Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Tuesday 21 April 2009

Labels:

Sunday 19 April 2009

தமிழக வரலாற்றுக் குறிப்புகள்

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.

***

அரசர்கள்/அரசகுலங்கள்:

இரண்டாம் நூற்றாண்டு வரை: சேர சோழ பாண்டியர்களும் வேளிர்களும்.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை: களப்பிரர்கள்
ஏழாம்/எட்டாம் நூற்றாண்டு: பல்லவர்களும் பாண்டியர்களும்
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து: சோழர்கள்
1300 முதல் 1650: விஜயநகரப் பேரரசு/ நாயக்கர்
சிறிது காலம்: மராத்தியர்கள்
பதினேழாம் நூற்றாண்டிலிருந்து: ஐரோப்பியர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து: ஆங்கிலேயர்கள்

காலங்கள்:

சிந்து வெளி நாகரிகம்: 3300 பி.சி. முதல் 1300 பி.சி. வரை
இரும்பு காலம்: 1200 பி.சி. முதல் 300 பி.சி. வரை (அப்படியென்றால் சிந்து வெளி நாகரிகத்தினர் இரும்பினை அறியவில்லை என்று பொருளா?)

சேரப் பேரரசு: 300 பி.சி. முதல் 200 ஏ.டி.
சோழப் பேரரசு: 300 பி.சி. முதல் 1070 ஏ.டி.
பாண்டியப் பேரரசு: 250 பி.சி. முதல் 1345 ஏ.டி.

சாதவகனர்: 230 பி.சி. முதல் 220 ஏ.டி. (சிலம்பில் இவர்கள் நூற்றுவர் கன்னர் எனப்படுகின்றனர்)

குப்தர்: 280 ஏ.டி. முதல் 550 ஏ.டி.
விஜயநகரம்: 1336 முதல் 1646 வரை
கும்பனி அரசு: 1757 முதல் 1858 வரை
ஆங்கில முடியரசு: 1858 முதல் 1947 வரை

மற்றவை:

இறையனார் அகப்பொருள்: 10/11ம் நூற்றாண்டு; நக்கீரரால் இயற்றப்பட்டது. முத்தமிழ்ச் சங்கங்களைப் பற்றி பேசும் ஒரே இலக்கியம்/நூல்.

தொல்பொருள் ஆய்வுகள் தமிழகத்தில் மனிதர்களுக்கு மூத்த இனம் (ப்ரோடோ மனிதன்) 500,000 பி.சி.யிலிருந்து வாழ்ந்ததாகச் சொல்கின்றன. மனிதர்கள் 50,000 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆதிச்சநல்லூரில் 1000 பி.சியிலிருந்து தொடக்கக் கால தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் அரசர்களின் வரிசை: வேந்தர் --> அவர்களுக்குக் கீழே --> வேள்/வேளிர் --> அவர்களுக்குக் கீழே --> கிழார் --> அவர்களுக்குக் கீழே --> மன்னர்.

தக்காணம் மூன்றாம் நூற்றாண்டு பி.சியில் மௌரியப் பேரரசின் கீழ் இருந்தது; முதல் நூற்றாண்டு பி.சி. முதல் இரண்டாம் நூற்றாண்டு ஏ.டி வரை நூற்றுவர் கன்னர் (சாதவ கன்னர் - சாதவகனர்) தக்காணத்தை ஆண்டார்கள்.

அசோகரால் வைக்கப்பட்ட தூண்களில் (273 பி.சி. முதல் 232 பி.சி. வரை) சோழ, பாண்டிய, கேரளபுத்திரர்களின் பெயர்கள் இருக்கின்றன. அவர்கள் மூவரும் அசோகருடன் நட்புறவுடன் இருந்திருக்கிறார்கள்.

கேரளபுத்திரர்கள் என்று அசோகரின் தூண்கள் சொல்வதால் கேரளம் என்ற பெயர் தொன்மையானது என்று தோன்றுகிறது. சேரலம் என்ற பெயர் வடக்கே கேரளம் என்று திரிந்து தற்போது சேரலத்திற்கு உரிய பெயராக நிலை நின்றிருக்கலாம்.

கலிங்க அரசன் கரவேலனின் ஹதிகம்பா கல்வெட்டுகளில் 250 பி.சி முதல் 150 பி.சி. வரையில் இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணி பேசப்பட்டிருக்கிறது.

மலையாள மொழி தனது தனித்தன்மையை 9/10ம் நூற்றாண்டில் பெறத்தொடங்கியது.

பாண்டிய அரசன் ச்ரிமாறன் ச்ரிவல்லபன் 840ம் வருடம் ஆண்டிருக்கிறான். பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஆண்ட அரசன் இவன்.

