Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 26 August 2011

முருகனின் அறுபடை வீடுகள்

தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன.

இந்த ஆறு இடங்கள்,



திருப்பரங்குன்றம்,

திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்,


திருவாவினன்குடி,


திருவேரகம்,


குன்றுதோறாடல்,

பழமுதிர்சோலை
 
 
திருப்பரங்குன்றம்



திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று.இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.


திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.



சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அமைவிடம்

தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர். இம்மாமதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.


திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் :

திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

லிங்க வடிவில் மலை :

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.


தவம் செய்த முருகப்பெருமான் :

குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

அவதரித்ததன் நோக்கம் :

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

தெய்வயானை திருமணம் :

தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

சுவாமிமலை
சுவாமிமலை தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். இங்கே உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழிலே 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. இவ்சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே...

திருச்செந்தூர்


பழந் தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்ற இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். இது திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது.
 
 

திருநெல்வேலி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக் கோயில் சென்னையில் இருந்து ஏறத்தாள 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது
 
பழனி முருகன் கோவில் முருகனது அறுபடைவீடுகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.


பொருளடக்கம்

1 கோவில் வரலாறு

2 முருகன் சிலையின் சிறப்பு

3 போகர் வரலாறு

4 கோவில் திருவிழாக்கள்

5 சிறப்பு

6 சர்ச்சைகள்


கோவில் வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த உமையாள் அந்த பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.

முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சில காலங்களுக்கு முன் இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்துவந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார். அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்ததாக பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

கோவில் திருவிழாக்கள்


பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும்.இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்,

தைப்பூசம்

பங்குனி உத்திரம்

சூரசம்ஹாரம்

பழமுதிர்சோலை


பழமுதிர்சோலை ஆறுபடை வீடுகளுள் ஒன்று. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இது இந்தியாவில் மதுரையிலிருந்து பத்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. விஷ்ணு கோயிலான அழகர்கோயில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












Tuesday 8 March 2011

முருகன் புகழ் பாடுவோம்,அவனின் கருணை எண்ணி போற்றுவோம்

Friday 4 March 2011

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 50 ஆம் ஆண்டு பொன் விழா அண்மையில் இங்குள்ள சிட்டி டெல் தங்கும் விடுதியில் மிக விமரிசையாக நடந்தது.

இந்த விழாவை மனித வள அமைச்சருமான மாண்புமிகு டாத்தோ எஸ்.சுப்ரமணியம் அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.இந்த வரலாற்று நிகழ்வில் மாநில பேரவையின் முனோடிகளான சிங்கபூபுருக்கான முன்னால் தூதர் கே.கேசவபாணி,மாநில பேரவையின் முதல் தலைவர் குமரகுரு,முன்னால் தலைவர் டாத்தோ சிதம்பரம்,பி.ராஜந்திரன்,ஆர்.ரமணி இவர்களுடன் டாத்தோ வைதளிங்கம்,முதல் மாநில பேரவையின் செயலாளர் பெரியவர் ராமச்சந்திரன்,தேசிய பேரவை முன்னால் தலைவர்கள் ரசசெல்வம் மற்றும் திரளான பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொன் விளைவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடு கண்டது.இந்த நிகழ்வின் சிறப்பு அங்கமாக 50 ஆம் ஆண்டை நினைவு கொள்ளும் விதத்தில் தபால் தலையும்,மாநில தலைவர்கள் அடங்கிய போஸ்ட் கார்டும் சிறப்பாக வெளியிட்டு மாநில பேரவையின் தலைவர்களுக்கு மரியாதையை செய்யபட்டுது.

இரவு விருந்துடன் கூடிய நிகழ்வாக அமைந்த இந்த பொன் விழாவில் சிறப்பு  அங்கமாக  விருதுகளும்  வழங்கி சேவை செய்தவர்களுக்கு பாரட்ட பட்டனர்.முதல் விருதாக ரத்னா ஸ்ரீ விருது கே.கேசவபணிக்கும்,டாத்தோ சிதம்பரம் அவர்களுக்கும் வழங்க பட்டன .

மற்ற சிறப்பு விருதான இளைஞர் திலகம் விருது மாநில பேரவையின் ஆலோசகர் எம்.பார்த்திபன் அவர்களுக்கும்,முன்னால் மாநில பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களுக்கும்,போக்காக் மச்சாங் இந்து இளைஞர் முன்னால் தலைவர் சுப்ரமணியம் அவர்களுக்கும் வழங்க பட்டது.

மற்ற சிறப்பு விருதான இளைஞர் சேகவர் விருது சமுக பணியாளர் சி.தி.ராமசாமிக்கும்,சமய பணியாளர் ராம,இந்து சபா செவையாளார் முனியாண்டி அவர்களுக்கும் வழங்க பட்டன.


