Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Saturday 24 June 2017

செய்தி   : ஆர்.தசரதன் 

மே          : 30.05.2017

ஜூரு 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா கோலாகல திருநாளில் அனைவரும் சங்கமம் 

பள்ளி மேன்மைக்கு ஜூரு வாழ் பொது மக்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் டத்தோ க.அன்பழகன் 


ஜூரு தமிழ்ப்பள்ளியின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை  சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவினை பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக் குழு  தலைவர் முனைவர் டத்தோ க.அன்பழகன் தொடக்கி வைத்தார்.ஒரு கூட்டு பறவைகளாக தாய் வீட்டீல் சங்கமிக்கும் இடமாக சனிக்கிழமை அன்று நடந்த  கொண்டாட்டத்தில் ஜூரு தமிழ்ப்பள்ளி திருளால் கோலம் பூண்டது.பல ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் இடம்மாறி சென்று மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற உன்னத நோக்கில் அனைவரும் வருகையளித்து நூற்றாண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் பள்ளியின் பிதா மகன்களாக கருதப்படும் முன்னாள் தலைமை ஆசிரியர்களான கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்களுக்கு பொன்னாடை போற்றி  மலர் மாலை அணிவித்து ஏற்பாட்டுக்  குழுவினர் சிறப்பு செய்தனர்.

நூற்றாண்டுகளை  கடந்து பினாங்கு மாநிலத்தில் தன்னிகற்ற நிலையில் செழுமையுடன் வாழ்த்து வரும் ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு   கை கொடுத்த ஜூரு வாழ் பொது மக்களுக்கு பாராட்டையும் நன்றியையும் முனைவர் அன்பழகன்  தெரிவித்துக் கொண்டதுடன்.பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய முன்னாள் இந்நாள் ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை கூறினார்.பினாங்கு மாநிலத்தில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளியாக ஜூரு  தமிழ்ப்பள்ளி திகழ்வதுடன்,மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் உதவிகளும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பள்ளியின் வாரிய குழு தலைவர் டாக்டர் சரவணன் தமது  வரவேற்புரையில் குறிப்பிடுகையில்,நூற்றாண்டு காலமாக  ஒரே இடத்தில் செயல்படும் பள்ளியாக ஜூரு தமிழ்ப்பள்ளி விளங்குவது சாதாரண விஷயம் இல்லை என்றும் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அர்பணிப்புகளை  செய்த அனைவரையும்  எண்ணுவது சிறப்புடைத்து என்றும் குறிப்பிட்டார்.

இந்நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி வாரிய குழுவினர்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்,பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்,பள்ளியின் தற்போதைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் த.முனியாண்டி தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.4மாடி கொண்ட கட்டிடமாக ஜூரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியை மேலும் தூரிதப்படுத்த மாநில  அரசாங்கம் ஒரு நிலத்தை ஜூரு தமிழ்ப்பள்ளிக்கு அவனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவரின் உரையில் டத்தோ க. அன்பழகன் அவர்களின் கவனத்திற்கு அவர் முன் வைத்தார்.

நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்ட பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் டேவிட் பாபு ,தமது நினைவலைகளை மலேசிய  நண்பனிடம் பகிர்ந்து கொண்டதில் பள்ளி கடும் புயலினால் பாதிக்கப்பட்டது விழுந்த நிலையில்  அதற்க்கு மாற்று கட்டிடம்  வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்த வேளையில்,ஜூரு தோட்டத்தில் பிறந்து வளர்ந்த அச்சமயத்தில்   காட்டிட நிர்மாணிப்பாளர் இருந்த மா .ராஜகோபால் அவர்கள் ஜூரு பள்ளியின் புதிய பரிணாம வளர்ச்சி தோற்றுனராக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