இராஜராஜ சோழனின் ஆட்சி 985ல் தொடங்கியது.

ஹொய்சல மன்னன் விஷ்ணுவர்த்தனனின் காலம் 1118.

மாலிக் காபூர் மதுரைக்கு 1311ல் படையெடுத்து வந்தான்.

மதுரை சுல்தான் அரசு: 1311 முதல் 1371 வரை

விஜயநகர அழிவு: 1564 (சௌராஷ்ட்ரர்கள் மதுரைக்கு வந்த காலம். அப்படியென்றால் மதுரையில் சௌராஷ்ட்ரர்கள் ஏறக்குறைய 450 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்).

திருமலை நாயக்கர் 1659ல் இறந்தார்.

தமிழராய் பிறந்தோம்




உலகத்து மொழிகளின் மூத்த மொழியாக கருதப்படுவது நமது தாய் மொழியான தமிழ்.இந்த அமுத மொழியில் பிறந்த நாம் எப்படி இன்று வாழ்கிறோம்.நமக்குள் பல விதமான பேதங்களை உபயோகபடுத்தி நம்மிடையை இடவேளியே உறுவாக்கி வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலை மாற்றி அமைப்பது நம்முடைய கடமையாக கொண்டு முயல வேண்டும்.நீண்ட பயனம் ஒரு முதல் அடியில் தொடங்குகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம். தமிழர் என்ற நாகரீகம் சிந்து வெளியிலிருந்து புரப்பட்டு பல இனங்களின் மேம்பாட்டிற்க்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது, ஆனால் தமிழ் சமுதாயத்தை பொருத்த வரையில் எந்த நிலை என்று சற்று சிந்திப்போம்.


நம்மை நாமே வெட்டி சாய்துக் கொள்வதுதான் நமது பண்பாடா?ஒற்றுமை என்ற வாசகத்தை மனதலவில் பற்றிக் கொண்டு,நமது சமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம்.இன உணர்வு மிக்க சமுதாயமாக இருந்து சமுதாய முன்னேற்றமே நமது தாரக மந்திரமாக கொண்டு நாம் முயல்வோம்.

இல்லறத்தில் ஆன்மீகம்

இறையுணர்வு என்பதே அன்புவுணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோன்றமாகும்.

எனவேதான் அருள் என்னும் அன்பு ஈன்று குழுவி என்கிறார் வள்ளுவர். உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் என்றும் இறைவனை அடையலாம் என்பதை இந்து சமயம் காட்டுகிறது.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் -வள்ளுவர்.

இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளிலும், ழ்வார் கதைகளிலும் தனை நாம் அறியலாம்.

"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்ல
நாடேயிடை மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"

இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்ததை ஒழித்துவிடின் -

இதைதான் சமயம் கூறுகிறது. உனக்கிட்ட கடமைகளை ஒழுங்காக செய். அதுவே உன்னை உயர்நிலையை அடையும் தகுதியை வளர்த்துக் கொடுக்கும்.

இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்யாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மன்னாளும் மன்னர்கள்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறான் :

"அர்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.
எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில்
செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.
அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜிவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றதாத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு
தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை
விதிகளை துறந்து செல்பவனாகிறான்...


இவ்வாறு நாம் பாக்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே ஒழிய வேண்டியதில்லை.
'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'
என்று அருமையாக வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கைகையாகும்.
கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் வாழ்வின் ஆன்மீக வழிகாட்டியில் காணலாம்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவதெவன் "

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் முயல்வாருள் எல்லாம் தலை"

இல்லறத்தை சா¢யாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும்
தலை சிறந்தவன்.

"அற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

சா¢யான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சா¢யாக நடாத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைத்தைப் பற்றி ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்ளினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் பொறுப்புகளும்,
சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பொ¢யபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம்.
"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"

என்பதற்கேற்ப நன் மனைவியைப் பெற்ற இளையான் குடிமாற நாயனார், இல்லறத்தில் அன்று வறுமை வந்துற்றபோதும் , காரைக்காலம்மையால் வரலாறும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து போ¢ன்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.
இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள் ஆன்மீக உணர்விற்கு
வழிவகுக்கும் என்பதை அறியலாம்.


ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததா¡க இருக்க வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இல்லறம் சிறந்த வழியாகும். இந்துமத தத்துவக் கருத்துக்கள் மூலமும் இவற்றை நாம் உய்த்துணரலாம்.

இரத்தம் வெவ்வேறு நிறம்

Admin OptionsFeature Edit Post Add Tags
Cancel
Delete Post Manage Blog அங்கே
பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் "எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!

அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?"
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!


இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!

இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!


இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!


இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!

இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

-கவிக்கோ அப்துல் ரகுமான்