ஜூரு வட்டார பகுதியில் டெங்கி காச்சல் பீடிப்பு
சுகாதரத்தை பேன  மக்கள் அறிவுறுத்து



ஜூரு உன்புற பகுதிகளில் ஒருவருக்கு டெங்கி காச்சல் பீடிக்கபட்டு புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதை  தொடர்ந்து இந்த பகுதில்,மத்திய புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா  டெங்கி கொசுக்களை ஒழிக்கும்  நடவடிக்கையில் நேற்று இறங்கியது.

இங்குள்ள தாமான் செண்டான பகுதில் நபர் ஒருவருக்கு  டெங்கி காச்சல் பீடித்ததின் பேரில் டெங்கி கொசுக்களை ஒழிக்க முன் ஏற்பாடக புகை அடித்து கொசு ஒழிப்பு   நடவடிக்கை  மேற்கொள்ளபடுவதாக புக்கிட் மெர்தாஜம் மாவட்ட  சுகாதார இலக்கா அதிகா ரி நாசரூடின் கூறினார்.

தாமான் செண்டானா ,ஜுரு,ஜூரு சிறு ரக தொழிற்சாலை பகுதிகளில் கட்டம் கட்டமாக டெங்கி கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளபட உள்ளதாக  அந்த அதிகாரி மேலும் சொன்னார்.இதனிடையே இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின்  வசிப்பிட பகுதிகளை   சுத்தமா வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தினார்.


பட விளக்கம்

 பணியில்  ஈடுபட்ட மாவட்ட சுகாதார பணியாளர்களின் ஒரு பகுதியினர் 
  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home