நுற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்களின் சிறப்பு வருகை நூற்றாண்டு விழாவுக்கு பெருமை சேர்த்து மட்டும் அல்லாமல் கொண்டாட்டத்திற்கு உறு துணையாக இருந்து செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.என்றும் நீங்கா நினைவுகளுடன் பழைய நினைவுகளை வரவழைத்து அக்கால  பள்ளி பருவ நினைவலைகள் மனதில் நிழலாடி அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களுக்கு கல்வி கண்ணை திறந்த ஆசிரியர்கள் நூற்றாண்டு விழாவில்  வருகையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நூற்றாண்டு விழாவில் முனைவர் டத்தோ க. அன்பழகன்,ஜூரு தமிழ்ப்பள்ளி வாரிய குழு தலைவர் டாக்டர் பெ.சரவணக்குமாரன்,வாரிய ஆலோசகர் மா.ராஜகோபால் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.சந்திரசேகரன்,ஜூரு  தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் த.முனியாண்டி ஷான் பூர்ணம் மெட்டல் நிறுவன உரிமையாளர் எஸ்.செல்வகுமாரன்,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் இயக்குனர் திருமதி.சகுந்தலா,சக்குரா நிறுவனர் எம்.சந்தனதாஸ்,முன்னால் தலைமையாசிரியர்கள் கு.மோகன்,டேவிட் பாபு,திருமதி தமிழ்ச்செல்வி,போத்தா ராஜு,ஜெயவேலு,என்.வீராசாமி,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தராஜன்,சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் நாதன், மற்றும்  அழைக்கப்பட்ட பிராமுகர்கள் பலரும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 பட விளக்கம் 

ஜூரு தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை தொடக்கி வைக்கும் டத்தோ க.அன்பழகன் 

சிறப்பிக்கப்பட்ட முன்னால் ஜூரு தமிழ்ப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கு.மோகன் மற்றும் டேவிட் பாபு அவர்கள் 

டத்தோ க.அன்பழகன் அவர்களுக்கு பள்ளி வாரிய  தலைவர் .சரவணகுமார் நினைவு சின்னம் வழங்கிய போது 

பள்ளி மாணவர்களின் கலை படைப்பு 

முன்னாள் மாணவர்கள்  ஆசிரியர்களை  குழுப் படம் 

பினாங்கு மாநில தமிழ் பிரிவு  கல்வி இயக்குனர் திருமதி சகுந்தலா நினைவு சின்னம் பெறுகிறார்.














Putham Puthu Olai Video Song | Vedham Pudhithu | Raja, Amala

Tuesday 11 April 2017

செய்தி     : ஆர்.தசரதன்

ஏப்            : 07.04.2017

பட்டர்வொர்த்



பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக ஏற்பாட்டில் நல்லெண்ண விருந்து


பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சமூக தலைவர்களை  சிறப்பிக்கும் வகையில் அண்மையில் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒன்று இங்குள்ள பால்மின் தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு கழகத்தின் தலைவர் தமிழ் மறவன்  எம்.பாலன் அவர்கள் தலைமையேற்றார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகர்களாக சமூக சேவையாளரும் மலேசிய குற்ற தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநில துணை தலைவர் டத்தோ.கே.ஆர்.புலவேந்திரன்,பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் டத்தோ மேஜர் நவநீதம்,மலேசிய இந்திய மேம்பாட்டு கழக உதவி தலைவர் தமிழ்செல்வன்,தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்க தலைவர் நசீர்.பினாங்கு முத்தமிழ் சங்கத்தின் தலைவர் க.வு.இளங்கொவன்,செபராங்  பிறை அம்மன் பொது நல  சங்கத்தின் தலைவர் எம்.வீரையா,ஜூரு சந்திரோதயம் எம்.ஜி.ஆர் சமூக நல மன்ற தலைவர் பகவதி,துணை தலைவர் விஜயன்,துணை செயலாளர் ம.ராஜகோபால் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்க கொண்டு தலைமையுரையாற்றிய எம்.பாலன் அவர்கள் சமூக சேவையாளர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றும்,அவர்கள் தன்னலம் கருதாமல் சமூகத்துடன் இணைத்து அவர் ஆற்றுகின்ற சேவைகளை காலத்துக்கு ஏற்ப நிலையில் அவர்களை 
சிறப்பிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,டத்தோ நவநீதம்,சமூக ஆர்வலர் செல்வம் சடையன் ஆகியோர் சிறப்பு செய்யபட்டனர்.இந்நிகழ்வை திறந்து  வைத்து சிறப்புரையாற்றிய டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அரசு சாரா இயக்கங்கள் இளைஞர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்திய இளைஞர்கள் தற்போது குற்ற செயல் சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தம்  அளிப்பதாகவும் அதற்க்கு,அரசு சாரா இயக்கங்கள் அவர்களையும் இணைத்து அவர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் சொன்னார்.பினாங்கு இந்திய மேம்பாட்டு கழகம் சிறப்புடன் சேவையாற்றி வருவது பாராட்டத்துக்குரியது என்று கூறி  அவர் மேலும் சமூக நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூகதில் சில மாற்றங்களை   காண பல வகைகளில் அவை துணையாக  என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பாகன் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவரின் உரையில்,தமது நீண்ட நாள் கனவான பாகன் டாலாம் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளியை கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பதாகவும்,அதற்க்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கினால் மாநில  அரசு உதவியுடன் பள்ளியை கட்டும் பணி தொடங்கலாம் என்றும் அவர் சொன்னார்.கழகத்தின் துணை செயலாளர் இராஜசேகரன் அவர்களின் நன்றியுரையுடன் நல்லெண்ண விருந்து நிகழ்வு ஒரு நிறைவடைந்து 











Thursday 23 March 2017

செய்தி   : ஆர்.தசரதன்

மார்ச்     : 25.03.2017

பினாங்கு

இளம் இந்திய பெண்ணின் மத மற்றம்,சட்ட விதிகள் மீறப்பட்டடுள்ளது?

பாலன் நம்பியார் கேள்வி?



கெடா கூலிம் வட்டாரத்தை சேர்ந்த இந்திய இளம் பெண்ணின் மதம் மாற்றம் தொடர்பில் பினாங்கு மாநில கலை கலைச்சார சமூக சேவை நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார் கூறினார்.


இளம் பெண்ணின் மத மாற்றம் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் மேலும் அவர் கருத்துரைத்த அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பெண்ணின் 14வது வயதில் ஓர் இந்திய ஆண்டவரால்  மத மற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பெண்ணின் தந்தை புத்த மதத்தை சேர்த்தவர் என்றும் தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறிய அவர் அத்தம்பதிகளுக்கு பிறந்த  சியோங் மே லீங்  {வயது 18} அவர் சொன்னார்.மேலும் அவர் கூறுகையில் அப்பெண் 14 வயது இருக்கும் போது ஒரு இந்திய முஸ்லீம் ஆடவரால் சமய இலாக்காவுக்கு கொண்டு சென்று மத மற்றம் செய்யப்படதாக கூறினார்.


சில மாதங்களுக்கு பிறகு புதிய அடையாள அட்டையை பெற வேண்டி தேசிய பதிவிலாகாவின் அலுவலகத்துக்கு அப்பெண் சென்ற போதுதமது அடையாள அட்டையில் சியோங்  மே லீங்  பதிலாக பாத்திமா பிந்தி அப்துல்லா என்ற பெயர் மற்றம் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டதுடன் புதிய அடையாள அட்டை தமக்கு வேண்டாம் என்று கூறி மறுப்பு தெரிவித்தார் என்று பாலன் நம்பியார் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அப்பெண் சம்பந்தப்பட்ட இந்திய ஆடவரால் மத மாற்றம் தொடர்பில் ஏமாற்றப்பட்டதை அறிந்த சியோங்  மே லீங் தமக்கு தமக்கு உதவுமாறு அரசியல் கட்சி தலைவர்களையும்,அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களையும் அணுகி உதவி கேட்ட போது யாரும் முன்வராததை தொடர்ந்து பினாங்கை சேர்ந்த பினாங்கு மாநில கலை கலாசார சமூக சேவை நற்பணி மன்றத்தின் உதவியைநாடியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் நாட்டின் சட்ட விதியின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே  பெற்றோர்களின் சம்பந்தத்துடன் பிற மதத்தை தழுவ அனுமதி உள்ள நிலையில்,14 வயதுடைய பதின்ம வயதுபெண்ணை மத மாற்றிய சம்பவம் சட்டதுக்கு புறம்பானது என்றும் அவர் கருத்துரைத்தார்.

