Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 23 March 2017

செய்தி   : ஆர்.தசரதன்

மார்ச்     : 25.03.2017

பினாங்கு

இளம் இந்திய பெண்ணின் மத மற்றம்,சட்ட விதிகள் மீறப்பட்டடுள்ளது?

பாலன் நம்பியார் கேள்வி?



கெடா கூலிம் வட்டாரத்தை சேர்ந்த இந்திய இளம் பெண்ணின் மதம் மாற்றம் தொடர்பில் பினாங்கு மாநில கலை கலைச்சார சமூக சேவை நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார் கூறினார்.


இளம் பெண்ணின் மத மாற்றம் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் மேலும் அவர் கருத்துரைத்த அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பெண்ணின் 14வது வயதில் ஓர் இந்திய ஆண்டவரால்  மத மற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பெண்ணின் தந்தை புத்த மதத்தை சேர்த்தவர் என்றும் தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறிய அவர் அத்தம்பதிகளுக்கு பிறந்த  சியோங் மே லீங்  {வயது 18} அவர் சொன்னார்.மேலும் அவர் கூறுகையில் அப்பெண் 14 வயது இருக்கும் போது ஒரு இந்திய முஸ்லீம் ஆடவரால் சமய இலாக்காவுக்கு கொண்டு சென்று மத மற்றம் செய்யப்படதாக கூறினார்.


சில மாதங்களுக்கு பிறகு புதிய அடையாள அட்டையை பெற வேண்டி தேசிய பதிவிலாகாவின் அலுவலகத்துக்கு அப்பெண் சென்ற போதுதமது அடையாள அட்டையில் சியோங்  மே லீங்  பதிலாக பாத்திமா பிந்தி அப்துல்லா என்ற பெயர் மற்றம் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டதுடன் புதிய அடையாள அட்டை தமக்கு வேண்டாம் என்று கூறி மறுப்பு தெரிவித்தார் என்று பாலன் நம்பியார் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அப்பெண் சம்பந்தப்பட்ட இந்திய ஆடவரால் மத மாற்றம் தொடர்பில் ஏமாற்றப்பட்டதை அறிந்த சியோங்  மே லீங் தமக்கு தமக்கு உதவுமாறு அரசியல் கட்சி தலைவர்களையும்,அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களையும் அணுகி உதவி கேட்ட போது யாரும் முன்வராததை தொடர்ந்து பினாங்கை சேர்ந்த பினாங்கு மாநில கலை கலாசார சமூக சேவை நற்பணி மன்றத்தின் உதவியைநாடியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் நாட்டின் சட்ட விதியின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே  பெற்றோர்களின் சம்பந்தத்துடன் பிற மதத்தை தழுவ அனுமதி உள்ள நிலையில்,14 வயதுடைய பதின்ம வயதுபெண்ணை மத மாற்றிய சம்பவம் சட்டதுக்கு புறம்பானது என்றும் அவர் கருத்துரைத்தார்.

இவ்விகாரதை  தீர்ப்பதற்கு மன்ற  சட்ட ஆலோசகனுடன் ஆலோசனை நடத்தியும், இஸ்லாம்   சமய இலாக்கா  அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாலன் நம்பியார் கூறினார்.

பட விளக்கம் 


மத மாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன்  பாலன் நம்பியார் 




Saturday 18 March 2017

செய்தி    : ஆர்.தசரதன்

மார்ச்       : 20.03.2017

பட்டர்வொர்த்



பினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தன்னலம் கருதாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  சேவை அளப்பரியது டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்


பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் ஏற்பாட்டில் 11 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் இங்குள்ள ஸ்ரீ அனந்தபவன் விருந்து மண்டபத்தில் கடந்த ஞாற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வு மன்ற தலைவர் ந.க.பக்கிரிசாமி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,பினாங்கு கழிவு இலாக்கா தமிழ் பிரிவு  அதிகாரி சகுந்தலா,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர் ந.க.பக்கிரிசாமி,இயக்க துணை தலைவர் நா.குப்புசாமி,செயலாளர் சே.பாண்டியன் ஆலோசகர் கு.மோகன்,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தரராஜன்,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி,பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயவேலு,பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை ஜெசிந்தா மற்ற இதர ஆசியர்கள் கலந்துக்  கொண்டனர்.

