Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 28 August 2015

செய்தி : தசரதன்
ஆக  : 29
ஜார்ஜ் டவுன் 


பினாங்கில்  உள்ள பல பகுதிகளில் புகை  மூட்டம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததுடன்,காற்றின் தரம் மோசமாக இருந்ததாக  கண்டறியப்பட்டது.

சுகாதாரம் சமூக நலன்  மற்றும் சுற்றுச்சூழல் தலைவர், பீ  பூன் போ நேற்று கூறினார். நேற்று  காலை 9 மணிக்கு ஜார்ஜ் டவுனில் பகுதியில் காற்றின் தரம்  மாசுஏற்பட்டதுடன் கு  றியீட்டெண்  58 ல் இருந்து 63 உயர்ந்ததாக அவர் சொன்னார்.இதனிடையே செபராங் ஜாய பகுதியில்  (ஏபிஐ) 80 இலிருந்து  (92) ஏபிஐ காற்றின் தரம்  மற்றும்  கண்டதாக  பினாங்கு அறிவியல் பல்கலைகழகம் குறிப்பிட்ட  அறிக்கையை சுட்டிக்காட்டி  அவர் மேலும் சொன்னார்.

வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மக்கள்  குறைக்க வேண்டும் என்று அறிவுருத்திய அவர் இது ஒரு தற்காலிக நிலையாக பருவ நிலை மாற்றமே என்றும் அவர் சொன்னார்.

 திடீரென்று ஏற்படும் இந்த காற்றின் தூய்மைக்கேடு  அதிகரிப்பின்  காரணமாக  தொண்டை புண், இருமல் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெற பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார். 

காற்றின் தரம்  50  ஏபிஐ  நல்ல நிலை என்றும் 51-100 மிதமானது என்றும்  101-200 ஆரோக்கியமற்றது , 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது என்பதுடன்   300 மேற்பட்ட காற்றின் தரம்  ஆபத்தானது என்றும் மதிப்பிட பாடுவதாக அவர் சொன்னார்.

பட விளக்கம்

பீ  பூன் போ


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home