இவ்விகாரதை  தீர்ப்பதற்கு மன்ற  சட்ட ஆலோசகனுடன் ஆலோசனை நடத்தியும், இஸ்லாம்   சமய இலாக்கா  அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாலன் நம்பியார் கூறினார்.

பட விளக்கம் 


மத மாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன்  பாலன் நம்பியார் 




Saturday 18 March 2017

செய்தி    : ஆர்.தசரதன்

மார்ச்       : 20.03.2017

பட்டர்வொர்த்



பினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தன்னலம் கருதாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  சேவை அளப்பரியது டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்


பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் ஏற்பாட்டில் 11 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் இங்குள்ள ஸ்ரீ அனந்தபவன் விருந்து மண்டபத்தில் கடந்த ஞாற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வு மன்ற தலைவர் ந.க.பக்கிரிசாமி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,பினாங்கு கழிவு இலாக்கா தமிழ் பிரிவு  அதிகாரி சகுந்தலா,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர் ந.க.பக்கிரிசாமி,இயக்க துணை தலைவர் நா.குப்புசாமி,செயலாளர் சே.பாண்டியன் ஆலோசகர் கு.மோகன்,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தரராஜன்,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி,பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயவேலு,பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை ஜெசிந்தா மற்ற இதர ஆசியர்கள் கலந்துக்  கொண்டனர்.

நிகழ்வின் தொடக்க அங்கமாக தமிழ் வாழ்த்தினை முன்னாள் ஆசியர் சு.முருகப்பன் பாடினார்.அதனை தொடர்ந்து  தலைமையுரை ஆற்றிய பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர்  ந.க.பக்கிரிசாமி அவர்கள் தமதுரையில் முன்னாள் தமிழ்ப்பள்ளியில் சேவையாற்றிய இயக்க உறுப்பினர்களுடன்   கெடா சுல்தான் மற்றும் பினாங்கு மாநில ஆளுநரிடம் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் "நினைத்து பார்க்கிறோம் நெஞ்சம் நெகிழ்கிறோம் "என்ற நிகழ்வின் வழி சிறப்பு செய்வதில் மகிச்சி  கொள்வதாக கூறினார்.இயக்கத்தில் 50 உறுப்பினர்கள் அங்கம் வகிகின்றனர் என்றும் அதி பல வகையான நிகழ்வுகளை குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டி,பேச்சி போட் டி மற்றும் இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்று வரும் 240 இடை நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  தமிழ் மொழி பயிற்சி மற்றும் கவிதை பட்டறைகளை சிடிக் இந்திய பொருளாதார மேம்பட்டு உதவியுடன் நடத்தி வருவதாக கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய   மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அவர்கள் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் சிறப்பாக செயல்படுவதாகவும்,சமூக மேம்பாட்டில் முன்னாள் ஆசியர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தன்னலம் கருதாத சேவைக்கு அவர் புகழாரம் சூட் டினார்.தொடக்க கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்ற  மாணவர்கள் அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில்  சிறப்பு தேர்ச்சி பெற்றமைக்கு முக்கிய  காரணம் அவர்கலின் சிலர் தமிழ்பள்ளியில் பயன்றதுடன்  அதில் முக்கிய பங்கு  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிடு இயக்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிழ்ப்பள்ளியை சேந்த ஆசிரியர்கள் திருமதி சரோஜினி குணசேகரன்,முன்னாள் பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி மற்றும் அ சுப்ரமணியம் ஆகியோருடன் அ.வீராசாமி பினாங்கு ஆளுநரிடம் டிஜேன் விருது பெற்றமைக்கு,ஆர்.லோகாம்பாள் பி.ஜே.எம் விருது பெற்றமைக்கும்,எ.குணசேகரன் அவர்கள் கெடா சுல்தானிடம் பி.கே.எம் விருது பெற்றமைக்கு நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிப்பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி அவர்கள் நிகழ்வுக்கு  வருகையளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.