நிகழ்வின் தொடக்க அங்கமாக தமிழ் வாழ்த்தினை முன்னாள் ஆசியர் சு.முருகப்பன் பாடினார்.அதனை தொடர்ந்து  தலைமையுரை ஆற்றிய பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர்  ந.க.பக்கிரிசாமி அவர்கள் தமதுரையில் முன்னாள் தமிழ்ப்பள்ளியில் சேவையாற்றிய இயக்க உறுப்பினர்களுடன்   கெடா சுல்தான் மற்றும் பினாங்கு மாநில ஆளுநரிடம் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் "நினைத்து பார்க்கிறோம் நெஞ்சம் நெகிழ்கிறோம் "என்ற நிகழ்வின் வழி சிறப்பு செய்வதில் மகிச்சி  கொள்வதாக கூறினார்.இயக்கத்தில் 50 உறுப்பினர்கள் அங்கம் வகிகின்றனர் என்றும் அதி பல வகையான நிகழ்வுகளை குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டி,பேச்சி போட் டி மற்றும் இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்று வரும் 240 இடை நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட  தமிழ் மொழி பயிற்சி மற்றும் கவிதை பட்டறைகளை சிடிக் இந்திய பொருளாதார மேம்பட்டு உதவியுடன் நடத்தி வருவதாக கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய   மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அவர்கள் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் சிறப்பாக செயல்படுவதாகவும்,சமூக மேம்பாட்டில் முன்னாள் ஆசியர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தன்னலம் கருதாத சேவைக்கு அவர் புகழாரம் சூட் டினார்.தொடக்க கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்ற  மாணவர்கள் அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில்  சிறப்பு தேர்ச்சி பெற்றமைக்கு முக்கிய  காரணம் அவர்கலின் சிலர் தமிழ்பள்ளியில் பயன்றதுடன்  அதில் முக்கிய பங்கு  தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிடு இயக்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிழ்ப்பள்ளியை சேந்த ஆசிரியர்கள் திருமதி சரோஜினி குணசேகரன்,முன்னாள் பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி மற்றும் அ சுப்ரமணியம் ஆகியோருடன் அ.வீராசாமி பினாங்கு ஆளுநரிடம் டிஜேன் விருது பெற்றமைக்கு,ஆர்.லோகாம்பாள் பி.ஜே.எம் விருது பெற்றமைக்கும்,எ.குணசேகரன் அவர்கள் கெடா சுல்தானிடம் பி.கே.எம் விருது பெற்றமைக்கு நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் தமிப்பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி அவர்கள் நிகழ்வுக்கு  வருகையளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.











Wednesday 1 March 2017

செய்தி    : ஆர்.தசரதன் 

பிப்           : 27.02.2017

பட்டர்வொர்த் 


வாழ்வோ தாழ்வோ இந்தியர்கனின் அரணாக மஇகா என்றும் துணை இருக்கும் 

டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் 


இந்நாட்டில் பல அரசியல் காட்சிகள் இருக்கின்றன,அனால் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்பது மஇகா என்று,இங்குள்ள பட்டர்வொர்த் காம்போங் பங்காலி பொது மைதானத்தில் நடந்த பினாங்கு மாநில மஇகா ஏற்பாட் டில் நடந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய மஇகா தேசிய தலைவரும்,மலேசிய  சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை பினாங்கு மாநில மஇகா தொடர்புக்கு குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு மஇகா தொடர்புக்குழு துணை தலைவர் டத்தோ ஞானசேகரன்,செயலாளர் எஸ்.எஸ்.டி.முனியாண்டி,பொருளாளர் இளங்கோ,இளைஞர் பகுதி தலைவர் பிரகாஷ்,மகளிர் பகுதி தலைவி திருமதி பிரேமா,டத்தின் வள்ளி முத்துசாமி,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன்,மாநில  மஇகா தொகுதி தலைவர்கள்,வட்டார ஆலய தலைவர்கள்,மாநில  அரசு சாரா இயக்க தலைவர்கள் உட்பட 1200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இந்தியர்கள் இந்நாட்டில் கல்வி,பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேம்பாடு காண வேண்டும் என்று,நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களிடம் இந்தியர்களுக்கு தேவையானவை என்ன என்று தெளிவாக அவரிடம் கூறி,பல நன்மை பயக்கும் திட்டங்களாக  தெக்குன் சிறு தொழில் கடனுதவி திட்டம் ஆகியவற்றை மஇகா பெற்று தந்துள்ளது.மேலும் தமிழ் பள்ளியின் கல்வி மேம்பாட்டிற்கும் புதிய பள்ளிகள் கட்டுவதற்கும் 80 கோடி வெள்ளியை 2010 ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை மஇகா சமூக முன்னேற்றத்துக்கு வழங்கியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியர்கள் பொருளாததில் மேம்பாடு காண கடந்த 6 வருடங்களாக 22 கோடி வெள்ளி தெக்குன் கடனுதவி திட்டத்தின் மூலம் 22,000 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.சமூகத்தின் வளர்ச்சியில் என்றும் மஇகா துணை இருக்கும் என்று கூறிய சுகாதார அமைச்சர்,மக்கள் நன்மைபெறும் பொது அதனை மக்கள் மஇகாவிற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக 
தொடர்ந்து மக்களுக்கான சேவையை  கடமையுணர்வுடன் செயலாற்ற மஇகா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

