Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 16 September 2015


செய்தி  : ஆர்.தசரதன்
செப்      : 18.09.2015
புக்கிட் மெர்தாஜம்



மா.ராஜகோபால் அவர்களின் 70ஆம் பிறந்த நாள் விழாவில்
சமூதாய தலைவர்கள் வாழ்த்து



புக்கிட் மெர்தாஜம் ஜூரு வட்டாரத்தில் சமூக சேவையாளரும்,ஜூரு தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் தர்மகர்தாவும்,புக்கிட் மெர்தாஜம் ஐ பி.எப் தொகுதி தலைவருமான திரு மா.ராஜகோபால் தமது 70ஆம் ஆண்டு பிறந்த தின விழாவை தமது ஜூருவில் உள்ள தமது  இல்லத்தில் நேற்றைய முன்தினம் கொண்டாடினார்.

அவரின் பிறந்த தினத்தின் கொண்டாடத்தில் அரசியல்,சமூக,அரசு சார்பற்ற தலைவர்கள் மாலைகளை அணிவித்து திரு மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர்.இந்த நிகழவில்  சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மாநில ஐ பி.எப் பினாங்கு மாநில தலைவர் திரு க.எழுமலை,கெடா மாநில ஐ பி.எப் தலைவர் திரு வேலாயுதம்,பினாங்கு மாநில ஐ பி எப் செயலாளர் திரு தங்கராசு,பினாங்கு மாநில இந்தியர் மேம்பட்டுக் கழக தலைவர் எம்.பாலன், பினாங்கு மாநில மலேசியா இந்து இளஞர் பேரவை தலைவர் ந.மகேந்திரன்,கூலிம் பாண்டார் பாரு இந்தியர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கோவி.தியாகராஜன்,நிபோங் திபால் நாணய கூட்டுரவு சங்க தலைவர் ஜெ.தியாகராஜன்,பாடங் செராய் கெரக்கான் கட்சி தலைவர் எம்.மாரிமுத்து ,டாக்டர் எம் .முரளி,ஜூரு பெற்றோர் ஆசிரியர் முன்னால் தலைவர்கள் ம.நாராயணசாமி ,மா.வீரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு காளிதாஸ்,செபெராங் பிறை தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் திரு கணேசன்,ஜூரு தேவி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தலைவர் சுரேஷ் சோமு,புக்கிட் மெர்தாஜம் ஐ பி எப் தொகுதி பொறுப்பாளர் எஸ்.பன்னிர்செல்வம்  உள்ளிட்ட மா.ராஜகோபால் அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.


பட விளக்கம் 

மா.ராஜகோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூரிய  எம்.பாலன் உடன் திரு வேலாயுதம் மற்றும் திரு எழுமலை 







மகனை தேடும்   தந்தை





புத்தி சுவாதீனம் உடைய தமது மகன் மா.பாண்டியன் வீட்டை விட்டு சென்று  இன்னும் வீடு திரும்பாதது கண்டு தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மா.பாண்டியனின் தந்தை திரு மாணிக்கம் சொன்னார்.29 வயதான தமது மகனை  எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்  இது குறித்துசிம்பாங் ஆம்பாட் காவல் நிலையத்தில் புகர் ஒன்றையும் தாம் செய்திருப்பதாக  அவர் மேலும்  சொன்னார்.

ஒரு விபத்தின்காரணமாக தமது மகனின் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தனிமையிலே என்றும் இருந்த  தமது மகன் வீட்டை விட்டு கடந்த 12.08.2015 ஆம் நாள் சென்று விட்டதாக நண்பனிடம் தெரிவித்தார்.தமது மகனை காணும் பொது மக்கள் 017-4064183என்ற  தமது கை தொலைபேசிக்கு அழைத்து தகவல் கொடுத்து உதவுமாறு  திரு மாணிக்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.



புட்டர்வொர்த்   இந்து இளைஞர் இயக்க ஏற்பாட்டில் கணபதி ஹோமம்


கடந்த ஞயிற்றுக்கிழமை கலை மணி 8.30 க்கு  இங்குள்ள தாமான் ரியாங்,பட்டர்வொர்த் பகுதியில் அமைந்துள்ள இயக்க அலுவலகத்தில் கணபதி ஹோமம் ஒன்று சிறப்புடன் நடைபெற்றது இந்த ஹோமம் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க  வேண்டியும்  பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீக்க பொருட்டு இந்த   கணபதி ஹோம் நடத்தபட்டதாக நிகழ்வின் ஏற்பட்டுக்குழுவின் தலைவர் எஸ்.லோகநாதன் சொன்னார்
இந்த கணபதி ஹோம நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக மலேசியா இந்து இளைஞர் பேரவை தலைவர் சிறப்பு வருகை புரிந்ததுடன் அவருடன் மலேசியா இந்து இளைஞர் பேரவையின் துணை செயலாளர் எ,ஜெயராமன்,மலேசியா காற்பந்து முன்னால் பயுற்றுனர் டத்தோ பி.குப்பன்,மாநில இந்து இளைஞர் பேரவை உதவி தலைவி ரேகா சண்முகம்,மற்றொரு உதவி தலைவர்
வி,கே,விக்னேஸ்வரன்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்க தலைவர் எஸ்/லோகநாதன்,மாநில பேரவை ஆலோசகர் எம்,பார்த்திபன் மற்றும் இயக்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த சிறப்பு ஹோமத்தை பட்டர்வொர்த் சித்தி விநாயகர் ஆலயத்தின் குருக்கள் திரு,சுப்ரமணியமும் அவருக்கு உதவியாக சென்னையை சேர்ந்த திரு  ரவி குருக்கலும்  செய்தனர்.பூரண கும்ப அலங்காரதுடன் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வருகை புரிந்த இயக்க பொறுப்பாளர்களுக்கு பிரசாதம் வழங்க பட்டது,