Wednesday 1 March 2017

செய்தி    : ஆர்.தசரதன் 

பிப்           : 27.02.2017

பட்டர்வொர்த் 


வாழ்வோ தாழ்வோ இந்தியர்கனின் அரணாக மஇகா என்றும் துணை இருக்கும் 

டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் 


இந்நாட்டில் பல அரசியல் காட்சிகள் இருக்கின்றன,அனால் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்பது மஇகா என்று,இங்குள்ள பட்டர்வொர்த் காம்போங் பங்காலி பொது மைதானத்தில் நடந்த பினாங்கு மாநில மஇகா ஏற்பாட் டில் நடந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய மஇகா தேசிய தலைவரும்,மலேசிய  சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை பினாங்கு மாநில மஇகா தொடர்புக்கு குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மஇகா தொடர்புக்குழு துணை தலைவர் டத்தோ ஞானசேகரன்,செயலாளர் எஸ்.எஸ்.டி.முனியாண்டி,பொருளாளர் இளங்கோ,இளைஞர் பகுதி தலைவர் பிரகாஷ்,மகளிர் பகுதி தலைவி திருமதி பிரேமா,டத்தின் வள்ளி முத்துசாமி,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன்,மாநில  மஇகா தொகுதி தலைவர்கள்,வட்டார ஆலய தலைவர்கள்,மாநில  அரசு சாரா இயக்க தலைவர்கள் உட்பட 1200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இந்தியர்கள் இந்நாட்டில் கல்வி,பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேம்பாடு காண வேண்டும் என்று,நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடம் இந்தியர்களுக்கு தேவையானவை என்ன என்று தெளிவாக அவரிடம் கூறி,பல நன்மை பயக்கும் திட்டங்களாக  தெக்குன் சிறு தொழில் கடனுதவி திட்டம் ஆகியவற்றை மஇகா பெற்று தந்துள்ளது.மேலும் தமிழ் பள்ளியின் கல்வி மேம்பாட்டிற்கும் புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் 80 கோடி வெள்ளியை 2010 ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை மஇகா சமூக முன்னேற்றத்துக்கு வழங்கியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியர்கள் பொருளாததில் மேம்பாடு காண கடந்த 6 வருடங்களாக 22 கோடி வெள்ளி தெக்குன் கடனுதவி திட்டத்தின் மூலம் 22,000 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.சமூகத்தின் வளர்ச்சியில் என்றும் மஇகா துணை இருக்கும் என்று கூறிய சுகாதார அமைச்சர்,மக்கள் நன்மைபெறும் பொது அதனை மக்கள் மஇகாவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக 
தொடர்ந்து மக்களுக்கான சேவையை  கடமையுணர்வுடன் செயலாற்ற மஇகா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

வருகின்ற பொது தேர்தலின் மஇகாவின் முக்கிய சட்டமன்றமாக  இருக்கும் பிறை மற்றும் பாகான்  டாலாம் சட்டமன்ற பகுதியில் உள்ள மக்கள்,மஇகா மேற்கொண்டிருந்த பல்வேறு திட்டங்களினால் அப்பகுதியில் உள்ள மக்களின் ஆதரவு பெருகி வருவதால் அந்த சட்டமற்ற பகுதியினை வரும் பொது தேர்தலில் வெற்றி கொள்ளு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மஇகா பினாங்கு மாநில தொடர்புக்குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு தமதுரையில் இந்தியர்களிடம் ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்வதற்கு ஒற்றுமை பண்பாட்டு நிகழ்வினை மாநில மஇகா ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதன் மூலமாக இந்தியர்களிள் மத்தியில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதுடன் மாநில மஇகா செயலாற்றும் திட்டங்களுக்கு மக்கள் ஒன்றிணைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.பினாங்கு மாநில மஇகாவின் அழைப்பேன் பேரில் கலந்துக்கொண்ட 30க்கு மேற்பட்ட ஆலய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்க தலைவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.இதனிடையே இந்நிகழ்வில் சுகாதார பரிசோதனை மற்றும் சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



