வருகின்ற பொது தேர்தலின் மஇகாவின் முக்கிய சட்டமன்றமாக  இருக்கும் பிறை மற்றும் பாகான்  டாலாம் சட்டமன்ற பகுதியில் உள்ள மக்கள்,மஇகா மேற்கொண்டிருந்த பல்வேறு திட்டங்களினால் அப்பகுதியில் உள்ள மக்களின் ஆதரவு பெருகி வருவதால் அந்த சட்டமற்ற பகுதியினை வரும் பொது தேர்தலில் வெற்றி கொள்ளு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மஇகா பினாங்கு மாநில தொடர்புக்குழு தலைவர் டத்தோ கே.தங்கவேலு தமதுரையில் இந்தியர்களிடம் ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்வதற்கு ஒற்றுமை பண்பாட்டு நிகழ்வினை மாநில மஇகா ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதன் மூலமாக இந்தியர்களிள் மத்தியில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதுடன் மாநில மஇகா செயலாற்றும் திட்டங்களுக்கு மக்கள் ஒன்றிணைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.பினாங்கு மாநில மஇகாவின் அழைப்பேன் பேரில் கலந்துக்கொண்ட 30க்கு மேற்பட்ட ஆலய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்க தலைவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.இதனிடையே இந்நிகழ்வில் சுகாதார பரிசோதனை மற்றும் சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



















Tuesday 14 February 2017

செய்தி    : ஆர்.தசரதன்

பிப்           : 04.02.2017

செபராங் ஜெயா

பினாங்கு தைப்பூச திருநாளில் குற்ற செயலை தடுக்க

மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் தீவிர முயற்சி.டத்தோ புலேந்திரன்



பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் தைப்பூச திருநாள் சுபிச்சமாகவும் அமைதியாகவும்,குற்ற செயல் அற்ற மாநிலமாக இருப்பதை உறுதி படுத்த ஆக்கப்பணிகளை செய்திருப்பதக்க மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலேந்திரன் தெரிவித்தார்.கடந்த வியாழக்கிழமை இங்குள்ள செபராங் ஜெயாவில் உள்ள தமிழ் பண்பாட்டு அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் உரையாற்றினார். 

பினாங்கு மாநில காவல் துறையினர் அதிகமான ஒத்துழைப்பை மலேசிய குற்ற தடுப்பு அரவாரியத்துக்கு  வழங்கி வருவதன் மூலம்,இந்த ஆண்டு தைப்பூச தினத்தில் குற்ற சம்பவங்கள் அற்ற மாநிலமாக பினாங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருப்பதை போல இந்த ஆண்டும் அது உறுதிப்படுத்த மலேசிய குற்ற தடுப்பு அரவாரியம் செயல் திட்ட்ங்கள் கொண்டிருப்பதாக அவர் கூறினார் 

இந்த 2017 ஆம் ஆண்டும் தைப்பூச தினத்தில் பூஜ்யம் குற்ற சம்பவங்கள் பதிவு கொண்டிருக்கும் இலக்கை அடைய,மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைத்த முயற்சியிகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது என்றும் மேலும் அவர் சொன்னார்.