 ரத்னா ஸ்ரீ கே.கேசவபாணி அவர்கள்
 ரத்னா ஸ்ரீ டத்தோ வீ.சிதம்பரம்
 இளைஞர் திலகம் ஆர்.ரமணி
 இளைஞர் திலகம் எம்.பார்த்திபன்
 இளைஞர் சேவகன் ஜகதிசன்
 இளைஞர் சேவகன் சுப்ரமணியம்

 இளைஞர் செகவன் பத்மா



Thursday 3 March 2011

111 குழந்தைகள் பங்கு கொண்ட காதணி விழா

பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை ஏற்பாட்டில் 111 குழந்தைகள் பங்கு பெற்ற காதணி விழா இங்குள்ள புக்கிட் தெங்க மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.
இந்த தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு விழா மாநில இந்து இளைஞர் பேரவையின் தலைவர் அ.சூரியாகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் பத்து  காவான் நாடாளுமன்ற ஒருக்கிணைப்பாளர் அ.மோகன் அவர்கள் நிகழ்வை அதிகரபூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது உரையில் மிகவும் சிறப்பாக இந்த காதணி விழாவை தமது பத்து  காவான் தொகுதியில் நடைபெற அவன செய்த மாநில இந்து இளைஞர் பேரவைக்கு தமது நன்றியை தெரிவித்து கொண்டதுடன்,இளைஞர் அமைப்புகள் இந்திய சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளை பாதுகாத்து அதை இளைய சமூகத்தினர் பின்பற்றும் நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வரலாற்று நிகழ்வில் பினாங்கு மாநில ம இ.காவின் துணை தலைவர் எல்.கிருஷ்ணன்.மாநில ம இ.காவில் இளைஞர் பகுதி தலைவர்.ஜெ.தினகரன்,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் தலைவர் ஆர்.ரமணி.மங்கள நாயகி அம்மன் அலையை தலைவர் சேகரன்,ஜலன் பாரு முனிஸ்வரர் ஆலய துணை தலைவர் வீரையா,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் உதவி தலைவர் ஜகாதிசன் உட்பட காதணி ளவில் குழந்தைகளின் பெற்றோர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

 ஜாவியை சேர்ந்த வின்சன் உஷாராணி குடும்பத்தினர்  தமது  1 முதல்  12 வதுடைய பிள்ளைகளை இலவசமாக நடைபெற்ற இந்த காதணி விழாவில் பங்கு பெற்றதுடன் தமது நன்றியை மாநில பேரவைக்கு தெரிவிப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக மயிலாட்டம்,உருமிமேளம்,பொய்கால் குதிரை மற்றும் கரகாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வு சமுதாயத்தில் ஒரு மற்றதையும் சமூக ஒற்றுமையும் இணைக்கும் அறிய முயற்சியாக இந்த காதணி விழா என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 101  குழைந்தைகள் அடங்கிய ஓளி நாடவை இணையத்தில் கண்ட அமெரிக்க நிறுவனம் இந்த காதணி விழாவில் பங்கு பெற்ற குழந்தைகள் அணியும் தங்க தோடை இலவசமாக வழங்கி அதரவு வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

Wednesday 23 February 2011

மலேசியா வாசுதேவனுக்கு இரங்கல் பா

மலேசியா வாசுதேவன் மலேசியா மண்ணின் பெருமைமிகு கலைஞன்.அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி இடிபோல தாக்கியது.உலக அரங்கில் மலேசியாவில் பெயரை இலவசமாக விளம்பரம் செய்த ஒரு அற்புத கலைஞன்.

தமிழ் நாட்டில் ஒரு வெளிநாட்டு கலைஞன் பெயர் போடமுடியும் என்ற நிருபித்த உன்னத மனிதர் அவர்.அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் ஆற்றிய கலை சேவைகள் நிலைபெறும்,மறந்து விட்டார் மலேசியா வாசுதேவன் என்ற நிலைமாறி அவரின் பாடல்கள் இந்தனுடம் அதிக நிலையில் கேட்கும் மக்களின் நிலை அதிகரிக்கும் என்பது திண்ணம்.

ஒரு ரசிகன் என்ற முறையில் அவரின் இறப்பு ஈடு இணை அற்றது.வாழ்க மலேசியா வாசுதேவன் புகழ் வையம் உள்ள வரை.


வாசு உன் குரலின் மாயம் என்னவோ ...
தமிழின் மறு உருவம் நீ .....
சரஸ்வதியின் சுரத்தை நீ இரவலாக பெற்றாயோ ....
நாங்கள் விரும்பும் அந்த மாயக் குரலை என்று கேட்போம்
உலக கலை குடும்ம்பதின் வாரிசு என்று மலேசியா உன் புகழ்பாடும்...
வாழ்க உன் புகழ் வையம் எல்லாம்.











Sunday 16 January 2011

Muruga Unakku (Murugan songs) by Soolamangalam Sisters

Thiruparangundrathil Nee sirithai (Soolamangala sisters Murugan songs)