Tuesday 14 February 2017

செய்தி    : ஆர்.தசரதன்

பிப்           : 04.02.2017

செபராங் ஜெயா

பினாங்கு தைப்பூச திருநாளில் குற்ற செயலை தடுக்க

மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் தீவிர முயற்சி.டத்தோ புலேந்திரன்



பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் தைப்பூச திருநாள் சுபிச்சமாகவும் அமைதியாகவும்,குற்ற செயல் அற்ற மாநிலமாக இருப்பதை உறுதி படுத்த ஆக்கப்பணிகளை செய்திருப்பதக்க மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலேந்திரன் தெரிவித்தார்.கடந்த வியாழக்கிழமை இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள தமிழ் பண்பாட்டு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் உரையாற்றினார். 

பினாங்கு மாநில காவல் துறையினர் அதிகமான ஒத்துழைப்பை மலேசிய குற்ற தடுப்பு அரவாரியத்துக்கு  வழங்கி வருவதன் மூலம்,இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் குற்ற சம்பவங்கள் அற்ற மாநிலமாக பினாங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருப்பதை போல இந்த ஆண்டும் அது உறுதிப்படுத்த மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் செயல் திட்ட்ங்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார் 

இந்த 2017 ஆம் ஆண்டும் தைப்பூச தினத்தில் பூஜ்யம் குற்ற சம்பவங்கள் பதிவு கொண்டிருக்கும் இலக்கை அடைய,மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைத்த முயற்சியிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது என்றும் மேலும் அவர் சொன்னார்.

இதற்கிடையே தைப்பூச விழாவில் கலந்துக்க கொள்ளும் பொது மக்கள் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் என்றும்,மது அருந்திவிட்டு தைப்பூச திருநாளின்  மாண்பை கெடுக்கும் அளவுக்கு நாமே காரணமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே இந்த ஆண்டு தைப்பூச திருநாளில் பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில்,மாநில காவல் படை தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் பலனாக மாநில  காவல் படையை சேர்ந்த 1000 காவல் படையினர் இவ்வாண்டு தைப்பூச நாளில் பணியில் அமர்த்தப்படுவதற்கும் மாநில காவல் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பினாங்கு மாநில குற்ற தடுப்பு அரவாரிய துணை தலைவர் (2) பொறுப்பு வகிக்கும் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட மேஜர் காளீஸ்வரன் குறிப்பிடுகையில்,உலக நாடுகளிலிருந்து பல பாகங்களிலிருந்த சுற்று பயணிகளும் அதிக அளவில் கலந்து கொள்வது ஒரு புறம்மிருக்க,இந்துக்களின் மிக பிரபலமான தைப்பூசத்தை மாண்பை காப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு 2 இரதங்கள் ஒன்று தங்க இரதம் மற்றொன்று வெள்ளி இரதம் ஊர்வலமாக செல்வதினால் இது பினாங்கு மாநில இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படும் அதே வேலையில்,இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொது அமைதி கெடும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

இதனுடன் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய பொறுப்பாளராக  கலந்துக்கொண்ட ராஜா முனுசாமி அவர்கள்,தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்களை ஒளி பரப்ப பினாங்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் முயல வேண்டும் என்றும்  இதன் மூலம்  பக்தி மார்க்கம் கொண்ட உன்னத திருநாளாக தைப்பூசம் விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பட விளக்கம் 

மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய ஆட்சி மற்ற பௌப்பாளர்கள்,உடன் ராஜா முனுசாமி,டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் மற்றும் மேஜர் காளீஸ்வரன்