இதற்கிடையே தைப்பூச விழாவில் கலந்துக்க கொள்ளும் பொது மக்கள் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் என்றும்,மது அருந்திவிட்டு தைப்பூச திருநாளின்  மாண்பை கெடுக்கும் அளவுக்கு நாமே காரணமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே இந்த ஆண்டு தைப்பூச திருநாளில் பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில்,மாநில காவல் படை தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் பலனாக மாநில  காவல் படையை சேர்ந்த 1000 காவல் படையினர் இவ்வாண்டு தைப்பூச நாளில் பணியில் அமர்த்தப்படுவதற்கும் மாநில காவல் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக பினாங்கு மாநில குற்ற தடுப்பு அரவாரிய துணை தலைவர் (2) பொறுப்பு வகிக்கும் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்து கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட மேஜர் காளீஸ்வரன் குறிப்பிடுகையில்,உலக நாடுகளிலிருந்து பல பாகங்களிலிருந்த சுற்று பயணிகளும் அதிக அளவில் கலந்து கொள்வது ஒரு புறம்மிருக்க,இந்துக்களின் மிக பிரபலமான தைப்பூசத்தை மாண்பை காப்பது ஒவ்வொரு இந்துக்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இவ்வாண்டு 2 இரதங்கள் ஒன்று தங்க இரதம் மற்றொன்று வெள்ளி இரதம் ஊர்வலமாக செல்வதினால் இது பினாங்கு மாநில இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படும் அதே வேலையில்,இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொது அமைதி கெடும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

இதனுடன் நடந்த  செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய பொறுப்பாளராக  கலந்துக்கொண்ட ராஜா முனுசாமி அவர்கள்,தண்ணீர் பந்தல்களில் பக்தி பாடல்களை ஒளி பரப்ப பினாங்கு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் முயல வேண்டும் என்றும்  இதன் மூலம்  பக்தி மார்க்கம் கொண்ட உன்னத திருநாளாக தைப்பூசம் விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பட விளக்கம் 

மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய ஆட்சி மற்ற பௌப்பாளர்கள்,உடன் ராஜா முனுசாமி,டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் மற்றும் மேஜர் காளீஸ்வரன் 





  








செய்தி    : ஆர்.தசரதன்

பிப்            : 05.02.2017

ஜார்ஜ்டவுன்

பினாங்கு காப்பித்தான் பள்ளிவாசலில் சலவாத்து மஜ்லிஸ்


பினாங்கு மாநிலத்தில் உள்ள பிரபல வரலாற்று சிறப்புடைய  காப்பிதான் பள்ளி வாசலில்,அண்மையில் இரு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட திக்ரு மற்றும் சலாவத்து மஜ்லிஸ் நிகழ்வுகள் சிறப்புடன் நடந்தேறியது.இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலஷ அபுபக்கர் ரஷாதி அவர்கள் சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார்கள்.
கண்ணியத்துக்குறிய நாடறிந்த மார்க்க அறிஞரும், காப்பிதான் பள்ளியின் தலைமை இமாம் மனிதனல் சிறந்த முன் மாதிரி, மாமனிதர் மௌலானா டத்தோ அல்ஹாபிஸ் அப்துல்லா புஹாரி அவர்களின் துவாவுடன் நிகழ்வு தொடங்கியது.காப்பித்தான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிஸ் ஜியாவுல் ஹாக் பாக்கவி அவர்கள் ராத்தியத்துல் ஜலாலியா என்னும் திக்ரு என்னும் மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இந்நிகழ்வில் பொது மக்களுடன் சுமார் 20 உஸ்தாதுகள் உடன் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கண்ணியத்துக்குறிய சிங்கப்பூரை சேர்ந்த மௌலான அஹமது ஜபருல்லா ஆலிம் அவர்கள் சலவாத்து மஜ்லிஸை சிறப்புடன் வழி நடத்தினார்கள்.இச்சிறப்புப்பிகு நிகழ்வில் பினாங்கு,கெடா,பேராக்,பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மதரஸா உஸ்தாதுகள்,மாணவர்கள் உடன் பொது மக்கள் 1400 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த  சலவாத்து மஜ்லிஸ் சிறப்புடன் நடைபெற உதவிகள் புரிந்த அனைவருக்கும் காப்பித்தான் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. 



செய்தி   : ஆர்.தசரதன்


பிப்        : 03.02.2017


ஜார்ஜ்டவுன்




பினாங்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு தங்க இரதம் வெள்ளோட்டம்
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


பினாங்கு மாநில தைப்பூச தங்க இரதம் நேற்று வெள்ளோட்டம் கண்டது.காலை மணி 11.20 மணிக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி மலை கோயிலிலிருந்து கீழ் அடிவாரத்தில் உள்ள கணேசர்  ஆலயதிலிருந்து விதி உலா புறப்பட தயாரானது.இந்த வெள்ளோட்ட தின சிறப்பு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் பி.இராமசாமி,ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,ஸ்ரீ டெலிமா சட்ட மன்ற தலைவர் ராயர்,பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர்அ.தனசேகரன்,பினாங்கு இந்து அறப்பணி  வாரிய  இயக்குனர் எம்.இராமசசத்திரன்,மலேசிய குற்ற செயல் தடுப்பு அரவாரிய உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,சமூக சேவையாளர் ஏ.சௌந்தரராஜன்,நம் தமிழர் இயக்க தலைவர் ப.த.மகாலிங்கம் மாற்று பொது மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க இரத்தத்தினை வடம் பிடித்து இழுத்தனர்.    

பினாங்கு மாநில 2017 ஆண்டுக்கான தைப்பூச திருநாளை முன்னிட்டு வருகின்ற பிப்பரவரி 8ஆம் நாள் அதிகாலை மணி 5.00 மணியளவில் குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தங்க இரத்தில் வேலுடன் ஊர்வலம் வரும் என்றும்,பிப்ரவரி 10 ஆம் நாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து மீண்டும்  குயின் ஸ்தீரிட்டில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்துக்கு தங்கரத்துடன் வேல் வைக்கப்பட்டது திரும்பும் என்று பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.இந்த தங்க இரத்தமானது மக்கள் ரத்தமாக கருதப்படும் என்றும்,திட்டமிட்டபடி இந்த தங்க இரதம் வெள்ளோட்டத்துக்கு ஏற்பாடுகள் மிக கவனமாக செய்யப்பட்டது என்றும் பி.இராமசாமி மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த தங்க இரத வெள்ளோட்டத்தில் கலந்துக்க கொண்ட ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம் குறிப்பிடுகையில்.2017 ஆம் ஆண்டு தைப்பூசம் ஸ்ரீ பாலதண்டாயுத ஆலயத்தின் 231 தைப்பூசம் என்றும்,இந்த அந்நாட்டின் மகத்தான சிறப்பு தங்க ரத்தம் விதி உலா என்றும் மகிழ்ச்சியுடான் கூறினார்.பல சாதனைகளை கண்டுள்ள பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம் மேலும் ஒரு மயில் கல் வளர்ச்சியாக தங்க இரத்தத்தினை பெற்றுள்ளது தனி ஒரு சிறப்பாக அமைந்துள்ளது என்றும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

பட விளக்கம் 











  

செய்தி   : ஆர்.தசரதன்

பிப்         :09.02.2017

ஜார்ஜ்டவுன்



பினாங்கு தைப்பூச திருநாளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டு காணிக்கை செலுத்தினர்

குற்றச்செயல் அற்ற,தமிழர் கலை  பண்பாடு பெருநாள் தைப்பூச கொண்டாட்டம் மக்கள் பெருமிதம்


பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாள் மிகவும் விமரிசையாகவும்,கோலகலமாக நேற்று முன்தினம் சிறப்புடன் நடைபெற்றது.இந்த 2017 ஆம் ஆண்டு அதிகமான மக்கள் உள்ளூர்  மற்றும் வெளி நாடுகளிலிருந்து   பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  ஆலயத்தின் 231ஆது  தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டு தங்களின் நேர்த்திக் கடனை தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு செலுத்தினர்.இந்த தைப்பூச விழாவில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பால் குடங்களை செலுத்தப்பட்ட வேளையில் பல்லாயிரக்கணக்கான அழகுற செய்யபட்ட காவடிகள் இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தினை வண்ணமய மாக்கியது.
வெளிநாடுகளின் சேர்ந்த சுற்று பயணிகள் இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கலந்துக்கொண்டதுடன்,சிறப்பு அம்சமாக இந்திய கலாச்சார உடைகளான வேட்டி சேலையுடன் காட்சியளித்தது இந்திய பண்பாட்டின் மாண்பை புலப்படுத்தியது.இவ்வாண்டு தைப்பூச விழாவில் 150 மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் தனியார்,தொண்டூழிய ஊழியர்கள்,மன்றங்கள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக ஏற்படுத்தி மக்களின் தாகத்தையும் பசியை போக்கும் வண்ண அன்னதானங்களை வழங்கி பெரும் பங்கற்றினர்.

பினாங்கு மாநில காவல் துறையை சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட காவல் வீரர்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த சிறப்புடன் செயல் ஆற்றினார்.மலேசிய குற்ற தடுப்பு அரவாரியாம்,மலேசில  இந்து சங்கம்,மாநில இந்து இளைஞர் பேரவை,பினாங்கு மாநில தமிழ் இளைஞர் மணிமன்றம்,பினாங்கு இந்து தர்ம மாமன்றம் ஒன்றிணைத்து பினாங்கு மாநில  தைப்பூச தினத்தில் குற்ற செயலை தடுக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு  சிறந்த பலனை கொண்டு வந்தது என்றால் அது மிகையில்லை.

மக்களுக்கு தேவையான வசதி கொண்ட குளியல் அரை,கழிப்பிடம்,முடி காணிக்கை செய்ய போதிய வசதி கொண்ட இடம் ஆகியவற்றை  பினாங்கு இந்து அறப்பணி வாரியதின் உதவியுடன் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய தலைவர் சுப்பிரமணியம் ஆறுமுகம் தலைமையில் செயல்படும் ஆலய நிர்வாக குழுவினர் நிறைவுடன் செய்திருந்தனர்.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்,பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி,பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் ஏ .தனசேகரன்,மஇகா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலய தலைவர் ஆர்.சுப்பிரமணியம்,டத்தோ ஆர்.ஏ.அருணாசலம்,மலேசிய குற்ற தடுப்பு அரவாரிய ஆட்சிமன்ற உறுப்பினர் டத்தோ/கே.ஆர்.புலவேந்திரன் ஆகியோர் தைப்பூச தினத்தன்று முக்கிய பிரமுகர்களாக ஆலய வழிப்பாட்டில் பங்கேற்றனர்.

சிறப்பு வழிபட்டதில் கலந்து கொள்ள வந்திருந்த பினாங்கு மாநில முதல்வர் லில் குவான் எங் உட்சாக பெருமகிழ்ச்சி அடைத்ததுடன்,பினாங்கு மாநிலத்தில் தைப்பூச திருநாளில் ஆண்டு தோறும் மக்கள் எண்ணிக்கை கூ டுவதன் மூலமாகவும் அதிகமான வெளி நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்த்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுவதால்,ஒருவழி தொடர் போக்குவரத்து சேவையை அமுல்படுத்த பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளும் என்று தமதுரையில் அவர் கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிடுகையில்,2017 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூசம் ஒரு வரலாற்று தைப்பூசமாக மலை கோவிலில் வீற்றிருக்கும் அருள்பிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்துக்கு இரதம் இல்லையே என்ற குறையை தீர்க்க தங்க இரதம் ஒரு பெறப்பட்டடுள்ளது என்றும்,தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலய தனி சிறப்பு வைத்துள்ளது இம்மாநிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் மாறாக இந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு பெருமை கொள்ளும் வகையில் அமைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் தண்ணி பந்தல்களில் ஒளியூட்டிய வண்ண விளக்குகளும், கண்கவர் காவடிகள் மற்றும் சிறு ரக இரத்தங்களும்காண்போரை கவர்ந்தது.நள்ளிரவு  வரை மலைக்கோவில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் நள்ளிரவு தங்களின் இறுதி காணிக்கையை செலுத்தினர்.பினாங்கு மாநிலத்தை பொறுத்தவரை இந்த 2017 ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பான கோலாகலமான,குற்ற செயல் ஆற்ற சிறப்புக்குரிய தைப்பூசமாக திகழ்ந்தது என்றால் அதுமிகையில்லை.நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரதம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்ஆலயத்தின் பிரதான வெள்ளி இரதம் ஆகியவை தத்தம் ஆலயங்களிருந்து புறப்பட்டு மக்களுக்கு எல்லாம் வல்ல முருக பெருமான் காட்சியளித்தார்.